SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, February 28, 2017

After Ramjas, protests in Jamia Millia Islamia over BJP leader Shazia Ilmi's 'triple talaq' issue - NewsX

After Ramjas, protests in Jamia Millia Islamia over BJP leader Shazia Ilmi's 'triple talaq' issue - NewsX



വെന്തുരുകി പാലക്കാട് | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017

വെന്തുരുകി പാലക്കാട് | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017



വെന്തുരുകി പാലക്കാട് | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017

വെന്തുരുകി പാലക്കാട് | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017



'ആന്‍ഡ് ദ ഓസ്കാര്‍ ഗോസ് ടു' വുമായി സലീം അഹമ്മദ് | Cinema | Deshabhimani | Wednesday Mar 1, 2017

'ആന്‍ഡ് ദ ഓസ്കാര്‍ ഗോസ് ടു' വുമായി സലീം അഹമ്മദ് | Cinema | Deshabhimani | Wednesday Mar 1, 2017



കെട്ടുകഥകള്‍ കെട്ടടങ്ങുമ്പോള്‍ | Articles | Deshabhimani | Wednesday Mar 1, 2017

കെട്ടുകഥകള്‍ കെട്ടടങ്ങുമ്പോള്‍ | Articles | Deshabhimani | Wednesday Mar 1, 2017



യുപിയില്‍ പ്രമുഖര്‍ക്ക് ചങ്കിടിപ്പ് | Articles | Deshabhimani | Wednesday Mar 1, 2017

യുപിയില്‍ പ്രമുഖര്‍ക്ക് ചങ്കിടിപ്പ് | Articles | Deshabhimani | Wednesday Mar 1, 2017



സമ്പദ്ഘടന സംരക്ഷിക്കാനുള്ള പോരാട്ടം | Editorial | Deshabhimani | Wednesday Mar 1, 2017

സമ്പദ്ഘടന സംരക്ഷിക്കാനുള്ള പോരാട്ടം | Editorial | Deshabhimani | Wednesday Mar 1, 2017



വിലക്കയറ്റത്തിന് കടിഞ്ഞാണ്‍ : ജയ25, മട്ട 24; പഞ്ചസാര 22 | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017

വിലക്കയറ്റത്തിന് കടിഞ്ഞാണ്‍ : ജയ25, മട്ട 24; പഞ്ചസാര 22 | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017



தலித், பழங்குடி மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு ஈஷா மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு தூத்துக்குடி, பிப்.28- ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள தலித், பழங்குடியினரின் நிலத்தைஅவர்களுக்கே பிரித்து வழங்க வலியுறுத்திதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மார்ச் 10ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழுக் கூட்டம் பிப்.26,27 தேதிகளில் தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், பெ.சண்முகம், கு.ஜக்கையன், சு.சிங்காரவேலு உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலித், பழங்குடி மக்களின் நிலங்களைசட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஈஷாமையத்தை எதிர்த்து கோயம்புத்தூரில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், அம் மையத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி வருகை தந்ததை கண்டித்தும், தலித்,பழங்குடி மக்களின் நிலத்தை அவர்களுக்கே பிரித்து வழங்கிட வலியுறுத்தியும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடிய இடதுசாரி மற்றும் தலித் இயக்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் மார்ச் 10 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென கூட்டம் முடிவு செய்தது. பஞ்சமி நில மீட்புபஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்கிட மார்ச் 27 அன்று பஞ்சமிநில மீட்பு போராட்டங்கள் நடத்துவது.ஆணவக் கொலைகளுக்கு எதிராக நடைபயணம்ஆணவக் கொலைகளை தடுத்திடு, தனிச்சட்டம் இயற்றிடு என வலியுறுத்தி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட பள்ளிபாளையத்தில் இருந்து சென்னை வரை ஜூன் மாதத்தில் நடைபயணம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.துணைப்பொதுச் செயலாளர்கள்:கூட்டத்தில் ப.பாரதிஅண்ணா, டி.செல்லக்கண்ணு, சின்னைபாண்டியன் ஆகியோர் மாநில துணை பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே எஸ்.கே.மகேந்திரன், யு.கே.சிவஞானம் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். தீர்மானங்கள்:கேரளத்தின் வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றதோடு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜார்ஜ் ஜோசப் நினைவு தினமான மார்ச் 5 அன்று அரசு மரியாதை செய்திட வேண்டும். அவரது பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.தருமபுரி இளவரசன் வழக்கு குறித்த சி.பி.சி.ஐ.டி பிரிவின் முடிவை ஏற்க இயலாது. எனவே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள் மராமத்து பணிகளுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சிக் கடைகளில் ஆட்டிறைச்சிக் கடைஏலத்தொகை ரூ.1000 என இருக்கும் போது மாட்டிறைச்சிக் கடைகளுக்கான ஏலத்தொகை ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டதை மாநிலக்குழு கண்டிக்கிறது. அத்துடன் இந்த பாரபட்சமான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பட்டியல் இனத்தவர்களுக்கு குரு பட்டம் வழங்காமல் சாதி பாகுபாடு காட்டும் சிவகங்கை கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து மார்ச் 14 அன்று சிவகங்கையில் பொது விசாரணை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு26ஆம் தேதி மாலையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், ‘தீண்டாமை ஒழிப்பின் இலக்கும் பயணமும்’ என்ற தலைப்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் ‘தீட்டும் புனிதமும்’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் சாம்பசிவன் அனைவருக்கும் நன்றி கூறினார். http://epaper.theekkathir.org/

നരോദപാട്യയുടെ ഓര്‍മ്മയില്‍നിന്ന് ചോര പൊടിയുമ്പോള്‍ സംഘപരിവാരം അതിക്രമങ്ങള്‍ ആവര്‍ത്തിക്കുന്നു | From the Net | Deshabhimani | Wednesday Mar 1, 2017

നരോദപാട്യയുടെ ഓര്‍മ്മയില്‍നിന്ന് ചോര പൊടിയുമ്പോള്‍ സംഘപരിവാരം അതിക്രമങ്ങള്‍ ആവര്‍ത്തിക്കുന്നു | From the Net | Deshabhimani | Wednesday Mar 1, 2017



നേതാക്കളുടെ സ്വത്തില്‍ വലിയ വര്‍ധനയെന്ന് റിപ്പോര്‍ട്ട് | National | Deshabhimani | Wednesday Mar 1, 2017

നേതാക്കളുടെ സ്വത്തില്‍ വലിയ വര്‍ധനയെന്ന് റിപ്പോര്‍ട്ട് | National | Deshabhimani | Wednesday Mar 1, 2017



ഗുര്‍മെഹറിന്റെ പ്രതിഷേധം : ക്യാമ്പസുകള്‍ ഏറ്റെടുക്കുന്നു | National | Deshabhimani | Wednesday Mar 1, 2017

ഗുര്‍മെഹറിന്റെ പ്രതിഷേധം : ക്യാമ്പസുകള്‍ ഏറ്റെടുക്കുന്നു | National | Deshabhimani | Wednesday Mar 1, 2017



ഉല്‍സവപറമ്പില്‍ വൃദ്ധയുടെ മൃതദേഹം നായകള്‍ കടിച്ചുകീറി | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017

ഉല്‍സവപറമ്പില്‍ വൃദ്ധയുടെ മൃതദേഹം നായകള്‍ കടിച്ചുകീറി | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017



നടിയെ ആക്രമിച്ച കേസ് : കോടതി സംഭവങ്ങളില്‍ ഐജി റിപ്പോര്‍ട്ട് തേടി | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017

നടിയെ ആക്രമിച്ച കേസ് : കോടതി സംഭവങ്ങളില്‍ ഐജി റിപ്പോര്‍ട്ട് തേടി | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017



തമിഴ്‌നാട്ടില്‍ ഇന്നുമുതല്‍ പെപ്സിയും കൊക്കക്കോളയും വില്‍ക്കില്ലെന്ന് വ്യാപാരികള്‍ | National | Deshabhimani | Wednesday Mar 1, 2017

തമിഴ്‌നാട്ടില്‍ ഇന്നുമുതല്‍ പെപ്സിയും കൊക്കക്കോളയും വില്‍ക്കില്ലെന്ന് വ്യാപാരികള്‍ | National | Deshabhimani | Wednesday Mar 1, 2017



വിസ നിയന്ത്രണത്തില്‍ മാറ്റമില്ല, രാജ്യരക്ഷ പ്രധാനം: ഡൊണാള്‍ഡ് ട്രംപ് | World | Deshabhimani | Wednesday Mar 1, 2017

വിസ നിയന്ത്രണത്തില്‍ മാറ്റമില്ല, രാജ്യരക്ഷ പ്രധാനം: ഡൊണാള്‍ഡ് ട്രംപ് | World | Deshabhimani | Wednesday Mar 1, 2017



വിലക്കയറ്റത്തിന് കാരണം അരിവിഹിതം നല്‍കാത്ത കേന്ദ്രം: മുഖ്യമന്ത്രി | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017

വിലക്കയറ്റത്തിന് കാരണം അരിവിഹിതം നല്‍കാത്ത കേന്ദ്രം: മുഖ്യമന്ത്രി | Kerala | Deshabhimani | Wednesday Mar 1, 2017



அம்பேத்கர் மையத்தில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் வெற்றி கோயம்புத்தூர், பிப்.28- கோவையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் மூன்று பேர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கமாக செயல்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூரில் பார்வையற்ற/பார்வை குன்றியவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தேசிய பார்வையற்றோர் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. அவர்களில் எட்டு பேர் ஏற்கனவே அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர்.அண்மையில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவில், வாணி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அம்பேத்கர் மைய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாயின. அதில் மொத்தமுள்ள 300 மதிப்பெண்களுக்கு 219 மதிப்பெண் களைப் பெற்று பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்புப் பிரிவில் 37வது இடத்தை மதிவாணன் பிடித்திருக்கிறார். இந்த சிறப்புப் பிரிவினருக்கு 50க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு அரசுப்பணி கிடைப்பது உறுதியாகியிருக்கிறது. பாரத ரிசர்வ் வங்கியில் உதவியாளர் நியமனத் தேர்வு நடந்தது. அதில் அம்பேத்கர் மையத்தில் பயின்ற ரம்யா தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் நியமனமாகப் போகிறவர்களில் ஒரு இடம் மட்டுமே பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த நிலையில், அந்த ஒரு இடத்தையும் அம்பேத்கர் மைய மாணவியே பெற்றிருக்கிறார்.தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர்கே.சாமுவேல்ராஜ், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.சாமிநாதன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் மற்றும் இணையத்தின் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனாதையாக நிற்கின்றன. 140 ஆண்டுகளில் இல்லாதவறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, தீவிரமடையும் நகர்ப்புற, கிராமப்புற வேலையின்மை, 100 நாள் வேலைத்திட்டம் திட்டமிட்டு சீரழிக்கப்படும் கொடுமை, ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, நீட் தேர்வு உட்பட உயர்கல்வித்துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொலைகள். கொடுமைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானகொடூரத் தாக்குதல்கள், வன்கொடுமைகள், பழங்குடிமக்களின் நிலத்தை அபகரிப்பது போன்ற இந்த பிரச்சனைகளால் முற்றுகை யிடப்படுகிறது தமிழக மக்களின் வாழ்க்கை.

கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்த சிறையும் ஊழல்வாதிகள் சந்திக்கும் சிறையும் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ************************************************உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது தியாகத்தால் எழுதப்பட்டது. கருத்தாலும் கரத்தாலும் பணியாற்றக்கூடிய உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி புதியஉலகத்தை, ஏற்றத் தாழ்வு இல்லாத சம நீதியும்சமூக நீதியும் கொண்ட புதிய சமூகத்தை சமைப்பதற்காக கம்யூனிஸ்ட்டுகள் அயர்வின்றி போராடி வருகிறார்கள்.இந்த நீண்ட நெடிய பயணத்தில் அவர்கள்எதிர்கொண்ட சித்ரவதைகள், அடக்குமுறைகள், துப்பாக்கிச்சூடுகள், தூக்குமேடைகள் போன்றவை எண்ணிலடங்கா, எழுத்திலடங்கா,தமிழகத்திலும் கடந்த 70 ஆண்டுகளில் விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்றுவரை கம்யூனிஸ்ட்டுகள் சந்திக்காத சிறைச்சாலைகள் கிடையாது. சென்னை ராஜதானியாக இருந்தபோதே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள். பி.சுந்தரய்யா, பி.சீனிவாசராவ், ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி, ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியன், ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத், வி.பி.சிந்தன், கே.ரமணி, ஜி.கோவிந்தராஜன், கே.முத்தையா, கே.பி.ஜானகியம்மாள், பாப்பாஉமாநாத், எம்.கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திக்காதசிறையே இல்லை. இன்றும் நம்மோடு வாழ்ந்துவழிகாட்டி வருகிற என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, கோ.வீரய்யன் போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள்.பொன்மலை துப்பாக்கிச்சூட்டில் மாண்டதியாகிகள், வெண்மணி தியாகிகள், சின்னியம்பாளையம் தியாகிகள், சேலம் சிறை தியாகிகள், சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டகளப்பால் குப்பு, மதுரை தியாகிகள் தூக்குமேடை பாலு, மாரி-மணவாளன், பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ஐ,சுப்பையா, தஞ்சை தியாகிகள் இரணியன், சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் என தியாக தீபங்களால் வழிநடத்தப்பட்டது செங்கொடி இயக்கம். வீராங்கனை லீலாவதி,இடுவாய் ரத்தினசாமி, நன்னிலம் நாவலன்,பள்ளிப்பாளையம் வேலுச்சாமி என மக்களுக்கான இயக்கத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து செங்கொடி இயக்கத்திற்கு உயிர்தந்த வீரர்கள், தீரர்கள் பட்டியல் நீண்டதுநெடியது. தனித்த வார்ப்பு கம்யூனிஸ்ட்டுகள் தனித்த வார்ப்புகள்என்பார் ஜோசப் ஸ்டாலின். பொதுவாழ்க்கையில் தூய்மையையும் நேர்மையையும் உயர்த்திப் பிடித்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் பொதுவுடைமைத் தலைவர்கள் எத்தனையோ பேர்,கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மாநிலமுதல்வர்களாக பணியாற்றிய இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, தசரத்தேவ், அச்சுதமேனன், இ.கே.நாயனார், வி.அச்சுதானந்தன் தற்போது முதல்வர்களாக உள்ள மாணிக் சர்க்கார், பினராயிவிஜயன் ஆகியோர் மீது அரசியல் எதிரிகள் கூட சுட்டுவிரல் நீட்டி குற்றம்சாட்டியது இல்லை. ஊழல்கறை படியாத தூய வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இதேபோல் அமைச்சர்களாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய கம்யூனிஸ்ட்டுகளும் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை நாடறியும்.கம்யூனிஸ்ட்டுகளை தனது பிறவி எதிரியாகக் கருதி எதிர்த்து வந்த மறைந்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி கூட கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.தமிழகத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்களாக இருந்தனர். ஆனால் இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன?தில்லியில் தமிழ்நாட்டுக்காரர்கள் என்றாலே கேலியாக சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி,வி.என்.சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவருக்கான தண்டனை வழங்கப்படவில்லை. மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக-வுக்கும் தகுதியில்லை ஊழலுக்கு எதிராக பேசும் அருகதை பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இல்லை. சர்க்காரியா கமிஷன் விசாரித்த ஊழல்துவங்கி தற்போது விசாரணை நடைபெற்றுவரும் அலைவரிசை கற்றை ஊழல் வரை திமுகவினருக்கும் நீண்ட நெடிய ஊழல் பட்டியல் உள்ளது.இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், தெலுங்குதேசம், பிஜூஜனதாதளம் என ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாத மாநில முதலாளித்துவ கட்சிகளே இல்லை. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு ஊழல்என்பது முதலாளித்துவ அமைப்பு முறையின்ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது.புகழ்பெற்ற அறிஞர் நோம்சாம்ஸ்கி வார்த்தைகளில் கூறுவதானால் குரோனி கேப்பிடலிசம் எனப்படும் சலுகை சார் முதலாளித்துவம் கார்ப்பரேட் வர்த்தகம் மேலும் மேலும்பணம் சேர்க்கத் தூண்டுகிறது. அந்தப் பணபலம் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. ஊழல் பணத்தை பயன்படுத்தி முதலாளிகள் ஆளும் அரசாங்கங்களை தங்களது செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டுவர முயல்கின்றனர். நமது நாட்டில் நடைபெற்ற அலைக்கற்றை ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல், பங்குச்சந்தை ஊழல், பொதுத்துறை பங்குகள் விற்பனை ஊழல் போன்றவையெல்லாம் சலுகை சார் முதலாளித்துவத்தின் அதாவது அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கூட்டு கொள்ளையின் விளைவுகளே ஆகும்.தமிழ்நாட்டில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்காக இருந்தாலும் சரி, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட், தாதுமணல்கொள்ளை போன்றவையும் ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள், பெரும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டு மோசடியே ஆகும்.1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் தான்தற்போது இறுதிதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களும் ஊழல் மலிந்தவையாகவே இருந்தன. தன்னை யாரும் எளிதில் நெருங்கமுடியாத வகையில் அவர் தன்னை மாற்றிக்கொண்டார். ஒரு பக்தக் கூட்டம் உருவானது. எவ்வளவு முறைகேடு செய்தாலும் மக்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கக் கூடிய சில சலுகைகளை அளித்தால் அடுத்தடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றுஅதிமுக கருதியது. திமுகவின் கருத்தோட்டமும் இதுவே. ஊழல் செய்து அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சேர்த்த பணம் மக்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம்.ஆனால், இந்தப் பணம் கறுப்புப்பணமாக எங்கேயோ சென்று பதுங்கிவிடுகிறது, கோடானுகோடி மக்கள் அன்றாட பிழைப்புக்கே பரிதவிக்கும் நிலையில் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊழலில் சம்பந்தப்பட்ட பணம் அரசின் கஜானாவிற்கு வந்திருந்தால்லட்சக்கணக்கான பள்ளிகளை துவக்கியிருக்கலாம். அரசு மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம். கிராமப்புற மக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்திருக்கலாம். ரேசன் கடைகளில் பொருட்கள் கட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்திருக்கலாம். ஆனால் மடைமாற்றம் செய்யப்படும் இந்தப் பணம் மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதிக்கப்பட்டது என்பதால்தான் மார்க்சிஸ்ட்டுகள் ஊழலை எதிர்க்கிறார்கள். அன்று நடந்த போராட்டங்கள் காங்கிரசை எதிர்த்து திமுக எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் செய்த அந்தக் காலத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், விலைவாசி உயர்விற்கு எதிராகவும் பல்வேறுபோராட்டக்களங்களை கண்டுள்ளது. அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் மக்களுக்காகப் போராடி சிறைசென்றுள்ளனர். அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை எதிர்த்துநடைபெற்ற போராட்டத்தில் ஆறு மாததண்டனை பெற்று அண்ணா சைதாப்பேட்டைகிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனக்கு சிறையில் ஏற்பட்ட அனுபவங்களை கைதி எண் 6342 என்ற தலைப்பில் காஞ்சி ஏட்டில் கட்டுரையாக எழுதி அது ஒருநூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.சிறையில் தனக்கு சிறப்புவசதி எதையும் அண்ணா கோரவில்லை. ஒரு நாள் அவரைக் காண அவரது சின்னம்மா சிறைக்கு வருகிறார்.இங்கு குளிப்பதற்கு வெந்நீர் தரப்படுகிறதா என்று சிறைக் காவலரை கேட்கிறார். அதற்கு அந்த சிறைக் காவலர் சாமர்த்தியமாக இங்கு எப்போதும் வெந்நீர் தான் குளிப்பதற்கு என்றுகூறுகிறார். இதைக் கேட்ட அவர் திருப்தியுடன் சென்றார் என்று அண்ணா எழுதியிருக்கிறார்.அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட திமுக-விலிருந்து கணக்குகேட்டு அதிமுக பிரிந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலாபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள எண் 9234. இவை வெறும் எண் மாற்றம் மட்டுமல்ல. தமிழக அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆண்டு வந்த திமுகவும் அதிமுகவும் ஊழல்கறைபடிந்ததாக மாற்றியுள்ளதன் அடையாளம் இது. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் அறம்சார்ந்த அரசியலின் வீழ்ச்சியையே காட்டுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது சொத்துக்களையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறது சசிகலா தலைமையிலான கூட்டம்.சிறைக்கு செல்லும்போது கூட தனது உறவினரை கட்சிக்கு பொறுப்பாக்கிவிட்டுச் செல்கிறார் சசிகலா. தாம் சிறையில் இருந்தாலும் தன்னுடைய பினாமி ஆட்சிதான் நடக்கவேண்டுமென்று நினைத்துத்தான் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்ததும் அவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வுசெய்ததும்ஆகும். ஊழலுக்காக தண்டிக்கப்பட்டாலும்வெளியில் தங்களின் ஊழல் தடையின்றி நடைபெறவேண்டும் என்று நினைக்கும் சுயநல அரசியல்தான் இது.தன்னுடைய பதவிக்கு ஆபத்து வராதவரை ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்யவில்லை. இப்போது கூட அவர் ஊழலைப் பற்றிஒன்றும் பேசுவதில்லை. சேகர் ரெட்டியின் கூட்டாளியான அவர் ஊழலைப் பற்றி எப்படி பேசமுடியும்.எதிர்க்கட்சியான திமுக எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றவெறியில் சட்டமன்றத்தையே சண்டைக்களமாக மாற்றுகிறது. ஊழலைப் பற்றி அவர்களாலும் பேச முடியாது. அவர்களையும்ஊழல் வழக்குகள் விரட்டிக்கொண்டுதானிருக்கின்றன. மக்களுக்காக, மக்களை நோக்கி மத்தியில் ஆட்சிஅதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று ஆலாய்ப்பறக்கிறது பாஜக. தன்னுடைய ஆளான ஆளுநரையும் அதற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.இந்தப் பின்னணியில் தமிழக மக்களின்வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனாதையாகநிற்கின்றன. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, தீவிரமடையும் நகர்ப்புற, கிராமப்புற வேலையின்மை, 100 நாள் வேலைத்திட்டம் திட்டமிட்டு சீரழிக்கப்படும் கொடுமை, ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, நீட் தேர்வு உட்பட உயர்கல்வித்துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொலைகள். கொடுமைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குஎதிரான கொடூரத் தாக்குதல்கள், வன்கொடுமைகள், பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிப்பது போன்ற இந்த பிரச்சனைகளால் முற்றுகை யிடப்படுகிறது தமிழக மக்களின் வாழ்க்கை.கழகங்களின் சுயநல அரசியலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பாஜகவை காலூன்றஅனுமதிக்க முடியாது என முழங்கி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்வைத்து மார்ச் 2 -ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மாபெரும்பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டுமானால் வளர்ச்சியின் பாதையில் நடத்திச் செல்ல வேண்டுமானால் இடதுசாரிக்கட்சிகள் முன்வைக்கும் மாற்றுப்பாதை ஒன்றே வழி என்பதை இந்த பிரச்சார இயக்கம் ஓங்கி உரைக்கும். http://epaper.theekkathir.org/

அரசியல் பேசினால் தேசவிரோதியா? ***********************சென்னை, பிப். 28 - முற்போக்கு அரசியல் பேசினால், ஆட்சியாளர்களின் கொள்கைகளை விமர்சித்தால், உரிமைகளுக்காக போராடினால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதற்கு மாணவர் சங்க விழாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்திய மாணவர் சங்கத் தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் ‘அலை கடல் அடங் குமோ?’ - எனும் தலைப்பில் அரசியல், கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்ச்சி திங்களன்று (பிப்.27) சைதாப்பேட்டையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் பேசியது வருமாறு:சென்னை பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிக் கின்றனர். புதிய பாடப்பிரிவுகளை தொடங்க முடியாததாலும் மாணவர்கள் அல்லல்படுகின்றனர்.மாணவர்களுக்கு வழங்க 4 மாதங்களுக்கு முன்பே பள்ளி மைதானங்களில் சைக்கிள்கள் இறக்கப்பட்டன. அவற்றை வழங்காததால் வெயிலில் பாழாகிக் கொண்டிருக்கின்றன. 11 கல்லூரிகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப் படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் குடோன்களிலும், மரத்தடியிலும், திருமண மண்ட பங்களிலும் பயிலும் நிலை உள்ளது. இவற்றிற்கெதிராக மாணவர் சங்கம் போராடி வருகிறது.ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டை காக்கும் போராட் டத்திலும் மாணவர் சங்கம் ஈடுபடுகிறது. இப்போராட் டத்தில் பங்கேற்றதற்காக சங் கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் கையை போலீசார் உடைத்துள்ளனர். மதுரையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 15 பேரின் பெயரை குறிப்பிட்டு அடித்தனர். இப்படி தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத் தலைவர்கள் தாக்கப் பட்டனர். மாணவர்களின் போராட்டத்தை போர்க்களமாக மாற்றிய காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் தீ.சந்துரு தலைமை தாங்கினார். தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் பேரா.சுந்தரவள்ளி, மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் க.நிருபன், நிர்வாகிகள் ரா.ஜான்சிராணி, ரா.பாரதி, மாதர் சங்க பகுதி தலைவர் ம.சித்ரகலா, வாலிபர் சங்க பகுதி தலைவர் ஸ்ரீமதி, முன்னாள் வாலிபர் சங்கத் தலைவர்கள் கே.மணிகண்டன், சாலா உள்ளிட்டோர் பேசினர். http://epaper.theekkathir.org/

தாமிரபரணி ஆற்று நீரை கொள்ளையடிக்க முயலும் அமெரிக்க குளிர்பான நிறுவனமான கோக்கை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெல்லையில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்.

நாட்டின் பொருளாதாரத்திலும் நமது அன்றாட வாழ்விலும் தங்கம் வகிக்கும் பங்கு நாம் அறிந்த ஒன்றே.தங்கத்தின் மீது நமக்குள்ள பிரியம், பேராசையால் நமது பெயர்களைத் தங்கராஜ், தங்கமுத்து, தங்கமணி, தங்கப்பாண்டி என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.தங்கச்சிலை, தங்கத்தேர், தங்கக் கோபுரம், பொற்கோயில் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைகிறோம்.தங்கப்பதக்கம் வென்றவர்கள் என்கிறோம். ஐம்பது ஆண்டுகள் ஆனவுடன் பொன்விழா ஆண்டு என்கிறோம். ஏன்? இறைவனையும் கூட பொன்னன் மேனியனே எனப் போற்றிப் பாடுகிறோம். இப்படி எத்தனையோ விதம்!ஆனால், தங்கத்தைப் பற்றி தோழர் லெனின் சொன்னது இது:‘தங்கத்தின் மீதான பேராசையால் இதுவரை நடந்த யுத்தங்களும், உருண்டு ஓடிய தலைகளும், சிந்திய ரத்தமும் கொஞ்சநஞ்சமல்ல.எதிர்காலத்தில் ஒரு நாள் இந்த உலகம் முழுமையும் கம்யூனிச ஆட்சி வந்தே தீரும்.அப்போது - நமது முன்னோர்களின் பேராசையையும், மூடத்தனத்தையும் வருங்கால சந்ததியர்க்கு நினைவூட்டும் வகையில் உலகின் பல முக்கிய நகரங்களில் தங்கத்தால் கக்கூஸ்கள் கட்டி வைக்கப்படும்’’.

டாக்டர் ஷிவாகோ மீது விமர்சனம் ஏன்? - கே.ஏ.தேவராஜன் கலையும் இலக்கியமும் யாருக்காக?மக்களுக்காகவா? அல்லது பொழுதுபோக்குவதற்காகவா? இந்த விவாதம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக - இன்னும் நீடிக்கவே செய்கிறது.உலக அளவில் பிரெஞ்சு இலக்கியம் பெயர் போனது. கலை கலைக்காகவே பொழுது போக்குவதற்காகத்தான் என்ற அணியினர் அங்கு அதிகம். அந்த அணியின் புகழ்பெற்ற எழுத்தாளர் தீயோபில் கன்ட்டியர், ‘ராபேல் வரைந்த குழு ஓவியத்தையும், ஓர் அழகான பிரெஞ்சு யுவதியை நிர்வாணமாகப் பார்க்கும் பாக்கியமோ எனக்குக் கிடைக்குமானால் பிரெஞ்சுக்காரன் என்ற பிரஜா உரிமையையும் இழக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.கிட்டத்தட்ட இவர்களும், இவர்களைப் போன்றவர்களும் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்கிற பூக்களைப் போன்ற உமர்கய்யாம் கொற்கை வாதிகள்தாம்.ஆனால், சோஷலிச எண்ணம் கொண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்ற உன்னத லட்சியத்துடன் உயர்ந்த இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள்.லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செக்காவ், நிகோலாய் ஆல்டிவாவ்ஸ்கி, புஷ்கின் போன்ற புகழ்பெற்ற இலக்கிய ஜாம்பவான்கள் அவதரித்த அதே சோவியத் மண்ணில் தான் போரிஸ் பாஸ்டர் நாக் என்ற எழுத்தாளரும் பிறந்தார். அவர் எழுதிய ‘டாக்டர் ஷிவா கோ’ என்ற நாவல் ஏன் கடுமையான விமர்சனத்திற்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாயிற்று?கதையின்படி ஷிவாகோ ஓர் இளம் டாக்டர்.ஆம். பயிற்சி பெற்ற டாக்டர். ஆனால் இயல்பாகவே கவித்துவ மனம் கொண்டவர். நல்ல இயற்கை ரசிகர். நீலவானில் நிலவின் பவனியைப் பார்த்து மகிழ்பவர்; வண்ண வண்ண குளிர் மலர்களின் அழகில் மூழ்குபவர்; தென்றலின் மென்மையை வருடுபவர்; அழகு மங்கையரை ஆராதிப்பவர். இதுதான் அந்த இளம் டாக்டர் ஷிவா கோவின் இயல்புகள். ஆனால், தொழில் முறையில் பயிற்சி முடித்த ஒரு டாக்டர்.போர்க் களத்தில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கும், யுத்தத்தால் படுகாயமடைந்த மக்களுக்கும் மருத்துவ சேவை அவசியத் தேவை என்று வருகிறபோது இளம் டாக்டர்கள் யுத்த முகாம்களுக்கு அரசால் அனுப்பப்படுகிறார்கள். அவர்களில் டாக்டர் ஷிவாகோவும் ஒருவர். ஆனால் அவருக்கு போக விருப்பம் இல்லை. கட்டாயத்தின் பேரில் வேண்டா வெறுப்பாகச் செல்கிறார்.மற்ற இளம் டாக்டர்கள் எல்லோரும் யுத்தக் களத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் துடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இருக்கும் போது, ஷிவா கோ மட்டும் முகாமில் தனது அறையில் தனியாக அமர்ந்து கவிதை எழுதும் பணியைச் செய்வார். அழகு ரசனையிலும் கற்பனையிலும் ஆழ்ந்திருப்பார் இந்த டாக்டர். இதுதான் இவர்மீதான விமர்சனம்.சோசலிச ஆட்சியில் கம்யூனிஸ்ட்டுகளின் பொருத்தமற்ற வேலைப் பிரிவினைகளின் திணிப்பு, கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் சர்வாதிகாரம், தனி மனித சுதந்திரம் மறுப்பு இருந்ததாகச் சொல்வதுதான் அந்த நாவலின் சாராம்சம். இந்த நாவலுக்கு சோவியத் யூனியனில் கடுமையான விமர்சனம். எதிர்ப்பு. போரிஸ் பாஸ்டர் நாக் தனிமைப்பட்டார். அவ்வளவுதான் சிஐஏ-யின் மூக்கு வியர்த்தது. நாவலும் கடத்தப்பட்டது. நபரும் கடத்தப்பட்டார். உலகின் பலமொழிகளிலும் ‘டாக்டர் ஷிவாகோ’ அச்சாகி வெளிவந்தது. ஹாலிவுட் எம்.ஜி.எம். நிறுவனம் சினிமா எடுத்து உலகமெங்கும் ரிலீஸ் செய்தது. போரிஸ் பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசும் அளிக்கப்பட்டது.கலையும் இலக்கியமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல என்பது மெய்பிக்கப்பட்டது. ‘டாக்டர் ஷிவாகோ’ எனும் நாவல் மீதான சோவியத் மக்களின் எதிர்ப்பும் விமர்சனமும் சரியானது. நியாயமானது என உலகம் ஒப்புக்கொண்டது. http://epaper.theekkathir.org/

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை, பிப். 28- வங்கிகளின் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்செவ்வாயன்று (பிப். 28) நடைபெற்றது. அதையொட்டி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ் தலைமை தாங்கினார்.மக்களுக்கு எதிராக வங்கி நடைமுறைகளை மாற்றாதே ஊழியர்களுக்கு எதிரானதொழிலாளர் சட்ட மாற்றத்தை அமல்படுத் ததே, நிரந்தர வேலைகளை வெளியில் கொடுப்பதை நிறுத்து என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பணிசுமைக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட செலவை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப் பட்டன.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டன. ஒரு சில வங்கிகளில் உயர் அதிகாரிகள் மட்டும்வேலைக்கு வந்திருந்தனர். கிளை மேலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் முற்றிலுமாக நின்றன. சென்னையில் இயங்கும்காசோலை பரிவர்த் தனை நிலையங்களில் சுமார் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் காசோலைகள் தேங்கியதாக போராட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்அகில இந்திய செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சாதாரண மக்களின் சேமிப்பு மூலமாகபெரும் வைப்புத் தொகையை பெரும்நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் கடனாகஅளிக்கின்றனர். ஆனால் இந்த பெரும் நிறுவனங்களும், முதலாளிகளும் கடன்களை திருப்பி செலுத்துவதில்லை. அரசாங்கமோ வராக்கடன்களை சலுகையாக அறிவித்துரத்து செய்கிறது. மேலும் வராக்கடன்கணக்குகளை அடிமாட்டு விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருகின்றன. இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.110 லட்சம் கோடி சேமிப்பு புழக்கத்தில்இருக்கும் வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. அவற்றை மேலும்அரசுகண்காணிப்புடன் நடத்த வேண்டும். ஒப்பந்தஊழியர்களை நியமிப்பதை கைவிடவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கிஊழியர் சம்மேளன பொது செயலாளர் இ.அருணாசலம்,வங்கி ஊழியர் சங்க தலைவர்டி.தமிழரசு, மாநில செயலாளர் சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர் மு.சண்முகம்,அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுசெயலாளர் சீனிவாசன், அகில இந்தியவங்கி அதிகாரிகள் சம்மேளன பொது செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பேசினர். ஏராளமான அதிகாரிகளும்,ஊழியர்களும் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/

பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்த வழிகள்... கணினிக்கதிர் எம்.கண்ணன், என்.ராஜேந்திரன் **************************** இணையத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய இணையப் பயன்பாட்டிற்கு பின்புலத்தில் நாம் அறியாத பல கோடி டாலர் பெருமானமுள்ள வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் இணையக் கணக்குகள் ஒவ்வொன்றின் செயல்பாடும் கண்காணிக்கப்பட்டு வர்த்தக வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சிறு துளி பெரு வெள்ளமாய் மாறுவதுபோல, நம்முடைய தகவல்களும், நாம் தொடர்பில் வைத்திருக்கும் நபர்களின் தகவல்களும், அவர்கள் தொடர்பில் இருக்கும் நபர்களின் தகவல்கள் எனப் பல்கிப் பெருகும் மிகப்பெரிய சமூக வலைப்பின்னலின் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள் ஆகிய பலவும் தரவுகளாகப் பதியப்பட்டு, தேவைக்கேற்ப ஆய்வுகளாக தரம் பிரிக்கப்பட்டு நுகர்வோரின் தேவை அறியும் வர்த்தக செயல்பாடுகளுக்காக விற்கப்படுகின்றன.இத்தகைய செயல்பாடுகளைத்தான் முன்னணி இணையதளங்கள் பலவும் காலம்காலமாக செய்துவருகின்றன. ஆனால், அதே நேரத்தில், இத்தகவல்களைக் கொண்டு ஏமாற்றும் வழிகளைக் கையாள, ஏமாற்றுபவர்களுக்கு இந்தத் தொழில் நுட்பம் மிகுந்த அளவில் உதவி வருகிறது. இச்செயல்பாடு ஹேக்கிங், பிஷ்ஷிங் எனப் பல வடிவங்களிலும், பாஸ்வேர்ட் இன்றி பயன்படுத்தப்படும் திறந்தவெளி ஒய்ஃபி நெட்வொர்க்குகள் ((open wi-fi networks) மூலமாகவும்தான் பெரும்பாலான ஏமாற்று வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இணைய உளவு ஹேக்கிங் செயல்பாட்டை விட பிஷ்ஷிங்தான் எளிதில் பலரையும் சிக்க வைக்கக் கூடியதாக இருக்கிறது. இது நமக்குப் பழக்கப்பட்ட மின் அஞ்சல், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது இணைய இணைப்பு முகவரி போல் நம்மிடம் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த இணைய லிங்க்கை கிளிக் செய்திட ஆவலைத் தூண்டச் செய்கிறது. கிளிக் செய்தால், இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். அந்தத் தளம் பார்ப்பதற்கு உண்மையான, நம்பிக்கை தரக் கூடிய நிறுவனத் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால், அது போலியானது மட்டுமல்லாமல், நம்முடைய தகவல்களைத் திரட்டும் பல்வேறு வழிமுறைகளையும் கொண்டிருக்கும். நாம் பயன்படுத்தும் வங்கிப் பெயர், கிளை விபரம், யூசர் நேம், பாஸ்வேர்ட் உள்ளிட்ட பல விபரங்களையும் கேட்கும். நம்பிப் பதிந்தால், அடுத்த நிமிடமே உங்கள் கணக்கில் எந்தப் பணமும் இருக்காது. வேறு சில இணைய இணைப்புகளில் மேற்கண்ட விபரங்களு­க்கு பதிலாக சிறு உளவு நிரல் மென்பொருள்கள் வழங்கப்படுகின்றன. இணைப்பை கிளிக் செய்த நொடியில் இம்மென்பொருள் செயல்பட்டு உங்கள் கணினியில் அல்லது பிரவுசரில் ஒட்டிக்கொண்டு உங்கள் இணையச் செயல்பாட்டைக் கண்காணித்துத் தகவல் அனுப்பத் தொடங்கிவிடும்.2015 ஆம் ஆண்டில், இந்தியாவில், இதுபோன்ற திருட்டு முயற்சிகள் 11,592 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது ஆண்டு தோறும் 20ரூ அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.எனவே, இந்த வகைத் திருடர்களிடமிருந்து தப்பிக்க, மின் அஞ்சலில் அல்லது சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் வரும் இணைய இணைப்புகளை உடனே கிளிக் செய்து பார்க்காமல், அந்த முகவரியை, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் டைப் செய்து பார்க்கவும். டெக்ஸ்ட் கோப்புகள் வந்தால் அவற்றில் கொடுக்கப்படும் எந்த இணைய முகவரி இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். வங்கி மற்றும் வர்த்தக இணையதளங்கள் அனைத்தும் ‘hவவயீள’ என்ற பாதுகாக்கப்பட்ட இணையத்திற்கான சான்றிதழைப் பெற்றிருக்கின்றன. எனவே, நீங்கள் தட்டச்சு செய்த இணைய முகவரிக்கு முன்பாக இந்த செக்யூரிட்டி சான்றிதழும் பூட்டுப் போன்ற ஐகானும் காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்துங்கள்.ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களை பதியும்போது நேரடியாக அந்நிறுவன இணையதளங்களிலிருந்து பதிவிறக்கி பயன்படுத்தவும். கட்டணமின்றி மென்பொருளைத் தரும் பிற மூன்றாம் நபர் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்குவது வைரஸ், ஹேக்கிங் செயல்பாடுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடிய போலி மென்பொருள்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை அப்டேட்டாக வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.பாப் அப் திரைச் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டாம்; அதே போல, அந்தக் கட்டங்களில், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பதிய வேண்டாம்.பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், எட்ஜ், ஓபேரா போன்ற அனைத்து பிரௌசர்களிலும் பிரைவேட் பிரௌசிங் அல்லது இன் காக்னிடோ (Private Browsing or Incognito)) என்ற வசதி உள்ளது, அதைப் பயன்படுத்துங்கள். கூகுள், பிங், யாகூ போன்ற தேடியந்திரங்களில் உங்கள் தேடல் தகவல்கள் சேமிக்கப்படுவதைத் தவிர்க்க, அவற்றிற்குப் பதிலாக டக்டக் கோ (னுரஉமனுரஉமழுடி) மற்றும் ஸ்டார்ட் பேஜ் ( (DuckDuckGo)) போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தலாம். திறந்த நிலை இணையப் பயன்பாடு இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் எனப் பல இடங்களிலும் இலவச ஒய்ஃபி வசதி வழங்கப்படுகிறது. இத்தகைய திறந்த நிலை இணையப் பயன்பாட்டின் மூலமாகவும் பல திருட்டுகள் நிகழ்த்தப்படுகின்றன.இத்தகைய இடங்களில் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட் போன்களின் தகவல்களை இதே நெர்வொர்க்கில் இணையும் மற்றொரு கணினி மூலமாக ஹேக் செய்யும் வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய இலவச நெட்வொர்க்குகளில் வங்கி மற்றும் வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது அவசியமாகும். உங்கள் லேப்டாப், டேப்ளட், ஸ்மார்ட் போன் சாதனங்களை அவற்றிற்கு உரிய பாதுகாப்பு செயல்பாடுகள் சரியாக இருந்தால் மட்டுமே இத்தகைய நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் டேட்டாக்களை என்கிரிப்ட் செய்து வைத்துக் கொள்வதும், பாஸ்வேர்டு, பேட்டன் லாக் , டாக்குமெண்ட் லாக் போன்ற பாதுகாப்புகளை உருவாக்கிக் கொள்வதும் முக்கியமானதாகும். http://epaper.theekkathir.org/

பயங்கரவாத வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைப் பொய்யாகப் பிணைத்திடல் ********************************* பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்துப் பொய்யாகப் பிணைக்கின்ற நீசத்தனமானதும்அதிர்ச்சியளிக்கக்கூடியதுமான விவரங்கள் தில்லி உயர்நீதிமன்றம் தில்லியில்2005 நடைபெற்ற தொடர் வெடிகுண்டுத்தாக்குதல் தொடர்பாகப் பிணைக்கப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்திருப்பதிலிருந்து மீண்டும்ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. முகமது உசேன் பஸ்லி மற்றும் முகமதுரபிக் ஷா என்கிற இளைஞர்கள் அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தாரிக் அகமது தார் என்கிற இளைஞர் வெடிகுண்டுத் தாக்குதலில் எந்தத் தொடர்பும்இல்லை என்ற போதிலும் அவர் ஒருபயங்கரவாத அமைப்பில் உறுப்பினராகஇருந்தார் என்பதற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்றம் கண்டனம் முஸ்லிம்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக காவல்துறையினரால் வகுப்புவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் விளைவாக,தில்லியில் 67 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியஉண்மைக் கயவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் விடுபட்டுவிட்டார்கள். இதுஇவ்வழக்கில் பொய்யாகப் புனையப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.முகமது உசேன் பஸ்லி மற்றும் முகமதுரபிக் ஷா ஆகிய இருவரும் காவல்துறையினரின் கடும் சித்ரவதைகளுக்கும், காவலடைப்புக்கும் ஆளாகிவிட்டு, சுதந்திரக்காற்றை அனுபவிப்பதற்கு 12 ஆண்டுகாலமாகி இருக்கிறது. காவல்துறையினரின் கடும் சித்ரவதைகள், பொய்யாகப் புனையப்பட்ட சாட்சியங்கள், அப்பாவி இளைஞர்களைச் சிக்க வைக்க வேண்டும்என்பதற்காக உண்மைகளை மூடி மறைத்திடும் இழிநடவடிக்கைகள் அனைத்தும், அநீதியான இத்தகைய நீதிமன்ற விசாரணைக்குப்பின்னே உள்ளன.உதாரணமாக, காஷ்மீர் பல்கலைக்கழக மாணவரான 22 வயது ரபிக் ஷா, தில்லியில் இந்தத் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், ஸ்ரீநகரில் உள்ள தன் கல்லூரிவகுப்பறையில் பாடங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த உண்மையை காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் பதிவாளரால் எழுதப்பட்ட கடிதம் உறுதி செய்கிறது. எனினும் இந்த உண்மையை புலனாய்வினை மேற்கொண்ட காவல்துறையினர் வேண்டுமென்றே மூடிமறைத்துவிட்டனர்.அப்பாவி மக்கள் மீது அட்டூழியங்கள்புரிந்து பொய்யாக வழக்கைப்புனைந்திட்ட தில்லி காவல்துறையின் தனிப் பிரிவினை நீதிமன்றத்தின் தீர்ப்புரை இடித்துரைத்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை கடந்த பதினைந்து ஆண்டு காலமாக, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் ஒன்றன்பின்ஒன்றாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவற்றில் பொய்யாகப் பிணைக்கப்பட்ட,முஸ்லிம்கள் விடுதலையாகி வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம், எப்படி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, அந்த சம்பவத்துடன் பொய்யாகப் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை நீதித்துறையின் தீர்ப்புகள் தோலுரித்துக் காட்டியுள்ளன. காவல்துறை புலனாய்வுஏஜன்சிகள், குறிப்பாக தனிப்பிரிவு செல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்குழுக்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதையும், அதிலும் குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கின்றன.2012இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட (னளைஉhயசபநன) அல்லது விடுதலை செய்யப்பட்ட (யஉளூரவைவநன) 22 முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை எடுத்துக்கொண்டது. இவ்வாறு வழக்குகளில் பிணைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் முகமது அமின். தில்லியைச் சேர்ந்த இவர் 18 வயதில் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் தன்மீது புனையப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, விடுதலையானார். மற்றொருவர் மக்பூல் ஷா. ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் 14ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுதலையானார். மறுவாழ்வுக்கு இழப்பீடு ட இவ்வாறு இதுபோன்று வழக்குகளில் பொய்யாகப் புனையப்பட்டு விடுதலையான அப்பாவிகளின் மறுவாழ்வுக்காக உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். ட சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்திட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். டவழக்குகளின் முடிவில் அப்பாவிகள் மீது பொய்யாக வழக்குகள்புனையப்பட்டதாக நீதிமன்றங்கள்கண்டுபிடித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்திடும் சமயத்தில், அவ்வாறு அப்பாவிகள் மீது பொய்யாகவழக்குகளைப் புனைந்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும். ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தில் (Unlawful Activities Prohibition Act) உள்ள கொடுமையான ஷரத்து நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இவ்வாறு இந்தப்பிரச்சனையை மத்திய அரசிடமும், குடியரசுத்தலைவரிடமும் எடுத்துச்சென்ற பின்னரும்கூட, இப்பிரச்சனையை சரிசெய்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தில்லி உயர்நீதிமன்றம் காவல்துறையினரின் புலனாய்வினை கடுமையாக இடித்துரைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது, இதில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். இந்த வழக்கில் நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டிருக்கின்ற காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.அரசாங்கம் பாதிப்புக்கு உள்ளாகி விடுதலையாகியுள்ள இரு முஸ்லிம் இளைஞர்களுக்கும் உரிய இழப்பீடு அளித்து அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.(பிப்ரவரி 22,2017) தமிழில்: ச.வீரமணி http://epaper.theekkathir.org/

இதுதான் உணவு பாதுகாப்பா? ************************** 2007-ஆம் ஆண்டு, வெளிச்சந்தையில் உணவுதானியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து, ஏழை- நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ‘சிறப்பு விநியோகத் திட்டம்’ ஒன்றை அப்போது ஆட்சியிலிருந்த திமுகஅரசு கொண்டுவந்தது. கிலோ அரிசி 2 ரூபாய்க்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தநிலையில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை கிலோ ரூ. 30 விலையிலும், பாமாயிலை கிலோ ரூ. 25 விலையிலும் ரேசன் மூலம் அரசு விநியோகித்தது. இத்திட்டம் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், மக்களிடமிருந்த வரவேற்பு - எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, அடுத்து வந்த அதிமுக அரசும் இதனைத் தொடர்ந்தது. தமிழகத்தில் 1 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரம் குடும்ப அட்டைகள் இருந்தநிலையில், பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்தனர். இந்நிலையில்தான் ஒரு கட்டத்தில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. அடுத்ததாக, ஒருமாதம் பாமாயில் வாங்கினால், அடுத்த மாதம் அது கிடைக்காது என்றாக்கப்பட்டது. துவரம் பருப்புகூட முந்திச் சென்றால்தான் உண்டு என்றானது. கடைசியில் இப்பொருட்களின் விநியோகம் கடந்த ஜனவரி மாதம் முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு நடப்பாண்டில் பொது விநியோகத் திட்டத்திற்கென்று ரூ. 5101 கோடியை ஒதுக்கீடு செய்தது. இது சிறப்பு விநியோகத் திட்டத்திற்கும் சேர்த்துத்தான். ஆனால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சிறப்பு விநியோகத் திட்டம்நிறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக, முதலுக்கே மோசம் வந்த கதையாக, ரேசனில், 20 கிலோவுக்குப் பதில் இனி 10 கிலோ அரிசிதான் வழங்கப்படும்; எஞ்சிய 10 கிலோ அரிசிக்குப் பதில் 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், அதிமுக அரசு கடந்த நவம்பர் மாதம் கையெழுத்திட்ட பாதிப்பின் ஆரம்பமே இது என்று கூறப்படுகிறது.தமிழகத்திற்கு 2.96 லட்சம் டன் அரிசியை மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது அதில் 1 லட்சம் டன்னைக் குறைத்ததும், மானிய அரிசியின் விலையை ரூ.8.30-லிருந்து ரூ. 22 ரூபாய் 54 காசுகளாக மத்தியஅரசு உயர்த்தியதும் தமிழகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படித்தான் மானியவெட்டு மூலம், ரேசனில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை குறைத்தார்கள். இப்போது அரிசிக்கு வந்திருக்கிறார்கள். எரிவாயு சிலிண்டருக்குப் போல, உணவுக்கான மானியத்தையும் பணமாக வழங்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ‘உணவுக் கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்- மக்களை வெளிச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கு பழக்க வேண்டும்’ என்று ஏற்கெனவே தங்களின் திட்டத்தையும் அவர்கள் அறிவித்து விட்டார்கள். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உளுந்து, துவரம் பருப்பு, எண்ணெய் நிறுத்தம், அரிசி குறைப்புக்கான காரணத்தை மக்கள்முன் சொல்லத் தயாரில்லை. அந்தளவிற்கு மக்களை வதைக்கும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் இணைந்து நடைபோடுகின்றன. http://epaper.theekkathir.org/

மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கிடுக! டாஸ்மாக் ஊழியர் மாநில மாநாடு கோரிக்கை ****************************** மதுரை, பிப்.28- டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு)வின் 4-வது மாநில மாநாடு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பிப்ரவரி 27 திங்களன்று பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியை துவக்கி வைத்தும் பொதுக்கூட்டத்திலும் சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான் பேசியதாவது: படித்து பட்டம் பெற்று, அனைத்து கல்வித்தகுதிகளும் கொண்ட 26 ஆயிரம் பணியாளர்கள் டாஸ்மாக்கில் பணிபுரிகிறார்கள். தற்போது அவர்களது வாழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மூடிய கடைகளில் வேலை செய்தோருக்கு அவர்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப்பணியை வழங்க வேண்டும்.தற்போது பணியிலுள்ள ஊழியர்களின் நிலைமை கொத்தடிமைகளைக் போன்று உள்ளது. இவர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதர சலுகைகளும் வழங்க வேண்டும்.தமிழக அரசுஇக்கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், தமிழகம் முழுவதிலுமுள்ள டாஸ்மாக்கடைகளை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். கல்வி, மின்சாரம், நெடுஞ்சாலை ஆகியவைகளை தனியாருக்கு கொடுத்து விட்டு, மதுபானக் கடைகளை மட்டும் அரசு நடத்துகிறது. இந்நடவடிக்கை சாராய மாபியாக்களை பாதுகாக்கவே. டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட அரசு வழங்கவில்லை. எனவே அரசு அவர்களுக்கு காலமுறை ஊதியம்,படிப்பிற்கு தகுந்த வேலை. ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறினார்.அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் தோழர்வி.பால்பாண்டி நினைவுத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் கே.பழனிவேலு தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஜி.சதீஸ், வேல்முருகன்,பொன்பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழு செயலாளர்வி.செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,மாநிலச் செயலாளர் இரா.தெய்வராஜ்,சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வம், துணைத் தலைவர் எஸ்.ஜெயபிரகாசன், ஜெ.ஆல்தொரை, மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சு.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சம்மேளன தலைவர் கே.பழனிவேலு பேசுகையில், டாஸ்மாக் நிறுவனம் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனம்.தற்போது இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.மூடப்படும் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு நிரந்தரமான அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். ஜி.சுகுமாறன் பேசியதாவது: டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ பாதுகாப்பை இதுவரைஅரசு வழங்கவில்லை. அரசுஊழியராக இருந்தால் அவர்களுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது. அதனடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் தினசரி பல அதிகாரிகள், ரவுடிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு கப்பம் கட்டவேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து ஊழியர்களை பாதுகாக்க சிஐடியு தொடர்ச்சியாக போராடி வருகிறது. குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. மத்திய,மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற முன்வருவது இல்லை. தொழிலாளிகளுக்கு தொகுப்பூதியம்,மதிப்பூதியம் வழக்கப்படுவது இல்லை. தற்போது பணியில் உள்ளவர்களுக்கு பென்சன் இல்லை. இப்படி மக்களும் விரோத செயல்களில் ஈடுபடும் கட்சிகளை மக்கள் தூக்கியெறிந்து, மக்களுக்காக போராடும் இடதுசாரி இயக்கங்களுடன் தொழிலாளர்களும், மக்களும் இணைய வேண்டும் என்றார்.மதுரை மாவட்டத் தலைவர் டி.சிவக்குமார் நன்றி கூறினர். http://epaper.theekkathir.org/

T. PERUMALSAMY

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக! மக்கள் நலக் கூட்டியக்கம் ஆவேச ஆர்ப்பாட்டம் ********************************* புதுக்கோட்டை, பிப்.28- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக் கூட்டு இயக்கத் தலைவர்கள் முழக்கமிட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் வகையில் கர் நாடகாவைச் சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் கம்பெனிக்கு கடந்த 15-ஆம் தேதி மத்திய அரசுஅனுமதி அளித்து, அன்று முதல் திட்டத்தைக் கைவிடக்கோரி நெடுவாசல் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பல வடிவங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டம் நாளுக்கு நாள் உச்சகட்டம்அடைந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமையன்று ஆலங்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கவிவர்மன்(சிபிஎம்), த.செங்கோடன்(சிபிஐ), ப.சசிகலைவேந்தன், செ.ம.விடுதலைக்கனல்(விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.போராட்டத்தில் சிபிஎம் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எம்.முத்துராமலிங்கம், எம்.உடையப்பன், எஸ்.சங்கர்,எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ராமையன், கே.சண்முகம், சிபிஐ சார்பில் டாக்டர் வே.துரைமாணிக்கம், சிவஞானம், மு.மாதவன், கே.ஆர்.தர்மராஜன், எம்.என்.ராமச்சந்திரன், ராஜேந்திரன், ஏ.எல்.ராசு, விசிக சார்பில் கலைமுரசு, சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அது மாநில அளவிலான போராட்டமாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெடுவாசலில் தலைவர்கள் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர் சென்று போராடும் மக்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். தலைவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.நெடுவாசலில் தமிழகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் பெருமளவில் குவிந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். http://epaper.theekkathir.org/

Monday, February 27, 2017

CPI (M) Polit Bureau Communiqué *********STATE ASSEMBLY ELECTIONS *********** THE CPI(M) along with other Left parties are contesting the assembly elections in Uttar Pradesh, Punjab, Uttarakhand and Manipur. In Uttar Pradesh, the CPI(M) has fielded candidates in 26 constituencies; in Uttarakhand, it has fielded candidates in six constituencies; in Punjab, it has fielded in 12 constituencies; and in Manipur, it is contesting two seats. The CPI(M) along with Left parties are contesting elections with the primary objective of projecting the Left policy alternative before the people. The CPI(M) is appealing to the people to strengthen the Left representation in the respective assemblies, so that people’s grievances that remain unheard today in these assemblies can be raised by the Left representatives. Through this, the Left parties, particularly the CPI(M), aims to build pressure on the state governments to address these issues and provide the much-needed relief to the people. In those constituencies where the CPI(M) and the Left candidates are not in the fray, the CPIM) has called for the defeat of the BJP and the candidates of the communal combination. This is essential in order to ensure that those responsible for the pincer attack of sharpening communal polarisation and imposing unprecedented economic burdens on the people, against which there have been protests, are defeated. The imposition of unheard of burdens on the people due to the demonetisation is also being opposed in this campaign.

ഉത്തരവാദിത്തം മറക്കുന്ന ഭരണകൂടം

ഉത്തരവാദിത്തം മറക്കുന്ന ഭരണകൂടം



ഇന്ത്യന്‍ സാന്നിധ്യമില്ലാതെ ഓസ്കര്‍ | World | Deshabhimani | Tuesday Feb 28, 2017

ഇന്ത്യന്‍ സാന്നിധ്യമില്ലാതെ ഓസ്കര്‍ | World | Deshabhimani | Tuesday Feb 28, 2017



മംഗളൂരുവിലെ പ്രഹരം ബിജെപിക്ക് പാഠമാകണം | Editorial | Deshabhimani | Tuesday Feb 28, 2017

മംഗളൂരുവിലെ പ്രഹരം ബിജെപിക്ക് പാഠമാകണം | Editorial | Deshabhimani | Tuesday Feb 28, 2017



മികച്ചത് ലാ ലാ ലാന്‍ഡല്ല,അത് മൂണ്‍ലൈറ്റ്; ഓസ്കാറിലും വന്‍ പിഴവ് | World | Deshabhimani | Monday Feb 27, 2017

മികച്ചത് ലാ ലാ ലാന്‍ഡല്ല,അത് മൂണ്‍ലൈറ്റ്; ഓസ്കാറിലും വന്‍ പിഴവ് | World | Deshabhimani | Monday Feb 27, 2017



ട്രംപിന് താക്കീതായി ഓസ്‌കര്‍വേദി | World | Deshabhimani | Tuesday Feb 28, 2017

ട്രംപിന് താക്കീതായി ഓസ്‌കര്‍വേദി | World | Deshabhimani | Tuesday Feb 28, 2017



ഗുജറാത്ത് വംശഹത്യക്ക് ഇന്ന് 15 വയസ്സ് | National | Deshabhimani | Tuesday Feb 28, 2017

ഗുജറാത്ത് വംശഹത്യക്ക് ഇന്ന് 15 വയസ്സ് | National | Deshabhimani | Tuesday Feb 28, 2017



എബിവിപി അക്രമത്തിനിരയായ ഡല്‍ഹി സര്‍വ്വകലാശാല അധ്യാപകന്‍ ഗുരുതരാവസ്ഥയില്‍; വൃക്കയ്ക്കും നട്ടെല്ലിനും പരിക്ക് | Special | Deshabhimani | Tuesday Feb 28, 2017

എബിവിപി അക്രമത്തിനിരയായ ഡല്‍ഹി സര്‍വ്വകലാശാല അധ്യാപകന്‍ ഗുരുതരാവസ്ഥയില്‍; വൃക്കയ്ക്കും നട്ടെല്ലിനും പരിക്ക് | Special | Deshabhimani | Tuesday Feb 28, 2017



പി സി ജോര്‍ജ് എംഎല്‍എ ക്യാന്റീന്‍ ജീവനക്കാരനെ മര്‍ദിച്ചു | Kerala | Deshabhimani | Tuesday Feb 28, 2017

പി സി ജോര്‍ജ് എംഎല്‍എ ക്യാന്റീന്‍ ജീവനക്കാരനെ മര്‍ദിച്ചു | Kerala | Deshabhimani | Tuesday Feb 28, 2017



പി സി ജോര്‍ജ് എംഎല്‍എ ക്യാന്റീന്‍ ജീവനക്കാരനെ മര്‍ദിച്ചു | Kerala | Deshabhimani | Tuesday Feb 28, 2017

പി സി ജോര്‍ജ് എംഎല്‍എ ക്യാന്റീന്‍ ജീവനക്കാരനെ മര്‍ദിച്ചു | Kerala | Deshabhimani | Tuesday Feb 28, 2017



ഗുണ്ടാ മാഫിയക്കെതിരെ ശക്തമായ നടപടി; അനധികൃതമായി ശിക്ഷാ ഇളവ് നല്‍കില്ല : മുഖ്യമന്ത്രി | Kerala | Deshabhimani | Tuesday Feb 28, 2017

ഗുണ്ടാ മാഫിയക്കെതിരെ ശക്തമായ നടപടി; അനധികൃതമായി ശിക്ഷാ ഇളവ് നല്‍കില്ല : മുഖ്യമന്ത്രി | Kerala | Deshabhimani | Tuesday Feb 28, 2017



சிந்தனையோடு பாதை காட்டியவர்... :: http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=201052 via @theekkathir

Theekkathir E-Paper



மணப்பாடு படகு சவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி திருநெல்வேலி, பாளையங்கோட்டை கேலக்ஸி மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் ரஞ்சனி, சிவகார்த்திகா ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். மாவட்ட ஆட்சியர்கள் மு.கருணாகரன் (திருநெல்வேலி), எம்.ரவிக்குமார் (தூத்துக்குடி), காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மக்கள் மன்றம்***************** ஜக்கியிடம் சிக்கிய சிவன் ********************* “படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்/ நடமாடும் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா/ நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்/ படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.” - இது திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல். கோயிலில் உயிரற்ற படமாக- சிலையாக இருக்கும் கடவுள்களுக்கு படையலிடுவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. நடமாடும்உயிருள்ள கோயில்களாக இருக்கும் மனிதர்களுக்கு படையலிட்டு, அவர்களின் பசியை ஆற்றினால், அது இறைவனையும் சென்றடையும் என்பதுதான் இதன் பொருள். இதேவகைப்பட்டதுதான், “ உள்ளம் பெருங்கோயில்ஊனுடம்பு ஆலயம்/ வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்/ தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்/ கள்ளப் புலன் ஐந்தும் காளாமணிவிளக்கே...” என்ற பாடலும். ரத்தமும் சதையுமான மனிதர்களின் உடம்புதான் இறைவனின் கோபுரம் போன்ற ஆலயம்.அந்த உடம்பிற்குள் இருக்கும் உள்ளம்தான் இறைவன் வாசம் செய்யும் கருவறை. வாய்தான் கோபுரத்திற்குள் செல்லும் வாசல்.மொத்தமாக சொன்னால் உயிர்தான் சிவன். எனவே, ஒருவன் தனது ஐம்புலன்களையும் பேணிக் காப்பதன் மூலம், உயிராகிய சிவனையும் பாதுகாப்பவனாக- வணங்குபவனாக ஆகிறான் என்று திருமூலர் சொல்கிறார்.ஆனால், அந்தச் சிவனின் பெயரால், மதயானை போல வனத்தையே ஒருவர் சூறையாடிக் கொண்டிருக்கிறார்; ஒரு நாட்டின் பிரதமரே அதற்கு உடந்தையாக இருக்கிறார்; கேட்டால் இதுதான் பக்தி; இதுதான் ஆன்மிகம் என்கிறார்கள். தென்னாடுடைய சிவன், இப்போது ஜக்கி போன்றவர்களிடம் சிக்கி நிற்கிறான். இவர்களிடமிருந்து சிவனையும் சீவனை(உயிர்களை)யும் மீட்பதல்லால் வேறுபணி சிவ தொண்டர்களுக்கு இருக்க முடியாது. - மு. உமாபதி, மயிலாப்பூர் இவர்களும் உடந்தை ரேசன் கடைகளில் உளுந்து, பருப்பு, பாமாயில் நிறுத்தம் என்ற செய்தியைத் தீக்கதிரில் படித்தேன். மோடி அரசு கொண்டுவந்த உணவுப் பாதுகாப்பு(!) சட்டத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் இருந்த அதிமுக அரசு என்றைக்கு கையெழுத்துப் போட்டதோ, அப்போதே எதிர்பார்த்த விஷயம்தான் இது. தற்போது, சிறப்பு விநியோகத் திட்டப் பொருட்கள் மட்டுமன்றி, அரிசி, சர்க்கரைக்கும் ஆபத்து வந்து விட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை வாய் திறக்கவில்லை. ரேசன் முறைகேடு தொடர்பாக எஸ்எம்எஸ்-ஸில் புகார் தெரிவிக்கலாம் என்றுஅதிகாரிகளை விட்டு அறிவிக்கச் செய்கிறார்கள். ரேசன் பொருட்களை திடீரென சொல்லாமல் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் நிறுத்தி விட்டது முறைகேடு வகைக்குள் வராதா? என்று தெரியவில்லை. ஒருவேளை உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டதுதான்இதற்குக் காரணம் என்றால், அதை வெளிப்படையாக சொல்லி, அதையாவது தமிழக அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்குகண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.அதிமுக-வை உடைக்க பாஜக சதி செய்வதாக அதிமுக-வின் கீழ்மட்டத் தலைவர்கள் பேசினார்களே தவிர, சசிகலா உள்ளிட்டோர் வாய்திறக்கவில்லை. இப்போது ரேசன் விஷயத்திலும் அதேபோல அதிமுக அரசு நடந்து கொள்ளுமானால், மத்திய அரசின் மோசடிக்கு அதிமுக அரசு உடந்தையாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். - ஆண்டார். ஸ்ரீனிவாசன், சென்னிமலை நான் கண்ட சோவியத் தீக்கதிரில் வரும் யுகப்புரட்சி நினைவுகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. சோவியத் ஒன்றியம் பிளவுபடுமுன் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய சோவியத் பாதுகாப்பு உடன்படிக்கையின் 20-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் இந்தியா சார்பாக பங்குகொண்டு உரையாற்றினேன். அந்நிகழ்விற்கு முன் சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.நள்ளிரவில் பணி முடிந்து ஆடிப்பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பும் மகளிர்கூட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காந்தியடிகள் சுதந்திரத்திற்கான அளவுகோலாக இதனைத்தானே வைத்திருந்தார். ஒரு நெசவாலைக்குச் சென்றேன். பஞ்சாலையும் நெசவாலையும் இணைந்த அந்த ஆலையின் தலைமை நிர்வாகி ஒரு பெண்ணாகஇருப்பதைக் கண்டு வியந்தேன்.அவர் கடந்து வந்த பாதை மேலும் அதிக வியப்பிற்கு உள்ளாக்கிற்று. சாதாரண தொழி லாளியாகப் பணியைத் தொடங்கிய அவர்,மாலை வகுப்புகள் மூலம் அத்துறையிலேயே பட்டயம், இளம்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள், இறுதியாக முனைவர் பட்டமும் பெற்றவர். நம் நாட்டில் தொழிலாளர் சாகும்வரை தொழிலாளிதான். மிகப் பிரம்மாண்டமான அவ்வாலையைத் திறம்படஅவர் நிர்வகிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவரது தலைமையை ஏற்று மற்றவர் பணி புரிந்தனர். நிர்வாகி-தொழிலாளர் இடையே இருந்த சகோதர உறவு நமது ஆலைகளில் காண இயலாது. பெண் என்பது ஒரு தடையாக இல்லை.துருக்குமேனிஸ்தானில் தம் பாரம்பரிய விளையாட்டுகள், இசைக் கருவிகள் பற்றிய ஆய்வுகள் நடைபெறும் நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். சில நூற்றாண்டுகட்கு முன் இருந்த இசைக் கருவியைக் கண்டறிந்து அதனை மீட்டுப் பயன்படுத்தும் முயற்சியைக் கண்டேன். அதே போல நாட்டுப் பாடல்கள், நடனம் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும் முற்பட்டதைக் கண்டு மகிழ்ந்தேன். பள்ளிக் குழந்தைகள் மீட்கப்பட்ட நடனத்தை ஆடிக் காண்பித்தனர். நம் நாட்டைப் போல் பல மொழிகள் பேசும் நாடாக இருந்த போதிலும் சோவியத் ஒன்றியத்தில் வட்டார மொழிகள் ருசிய மொழிக்கிணையாக வளர்க்கப்பட்டன. அங்கு வட்டார மொழியிலேயே முனைவர் பட்டம் வரை கற்க முடியும். - ச.சீ. இராஜகோபாலன், சென்னை Courtesy: http://epaper.theekkathir.org/

தேவை தனிக்கவனம் பழங்குடிகளின் கல்வி உரிமை காக்கப்படுமா? என்ற ஜோ. ராஜ்மோகனின் கட்டுரையை (பிப். 20) தீக்கதிரில் படித்தேன். உண்டு - உறைவிட பள்ளிகளின் அவலநிலை, ஆசிரியர்கள் வாராமை, மாணவர்களின் கல்வி தரம் குறைந்திருப்பது, கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது போன்ற அனைத்தும் சரியே! ஆனால், இத்தகைய மோசமான நிலைமைக்கு காரணம், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை “கல்வித்துறையின் கீழ் கொண்டு வராததுதான்” என்று கட்டுரையாளர் கூறியிருக்கிறார். பழங்குடியினருக்கென்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வரும் காலம் இது. பழங்குடியின மக்கள் மீது சிறப்பு கவனம், சிறப்பு நிதி ஒதுக்கீடு, சிறப்புத் திட்டம் போன்றவை மேலும் பல்லாண்டு காலத்திற்கு தொடர வேண்டியுள்ளது. அந்த வகையில், உண்டு - உறைவிடப்பள்ளிகள் அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் கொண்டதாக மேம்படுத்தப்படுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவது, கண்காணிப்பது, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த சிறப்புக் கவனம் போன்றவற்றில் ஆதி-திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். பொது கல்வித்துறையின் கீழ் இப்பள்ளிகளை மாற்றுவது மேலும் புறக்கணிக்கப்படுவதற்கும், உண்டு - உறைவிட பள்ளிகளுக்கென்று இருக்கும் நிதி ஒதுக்கீடுகள் இல்லாமல் போவதற்குமான நிலைமைதான் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். - பெ. சண்முகம், துணைத் தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் Courtesy: http://epaper.theekkathir.org/

கல்பனா தத் - பி.சி.ஜோஷி பி.டி.ரணதிவே - விமலா ரணதிவே

லட்சியத் தம்பதியினர் லால் சலாம்! - கே.ஏ.தேவராஜன் ********************************** இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளையான தாஷ்கண்டு கிளையின் மொத்த உறுப்பினர்கள் ஏழுபேரில் இருவர் பெண்கள். அவர்களில் ஒருவர் ஈவ்லின்; அமெரிக்கப் பெண்; தோழர் எம்.என்.ராயின் துணைவியார்.எம்.என்.ராயுடன் மெக்சிகோ சென்று அங்கு முதலில் மெக்சிகோ சோஷலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி பின்னர் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியிலும் பணியாற்றியவர்.1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற 3வது கம்யூனிஸ்ட் அகிலத்தின் 2வது காங்கிரசில் எம்.என்.ராயுடன் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர்.மற்றொருவர் ரோசா; ரஷ்யப்பெண். தோழர் அபானி முகர்ஜியின் துணைவியார். அன்றைய சோவியத் யூனியனின் தாஷ்கண்டிற்கும், இந்தியாவின் பெஷாவாருக்கும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) இடையே போக்குவரத்து கடிதத் தொடர்புகளுக்கு முகர்ஜியுடன் இணைந்து பணியாற்றியவர்.இவர்கள் இருவரும் அன்றைக்கு இந்தியர் அல்லாத இந்தியப் பெண் கம்யூனிஸ்டுகள்.1917 ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்தியத் தம்பதியினரில் சிலர், காரல் மார்க்ஸ் - ஜென்னி, லெனின் - குரூப்ஸ்காயா, ஜூலியத் பூசிக் - அகுஸ்தினா பூசிக் முதலான லட்சியத் தம்பதியினரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அவர்களையே முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.அத்தகையோர் பட்டியல் நீளும், நீளும், நீண்டுகொண்டே போகும்.எடுத்துக்காட்டாக சிலர்கல்பனா - ஜோஷி: ஒன்றிணைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி. காந்திஜி - ஜோஷி கடிதங்கள் பிரபலமானவை.2வது உலகப்போரின் போது கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டைத் தேசத்துரோகம் என்று பழிசுமத்தி இந்திய ஆளும் வர்க்கம் கம்யூனிஸ்டுகளின் மீது வன்முறையை ஏவிவிட்டபோது ‘‘ நீங்கள் ஒரு கம்பை எடுத்தால் எங்களுடைய பத்துக் கம்புகள் பதிலடி கொடுக்கும் என எச்சரித்து எதிரிகளைப் பின்வாங்கச் செய்தவர். கல்பனா: இவர் ஒரு வங்கப் பெண்மணி. மாணவர் இயக்கப் போராளி; ஆயுதம் ஏந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி வீராங்கனை.ஆங்கிலேயர்கள் சிட்டகாங்கில் (தற்போது வங்கதேசம்) அமைத்திருந்த ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு கொள்ளை வழக்கில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட பதின்மூவரில் ஒருவர். அந்நாட்களில் கம்யூனிஸ்ட் குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தால் கல்பனா என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுவது வழக்கம்.கல்பனாவும் ஜோஷியும் திருமணம் செய்து கொண்டு லட்சியத் தம்பதிகளாயினர்.விமலா - ரணதிவே: கட்சியில் பி.டி.ஆர் என அழைக்கப்படும் பி.டி.ரணதிவே கட்சியின் பொதுச்செயலாளர். இவர் காலத்தில் கட்சி தடை செய்யப்பட்டது. தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு கட்சிப் பணியாற்றியவர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிஐடியு ஸ்தாபகத் தலைவர்.விமலா: 1946 பம்பாய் கப்பற்படை புரட்சியில் போராளிகளுக்குத் துணைபுரிந்தவர். மாதர் இயக்கப் போராளி.ரணதிவேயும் விமலாவும் திருமணம் செய்து கொண்டு லட்சியத் தம்பதிகளாயினர்.லைலா - சுந்தரய்யா: கட்சியில் பி.எஸ். என்று அழைக்கப்படும் பி.சுந்தரய்யா தெலுங்கானாப் போராட்டத் தளபதி. நிலப்பங்கீடு போராட்டத்தில் நிலப்பிரபு படைகளும், நிஜாம் மன்னர் படைகளும் சேர்ந்து தாக்கியபோது அதற்கு எதிராகத் துப்பாக்கிகளை கையாளுவதில் சிறந்த பயிற்சி பெற்றவர். பயிற்சி அளித்தவர். கட்சி இரண்டான பின்பு சிபிஎம்மின் முதல் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஹைதராபாத்தில் பி.எஸ்.பவன் என்று பெரிய நினைவாலயமும், பி.எஸ்.பூங்காவும் உயரமான பி.எஸ்.வெண்கலச் சிலையும் இன்றும் கம்பீரகமாகக் காட்சியளிக்கின்றன.லைலா: இவர் இஸ்லாமியப் பெண்மணி. சுந்தரய்யாவின் துணைவியார்.ஆயுதம் தாங்கிய போராளிகளாகச் செயல்பட்டதால் குழந்தை பிறப்பும், வளர்ப்பும் அதற்குத் தடையாகிவிடக்கூடாது என்பதற்காக அந்தக் காலத்திலேயே குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டவர்கள்.இவை அனைத்துமே நுனிப்புல் தகவல்களே. தோண்டினால் தோண்டத் தோண்ட இவர்களும், விழுதுகளும், விருப்பங்களும் நிறை நிறையவே தெரியவரும்.கம்யூனிச இயக்கத்திற்கு வாழ்க்கப்பட்ட இத்தகைய தியாகிகளின் நினைவுகள் என்றென்றும் நம் நெஞ்சங்களில் நீங்காது நிலைக்கட்டும்! லால் சலாம்!! http://epaper.theekkathir.org/

ஊழலில் ஊறிய மட்டைகளா? ஜொலிக்கும் மாணிக்கங்களா? எது வேண்டும் உனக்கு... எழுக தமிழகமே! ***************************************சிபிஎம்பிரச்சாரம்மார்ச்2-6 சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதே சிறையில் அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனும் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இவர்கள் நால்வரும் குற்றவாளிகள். 1991-96 வரை ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களுக்காக இவர்களுக்கு தண்டனை. நான்காண்டுகள் சிறை. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம். ஆனால் இவர்கள் அதிகமாக சொத்து சேர்த்ததற்கு ஒரு காரணம் இருக்கும். ஊழல் செய்து சேர்த்த சொத்தும் லஞ்சம் வாங்கிய பணமும் ஏதோ ஒன்றை முறைகேடாக செய்வதற்கு யாரோ ஒருவருக்கு தகுதியில்லாத ஒன்றை செய்து கொடுப்பதற்காக பெறப்பட்ட சொத்துக்களே இவை. எனவே தான் அவர்களால் இந்த வருமானத்திற்கு கணக்கு காண்பிக்க முடியவில்லை. இவர்கள் பெற்ற லஞ்சத்தால், ஊழலால், முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனால் எந்த நிவாரணமோ, தீர்வோ கிடைக்கப்போவதில்லை. டான்சி வழக்கில் இவர்கள் செய்த தவறுக்கு நீதிமன்றம் ‘பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னது. இவர்கள் பிராயசித்தம் தேடவில்லை. மாறாக பாவங்களையே சேர்த்தார்கள் என்பது அவ்வப்போது புலப்பட்டிருக்கின்றது. இந்த வழக்குகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது தான் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது. இந்த காலத்தில் தான்வோர்ல்டு ராக்கர்ஸ் லிமிடெட் என்கிற வைகுண்ட ராஜன் நிறுவனத்தில் சசிகலாவின் இரண்டு உறவினர்கள் பங்குதாரர் ஆகிறார்கள். இதற்கு பிந்தைய காலத்தில் தான் மிடாஸ் சாராய ஆலையில் 30 சதவிகிதம் பங்கு வைத்திருந்த வைகுண்டராஜனிடமிருந்து முழுமையாக சசிகலாவின் கைகளுக்குப் போய்ச்சேருகிறது, சசிகலாவின் உறவினர்கள் இருவரும்,இன்னும் சிலருமாக 13 நிறுவனங்களை உருவாக்கியிருக் கிறார்கள். அத்தனை நிறுவனங்களுக்கும் ஒரே முகவரி சென்னை, தி.நகரில். தாதுமணல் அள்ள தடைவிதிக்கப்பட்ட இந்த காலத்தில் தான் 9 லட்சத்து 70ஆயிரம் டன் தாது மணல் நெல்லை மாவட்டத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகள் நடந்து கொண்டிருந்த காலத்தில்தான் மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகள் பாளம், பாளமாகபெயர்த்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் கடற்கரையோரத்தில் இருந்த தாதுமணல் கப்பல் கப்பலாக அந்நிய நாடுகளுக்கு முறைகேடாக ஏற்றுமதி செய்யப்பட்டது, தமிழகத்தின் நீராதாரங்கள், குறிப்பாக ஆற்றுமணல் திட்டமிட்டு சூறையாடப்பட்டது, விவசாயிகள் பாசனத்திற்கும், பொதுமக்கள் குடிநீருக்கும் ஏங்கித் தவித்த போது தமிழக ஆறுகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க உரிமம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சிறு குன்றுகளும், மலைகளும் பொடிப்பொடி யாக்கப்பட்டு குவாரிகள் பலநூறாய் பெருகின. தூத்துக்குடி மாவட்டத்தில் சேரகுளம், வெட்டிக்குளம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தனியார் நிலங்கள் ஒட்டுமொத்தமாக மிரட்டிபதிவு செய்யப்பட்டன. சிறுதாவூர், பையனூர் என பங்களாக் களும் கூட மிரட்டி வாங்கப்பட்டதும், புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதும் என புற்றீசல்கள் போல புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் முறைகேடாக நிலத்தடி நீரை தனியார் கொள்ளையடிப்பதற்கு இவர்கள் அனுமதி வழங்கினார்கள், ஆட்சேபித்த மக்களை விரட்டியடித்தார்கள். கொள்ளைக்கு இவர்களின் காவல்துறை துணை நின்றது. அதிமுகவின் அமைச்சரவையிலிருந்த பலபேருக்குவெளிநாடுகளில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாய் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள். சென்னையில் உள்ள ஒரு மிகப்பெரிய மாலில் அதிமுகவின் ஒரு பெண்மணியும், திமுகவின் ஒரு பெண்மணியும் தொழிற்கூட்டுவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி ஊழல் பட்டியல் சொல்லி மாளாது. திமுகவும் கூட இந்த தீர்ப்பை வரவேற்றி ருக்கிறது. ஆனால் இதே 1991-96 காலகட்டத்தில் ஊழல் செய்து தண்டனை பெற்ற இந்திரகுமாரி, மருங்காபுரி பொன்னுச்சாமி, சுடுகாட்டு ஊழல் செல்வகணபதி ஆகியோர் திமுகவில் ஐக்கியமானார்கள். திமுக உச்சிமுகர்ந்து அரவணைத்துக் கொண்டது. திமுகவின் கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விசாரணைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் திமுகவின் பல்வேறு நபர்கள் நில அபகரிப்பில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டார்கள். அவர்கள் எல்லாம் அதிமுகஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சியில் இணைந்து கொண்டார்கள். ஊழல் நபர்களை கொள்வதும், கொடுப்பதும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வெளியே தெரிந்த அரசியல் ஆக்ரோஷங்களுக்கு மத்தியில் மிக ரகசியமாக நடந்துகொண்டேயிருக்கிறது. ஊழல் செல்வகணபதி திமுகவால்தான்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.பாமகவின் சின்ன ஐயா நோய்தீர்க்கும் துறைக்கு பொறுப்பேற்று தகுதியில்லாத நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததற்காக சிபிஐ விசாரணைக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இந்த முதலாளித்துவக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் கட்சி மற்றும் ஆட்சிப்பொறுப்புகளில் உள்ளவர்களின் சொத்துக்கள் எவ்வித தங்கு தடையுமின்றி பெருநிறுவனங்களைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் காட்டுவது ஒன்றைத் தான்... அதிகாரமும், வாய்ப்பும் கிடைத்தால் மிக யோக்கியமானவர் களாக அரசியலுக்குள் வரும் நபர்கள் கூட முதலாளித்துவக் கட்சிகளில் இணைந்த பிறகு முழுக்க ஊழல் மழையில் நனைந்து விடுகிறார்கள். அது அந்தக் கட்சிகளில் இருப்பதற்கான முன் நிபந்தனையாக மாறிப்போய் இருக்கிறது. எனவே தான் உச்சநீதிமன்றத்தின் தண்டனை வரவேற்கத் தக்கது என்றாலும் அதுவே ஊழலுக்கு முடிவு கட்டிவிடாது. அது ஒரு நிவாரணம். தீர்வு வேரிடத்தில் இருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் லஞ்சம், ஊழலுக்குஎதிரான அறச்சீற்றத்தை, ரௌத்திரத்தை, மோதி மிதிக்கும்குணத்தை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.நேர்மை, நியாயம், சட்டத்திற்கு உட்படுதல் இவையனைத்தை யும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கரையானைப் போல,புற்றுநோயைப் போல ஒவ்வொரு பாகத்திலும் அரித்து சிதில மடையச் செய்துள்ளார்கள். இவையெல்லாம் தனிநபர்களின் பலவீனத்தால் மட்டும் ஏற்பட்டவை அல்ல. அந்த கட்சிகளின் அமைப்பு முறை, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் நபர்களை நிறுத்துவதற்கு கடைபிடிக்கும் வழிமுறை, தேர்தலை அணுகும் முறை, அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை - இவற்றிற்குள் இருக்கிறது லஞ்சத்திற்கும், ஊழலுக்கும்,முறைகேட்டிற்குமான ஊற்றுக் கண். இதைப் பாதுகாப்பதற்கான வன்முறைகள், காவல்துறையினை அடியாட்களாக பயன் படுத்தும் வழிமுறைகள், நிர்வாகத்தை கட்சி மற்றும் ஆட்சி யில் பொறுப்பில் இருப்போரின் வேலைக்காரர்களாக மாற்றும் முறை - இவையெல்லாம் இவற்றோடு பின்னிப் பிணைந்தது. ஏன் இவ்வளவு பேரும் இத்தனை கட்சிகளும் ஊழலில்திளைக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை தனிநபர்பலவீனங்களிலும், சொகுசுகளில் மட்டும் அடங்கியிருக்க வில்லை. மாறாக அந்த கட்சிகளின் உள்ளுறைத் தன்மையாக இது அமைந்திருக்கிறது. எனவே தான் அந்தக் கட்சிகளுக்கு மிகுந்த நம்பிக்கை யோடும், நேர்மையோடும் வருகிற இளைஞர்களும் கூட அந்த நடைமுறைகளின் ஊடாக ஊழல்வாதிகளாக ஊழலும், லஞ்சமும் தவறு என்கிற நற்குணம் சிறிதும் அற்றவர்களாக மாறிப் போய் வருகிறார்கள். இவையெல்லாம், அவர்கள் சொத்து சேர்த்து விட்டார்கள் என்பதோடு மட்டும் முடிந்து விடுவது அல்ல. மாறாக, இந்த சொத்துக்களை சேர்ப்பதற்காக அவர்கள் கடைபிடித்த வழிமுறைகள், அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தகுதியான நபர்கள், அவர்கள் அடித்த கொள்ளைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. உணவுத்துறை அமைச்சர் கொள்ளையடித்தால் தமிழக மக்கள் ஒவ்வொருவருடைய சாப்பாட்டிலிருந்து திருடப்பட்டது என்று பொருள். ஆறுகளை ஒட்டச் சுரண்டி 650 ரூபாய் ஒரு யூனிட் மணல் என்று மோசடியாக அறிவித்து விட்டு, ஒரு யூனிட் மணலை ரூ. 7000, 8000க்கு விற்பதால் அந்த மணலை பயன்படுத்துகிற ஒவ்வொருத்தர் பாக்கெட்டிலிருந்தும் திருடப்பட்ட தொகைகள் தான் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருப்பவர்களுக்கும் அதை சேகரித்து கொடுக்கிற அதிகாரிகளுக்கும் அவர்கள் இருக்கிற கட்சியின் தலைவர் களுக்கும் செல்லும் பணமாக இருக்கிறது. கடலோரங்களில் திருடிக் கடத்தப்பட்ட தாதுமணல் வளங்கள், அரசால் விற்கப்பட்டு அரசு கஜானாவிற்கு வந்திருந்தால் அவையெல்லாம் சாலை அமைக்க, குடிநீர் கொடுக்க, மருத்துவமனையை பலப்படுத்த, கல்வி நிறுவனங்களை மேம்படுத்த பயன்பட்டிருக்கும். ஆனால் அவையெல்லாம் இன்றைக்கு தனிநபரின் நிறுவனங்களாக மாறிப்போயிருக்கின்றன. பி.ஆர்.பி. குழுமம் கடத்திய மலைகளால் கிடைத்த வருமானங்கள் லட்சக்கணக்கான கோடி என பேசப்படுகிறது. அவையெல்லாம் நலத்திட்டங்களாக, வளர்ச்சித் திட்டங்களாக, மானியங்களாக, தமிழக மக்கள் ஏழரை கோடிப் பேருக்கும் சென்றிருக்க வேண்டிய பயன்களாகும். அவையெல்லாம் மறுக்கப்பட்டதாயிற்று. நீதிமன்றம், தவறு செய்த சிலருக்கு தண்டனை கொடுத்திருக்கிறது என்பதைத் தவிர அதனால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்துவிடப் போவதில்லை. நீதிமன்றத் தண்டனையால் ஊழல் குற்றங்களும் குறைந்துவிடப் போவதில்லை. மாறாக கறப்பதற்கு புதிய வழிகளையும், தப்பிப்பதற்கு புதிய முறைகளையும் அவர்கள் கண்டுபிடிப்பார்கள். ஏனெனில் லஞ்சமும் - ஊழலும் - முறைகேடுகளும் முதலாளித்துவக் கட்சிகளின் இருத்தலுக்கு உணவளிக்கும் உரம்போடும் கூறுகள். அவையின்றி அவற்றால் உயிர் வாழ முடியாது. நவீன தாராளமயம் இயற்கை வளங்கள், பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதையே கொள்கையாக மாற்றியிருக்கிறது. இந்த நடைமுறையில் ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருநிறுவனங்களின் கூட்டு செழித்து நிற்கிறது. எனவே ஊழலுக்கான மாற்று, தடுப்பு, தண்டனைகளில் அடங்கியிருக்கவில்லை. அரசின் கொள்கைகளில் இருக்கிறது; கட்சிகள் நடத்தும் முறைகளில் இருக்கிறது. தேர்தலை அணுகும் முறையில் இருக்கிறது. தனிநபர் வழிபாடுகளில் இருக்கிறது. இதோ ஜெயலலிதா இரண்டாவது முறையாக சிறைக்குப் போய்விட்டு வந்த பிறகு 30 ஆண்டுகளில் இல்லாத முறையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் அவர் வழியில் தான் அரசு நடக்கும் என்று அதிமுகவின் மூன்று கோஷ்டிகளும் பேசித்திரிகிறார்கள்.தமிழகத்தின் கூட்டு மனச்சாட்சி தனி மனித மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதாக கட்டமைக்கப்படுவதே இதற்குக் காரணம்.எனவே தண்டனைகளால் தடுக்க முடியாது. மாறாக அரசுக் கொள்கைகள் என்பவை கட்சியின் கொள்கைகளில் அடங்கியிருக்கிறது. பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் மிக உயர்ந்த பொறுப்புக்களை வகித்த பல தனி நபர்கள் மிக யோக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் விதிவிலக்குகளே. மாறாக, இந்தியாவில் ஒரு கட்சியின் சார்பாக 9 முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். 9 பேர் மீதும் ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை என்பதும், இதில் ஒருவர் தன்சொத்துக்கள் முழுவதையும் முதலமைச்சராகும் முன்பே கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர் என்பதும், மற்றொருவர் பொது மக்களுக்கான சேவையில் திருமணமே செய்துகொள்ளாதவர் என்பதும், மற்றொருவர் இந்தியாவின் முதல் ஆதிவாசி முதலமைச்சர் என்பதும் தற்செயலானது அல்ல. தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜோதிபாசு, இ.கே. நாயனார், புத்ததேவ் பட்டாச்சார்யா, நிருபன் சக்கரவர்த்தி, வி.எஸ். அச்சுதானந்தன், தசரத்தேவ், மாணிக் சர்க்கார், பினராயி விஜயன் என்கிற இந்த மாணிக்கங்கள் அத்தனை பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்பதும், ஊழியர்கள் என்பதும் மிக முக்கியமான அம்சங்கள்.ஒரு கட்சியின் அத்தனை முதலமைச்சர்களும் ஊழல்கறை தீண்டமுடியாதவர்களாக இருப்பதும் எல்லா கட்சிகளி லும் பெரும்பாலானவர்கள் ஊழலில் திளைத்தவர்களாக இருப்பதும்தற்செயலானது அல்ல. தனி மனிதர்களின் பலம் - பலவீனங்கள், நல்ல குணம்- கெட்ட குணம் சம்பந்தப்பட்டது அல்ல. அது அந்தந்தகட்சிகளின் குணத்தோடும், கொள்கையோடும் சம்பந்தப்பட்டது. மோசமான மரங்கள் நல்ல கனிகளைத் தந்து விடுவதில்லை. நல்ல மரத்தின் கனிகள் மோசமாக இருப்பதில்லை. எனவே கட்சிகளின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே ஊழலா, நேர்மையா என்பதைத் தீர்மானிக்கின்றன.இதோ தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக ஒரே குரலிலும், உரத்த குரலிலும் பேசுவதோடுமட்டுமின்றி நடைமுறையிலும் சாதித்துக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்த முடியும்; ஊழலை வேரறுக்க முடியும்.எனவே தான், எழுக தமிழகமே! எம்மோடு இணைக தமிழகமே! நம் தமிழகத்தை தலைநிமிரச் செய்யும் பணியில் இணைந்தே செயல்படுவோம், இணைந்தே சாதிப்போம் என்று அறைகூவி அழைக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஊழலை வேரறுருப்போம், ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம், ஊழலின் ஊற்றுக்கண்ணை முற்றாய் கருவறுப்போம் என்கிற முழக்கம் ‘எழுக தமிழகமே! மார்ச் 2 - 6 பிரச்சார இயக்கத்தில்’ முக்கியமான முழக்கங்களில் ஒன்றாய்திகழ்கிறது. எழுவோம் தமிழகமே! கட்டுரையாளர்: மாநிலசெயற்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்) http://epaper.theekkathir.org/

மோசமான மரங்கள் நல்ல கனிகளைத் தந்து விடுவதில்லை. நல்ல மரத்தின் கனிகள் மோசமாக இருப்பதில்லை. எனவே கட்சிகளின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே ஊழலா, நேர்மையா என்பதைத் தீர்மானிக்கின்றன.

நெடுவாசலும், குறுக்குச்சாலும் ************************ ஜல்லிக்கட்டு பாதுகாப்பு போராட்டத்தின் போது தமிழக பாஜகவினர் ஆளாளுக்கு ஒன்றைபேசி மக்களை குழப்பியது போல புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதிலும் குழப்பி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது; 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த திட்டம் குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது என்று பாஜகவின்தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். இந்த திட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் நடத்தி வருகிற தன்னெழுச்சியான போராட்டத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதுதான் நெடுவாசல் பகுதி மக்களின் விருப்பம் மட்டுமல்ல,தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஓரளவு செழிப்பான பகுதி நெடுவாசலை உள்ளடக்கியப் பகுதிதான். அந்த மாவட்டத்திலேயே ஆற்றுப்பாசனம் இல்லாத நிலையில் நிலத்தடி நீரின் மூலம் ஓரளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கும் வேட்டு வைக்கக்கூடிய வகையில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்துள்ளது. மறுபுறத்தில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு மாநிலம் அழிவதில் தவறில்லை என்கிறார். இதிலிருந்தே தமிழகம் அழிய வேண்டுமென்பதுதான் இவர்களது திட்டம் என்பது தெளிவாகிறது. தமிழகத்தின்சார்பாக மத்திய அமைச்சராக உள்ள பொன்ராதாகிருஷ்ணன் இந்த மாநிலமே அழிந்தாலும் பரவாயில்லை. பன்னாட்டு நிறுவனம் எரிவாயுஎடுத்து லாபமீட்டுவதுதான் முக்கியம் என்கிறார். தமிழகத்திலிருந்து பாஜக என்கிற விஷ விருட்சத்தை அடியோடு வெட்டி எறியவேண்டும் என்பதற்கு இந்த ஒரு காரணம் போதும். தமிழக மக்கள் வாழ்வதற்காக பாஜக என்கிற கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழக இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றுபட்டு மிகுந்த கட்டுப்பாட்டோடும் கண்ணியத்தோடும் நடத்தினார்கள். மோடி அரசுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி இந்த போராட்ட பேரலையில் வலுவாக வெளிப்பட்டது. இதனால் அரண்டு போன பாஜகவினர், அப்போதிருந்த ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தே காவல்துறை மூலம் அந்த போராட்டத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தார்கள்.இதற்கு அவர்கள் சொன்ன காரணம் இந்த போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்பதுதான். இப்போது நெடுவாசல்போராட்டத்திலும் எச். ராஜா அதே புரளியை அவிழ்த்துவிடுகிறார். தேச விரோதிகள் இந்தபோராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்தபோராட்டம் எழுந்து வருவதால் தங்களது வேலையை பாஜகவினர் காட்ட துவங்கியுள்ளனர். உண்மையில் நாட்டை அழித்து தனியாருக்கு தரத்துடிக்கும் தேச விரோதிகள் பாஜகவினர்தான். அவர்களிடம் விவசாயிகள் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். http://epaper.theekkathir.org/

மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது நெடுவாசல் போராட்டக்களத்தில் 10 ஆயிரம் பேர் குவிந்தனர் ******************** புதுக்கோட்டை, பிப்.27- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. திங்களன்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில்நெடுவாசல் கிராமத்தில் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 15-ம் தேதிகர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முன்னாள்எம்பியின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இந்த தகவலறிந்தது முதல் நாளுக்கு நாள் போராட்டக் களம் சூடுபிடித்து வருகிறது. பல்வேறு அரசியல்கட்சிப் பிரமுகர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஊடகத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் நெடுவாசலை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் இதில் பம்மிப் பம்மி நடந்து கொண்ட தமிழக பாஜக தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலத்தையோ, ஊரையோ பலிகொடுப்பதில் தவறில்லை என்ற அளவிற்குப் பேசி வருகின்றனர். தீவிரமடையும் கொந்தளிப்பு இது போராட்டக்காரர்கள் மத்தியில்பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர் ந்து திங்கள் கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இந்தப் போராட்டத் களத்தில் அனைவரின் ஒப்புதலுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நெடுவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பது, வீடுகள் தோறும் தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திங்களன்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்ட கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்.

பத்திரப் பதிவு தடையை விலக்க நீதிமன்றம் மறுப்பு ********* சென்னை, பிப். 27 - புதிய வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், தமிழகஅரசு தனது கொள்கை முடிவை அறிவிக்காததால், பத்திரப் பதிவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது, கட்டுமானத் தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொதுநல வழக்கில், கடந்த 2016 செப்டம்பர் 9 அன்று, விளை நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றக் கூடாது என சென்னைஉயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதிலிருந்து இப்போது வரை இப்பிரச்சனைக்கு தீர்வில்லை.விளைநிலங்களை வீட்டடிமனைகளாக மாற்றுவது தொடர்பாகவும், மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும் இரண்டு கோணங்களில் இவ் வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.பலகட்ட விசாரணைக்குப் பின் இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதால், விளைநிலங்களின் பரப்புகுறைவதாக முறையிடப்பட்டது. மறுபுறம் அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் மட்டுமே வீட்டுமனைகளாக மாற்றப்படுவதாகவும், பத்திரப்பதிவுக்கான தடை நீடிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் தரப்புவழக்கறிஞர்கள் வாதிட்டனர். பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.விசாரணையின்போது, பத்திரப் பதிவு விவகாரத்தில், தனது கொள்கைமுடிவை விரைவில் தெரிவிப்பதாக ஏற்கெனவே தமிழக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டதை நினைவுபடுத் திய நீதிபதிகள், இன்னும் ஏன் அரசு தனது முடிவை அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு, இவ்விவகாரத்தில் மத்திய அரசுதான் சட்டத் திருத்தத்தை கொண்டு வரமுடியும்;அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த மட்டுமே முடியும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தற்போது நிலங்களை விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், பயன்பாட்டில் இல்லாத நிலங்கள் எனதமிழக அரசு வகைப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இதில் நடைமுறை ரீதியான காலதாமதம் ஏற்பட்டு வருவதால், முடிவை அறிவிக்க மேலும் கால அவகாசம் வேண் டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை விளைநிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அறிவித்தனர்.விளை நிலங்களை வரையறை செய்வதிலும், புதிய மனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் தெளிவான கொள்கை நிலைபாட்டை எடுக்காமல், ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்துவருவதால், கட்டுமானப்பணிகள் முற்றிலுமாக முடங்கியுள் ளன. இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் சுமார் 6 மாதகாலமாக வேலையின்றி தவிக் கின்றனர். 150 நாட்களுக்கும் மேலான தடையாணையால் பத்திரப் பதிவகங்கள்வெறுமனே திறந்து மூடப்படுகின் றன. ஒரு பத்திரமும் பதிவாகவில்லை. பதிவுத் தடையால் வீடு, மனைகளை வாங்க- விற்க முடியவில்லை. கட்டுமானங்கள் நின்றுவிட்டன. கட்டுமானங்கள் நின்றுவிட்டதால் கட்டுமானத் தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்புகள் அணைந்துவிட்டன. வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.இடம் விற்பவர்- வாங்குபவரில் தொடங்கி கொத்தனார், சித்தாள்,நிமிர்ந்தாள், கம்பி கட்டுவோர்,பலகையடிப்போர், கல்பதிப்பவர், சுண்ணமடிப்பவர், சுமைப் பணி தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/

Sunday, February 26, 2017

ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி பினராயி விஜயன் எச்சரிக்கை ********************************தோழர்களே, சகோதர - சகோதரிகளே! மங்களூருவில் இதுபோன்ற நிகழ்ச்சியில் அதிலும் குறிப்பாக மதநல்லிணக்கப் பேரணியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.நமது நாட்டின் மதநல்லிணக்கத்தை பாதுகாத்து போற்ற வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஏராளமான நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் நாட்டின் அரசுக்கு தலைமை தாங்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் என்பதுதான் மிக முக்கியமான விஷயமாக தென்படுகிறது. ஆர்எஸ்எஸ் இதை ஒரு காலத்திலும் மறைத்து வைத்ததில்லை. அது உருவான நாளிலிருந்து எல்லா காலங்களிலும் அவர்கள் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவே பிரச்சாரம் செய்து வந்துள்ளார்கள். மதவெறியையும் அதன் பாகமான மதத் துவேசங்களையும் வளர்க்கவே ஆர்எஸ்எஸ் முயற்சித்து வந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தை வஞ்சித்த ஆர்எஸ்எஸ் பாரம்பரியம் ஆர்எஸ்எஸ் என்பது நமது நாட்டில் பொதுவானவைக்காக குரல் கொடுக்கும் அமைப்பல்ல. துரதிருஷ்டவசமாக அந்த அமைப்புக்கு நாட்டின் கொள்கை வகுக்கும் அதிகாரம் கையில் கிடைத்திருக்கிறது. இந்திய பிரதமர் உள்பட அரசின் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்சின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். 1925 இல்தான் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டம் அதன் உச்சகட்ட நிலையில் போராட்ட நெருப்பு கொழுந்து விட்டெரிந்த காலகட்டம் அது. அது தோன்றிய பிறகு 22 வருடங்கள் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்த காலகட்டத்திலும் ஆர்எஸ்எஸ் இந்நாட்டில் செயல்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத ஒரு இயக்கம் ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பங்கும் வகிக்கவில்லை என்று சொல்வதை விட அவர்கள் அவர்களுக்கேயுரிய பங்கு வகித்தார்கள்.அக்காலத்தில் உருவான எல்லா அமைப்புகளும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற நிலைபாட்டையும் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் பிரிட்டிஷார் நாட்டை விட்டு எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. எனினும் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்தனர். இங்கேதான் ஆர்எஸ்எஸ் மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபட்டு நின்றது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்த அது முன்வரவில்லை. நேர்மாறாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிலேயே நிலை கொள்ளும் படியான நிலைபாட்டையே ஏற்று செயல்பட்டனர். சாவர்க்கர் ஆங்கிலேய வைஸ்ராயை நேரில் சந்தித்து, இந்த சுதந்திரப் போராட்டத்தில் தாங்கள் பங்கு கொள்ளவில்லை என்றும், ஆங்கிலேய அரசு சம்பந்தமாக எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே கருத்தே உள்ளது என்றும் தெரிவித்தார்.அந்த வகையில் சுதந்திரப் போராட்டத்தை வஞ்சித்த பாரம்பரியமே ஆர்எஸ்எஸ்சுக்கு உள்ளது. நமது நாட்டை ஒரே நாடாக்கவும், மக்களை ஒற்றுமையுடன் ஓரணியில் நிறுத்தவும் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. மக்களை பல பிரிவுகளாக பிரித்து பிரிவினை உணர்வையூட்டி எதிரெதிராக மோத விடுவது என்பதற்குத்தான் ஆர்எஸ்எஸ் துவக்கம் முதல் முயன்று வந்தது. அதன் ஒரு பகுதியாகவே நாட்டில் நடக்கின்ற எல்லா பிரிவினைவாத மோதல்களுக்கும் ஆர்எஸ்எஸ் தலைமை தாங்கும் நிலைக்கு ஆளானது. காந்தி படுகொலையைக் கொண்டாடியவர்கள் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு நமது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைத் தான் எதிர்க்கிறார்கள். எப்போதும் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கவே முயன்றிருக்கிறார்கள். இங்கே இயல்பாகவே ஒரு கேள்வி மேலெழுந்து வருகிறது. எதற்காக மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி ஏதாவது ஒரு ஆர்எஸ்எஸ்காரரை தாக்கினார் என்று யாரும் கூற முடியாது. ஆனால் மகாத்மா காந்தியை கொலை செய்ய நீண்ட நாட்களாக சங்பரிவார் தலைமையில் சதி திட்டம் நடந்து வந்தது. கோட்சேவின் கையிலிருந்த ஆயுதம் எவ்வாறு காந்திஜியை கொல்லப்பயன்பட்டதோ, அதுபோலவே ஆர்எஸ்எஸ் கோட்சேவையும் காந்தியைக் கொல்ல தங்கள் கையிலுள்ள கேவலமான ஆயுதமாகவே பயன்படுத்திக் கொண்டது. காந்திஜி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆர்எஸ்எஸ் அவர்கள் இருந்த சில இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்பதையும் நாம் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.காந்திஜியை கொன்ற ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக மக்கள் கோபாவேசம் கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் மத்திய ஆட்சியாளர்கள் சிலரை அணுகி தங்கள் மீதுள்ள தடையை நீக்கும் நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் எடுத்து வந்தது. ஆர்எஸ்எஸ் மீதான தடை நீங்கிய பின்னரும் அது தனது பழைய நிலைபாட்டையே தொடர்ந்து வந்தது. முசோலினியைச் சந்தித்த முஞ்சே ஆர்எஸ்எஸ்சின் கொள்கை எத்தகையது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 1925 இல் உருவான ஆர்எஸ்எஸ் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்-ன் ஸ்தாபகத்தலைவர்களில் ஒருவரான முஞ்சே, அன்றைய உலகின் பெரும் பணக்காரர்களை சந்திக்க சென்றார். அதோடு தங்கள் முன்னோடிகளாக கருதும் சிலரையும், அவர்களின் நாடுகளையும் காண சென்றார். அதிலொருவர் முசோலினி ஆவார். முசோலினியின் பாசிச அமைப்பு முறையை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஏற்றுக் கொண்டது. முசோலினியின் பாசிச அமைப்புக்கு பயிற்சியளிக்கும் பயிற்சி மையங்களைக் கண்ட முஞ்சே, ஆவேசத்தில் உணர்ச்சி வசப்பட்டார். பின்னர் முசோலினியுடன் நடந்த சந்திப்பில் இந்த பயிற்சியின் விஷேசத்தைப் பற்றியும், அதை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றியும் விவாதித்தார். அதன்படி முசோலினியின் பாசிச அமைப்பு முறையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதோடு அதையே பின்பற்றி இன்றும் செயல்பட்டு வருகிறது. ஹிட்லரைக் கொண்டாடிய ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ், ஜெர்மானிய நாஜிக் கொள்கையை தங்கள் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. ஹிட்லர் ஜெர்மனில் செயல்படுத்திய நடவடிக்கைகள், குறிப்பாக சிறுபான்மையினரை கொன்றொழித்த நடவடிக்கையில் மதிமயங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஒரே ஒரு அமைப்பே இந்த உலகில் உள்ளது. அது ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் அந்த நாசகர கொள்கைகளை உலகின் அனைத்து நாடுகளின் அமைப்புகளும் புறந்தள்ளிய போதும் ஆர்எஸ்எஸ் மட்டுமே அதனை புகழ்ந்து ஏற்றுக் கொண்டது. உள்நாட்டுப் பாதுகாப்பில் பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டுமென்பதற்கு ஹிட்லரின் ஜெர்மனி நமக்கு முன்னுதாரணம் என்று அந்த காலகட்டத்தில் பகிரங்கமாக ஆர்எஸ்எஸ் பிரகடனம் செய்தது. ஹிட்லர் சிறுபான்மையினரை கொன்றொழிக்க எடுத்த நடவடிக்கைகளை, குறிப்பாக யூதர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகளை இங்கும் செயல்படுத்துவது பற்றி பரிசீலித்தது. ஹிட்லரின் அத்தகைய நடவடிக்கையினால் ஆர்எஸ்எஸ் உற்சாக உணர்வு பெற்றது.ஆர்எஸ்எஸ்சின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் ஹிட்லரின் நடவடிக்கைகளை புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள். இத்தகைய கொள்கையையே தங்களது கொள்கையாக தத்துவங்களை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டது. ஹிட்லரின் நோக்கங்களை அப்படியே அது உள்வாங்கிக் கொண்டது. சிறுபான்மையினரை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஹிட்லர் எழுதி வைத்திருக்கும் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் எழுத்துப் பிசகாமல் அது போலவே கொள்கைகளாக எழுதி வைத்துள்ளது. ஹிட்லர் யூதர்களை மட்டுமே சிறுபான்மையினராக கருதினார். யூதர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஹிட்லர் கூறி வந்தார். சோசலிஸ்டுகளை உள்நாட்டு எதிரிகளாக ஹிட்லர் கருதினார். அதே கொள்கையை ஆர்எஸ்எஸ்சும் பின்பற்றி தங்கள் கொள்கைகளாக எழுதி வைத்துள்ளனர். இதை அவர்கள் நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். இங்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்று சிறுபான்மையினரையும் உள்நாட்டு விரோதிகளாக சித்தரிக்கின்றனர். அதோடு ஹிட்லரைப் பின்பற்றி ஆர்எஸ்எஸ்சும் கம்யூனிஸ்ட்டுகளை நாட்டின் விரோதிகளாக சித்தரித்தனர். அதாவது ஹிட்லரைப் பின்பற்றி சிறுபான்மையினரையும், கம்யூனிஸ்ட்டுகளையும் தங்கள் விரோதிகளாக பிரகடனப்படுத்தி செயல்படுகிறார்கள். கொலைகள் புரிய விசேசப் பயிற்சி இந்த கொள்கையைத் தான் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நாட்டில் நடந்துள்ள எல்லா மதக் கலவரங்களுக்கும் தலைமை தாங்கியது ஆர்எஸ்எஸ் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். ஆயிரக்கணக்கானவர்களை கொன்று தள்ளிய கலவரங்கள் நமது நாட்டில் நடந்திருக்கிறது. அந்த கலவரங்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் தான் தலைமை தாங்கியுள்ளது. எப்படி கலவரங்களையும், பிரிவினை மோதல்களையும் உருவாக்கி நடத்த வேண்டும் என்பதற்கு விஷேசமான பயிற்சி கொடுக்கப்படுகிறது. அத்தகைய பிரிவினை மோதல்கள் கலவரமாக மாறும்போது சாதாரண மக்களை உணர்வுகளுக்கு ஆட்படுத்த எவ்விதமான பொய் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தலைமையில் நடந்துள்ள எல்லா கலவரங்களிலும் இத்தகைய ஒற்றுமை வடிவத்தை காண இயலும். துல்லியமான பயிற்சிகள் மூலம் தங்களுடைய செயல்முறைகளை நடத்தியது புலப்படும்.ஆர்எஸ்எஸ் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறக் கூடாது என்பதே துவக்கம் முதலே அது ஏற்றுக் கொண்ட நிலைபாடு ஆகும். 1947 ஜூலை 17 இல் ஆர்எஸ்எஸ்சின் ஆர்கனைசர் இதழ் நமது தேசியக் கொடி குறித்து ஒரு தலையங்கம் எழுதியது. நமது தேசியக் கொடியின் அம்சங்களை நிர்ணயித்தது, விரிவான விவாதத்தின் மூலமேயாகும். ஆனால் தேசியக் கொடியின் அம்சங்கள் நமது பண்பாட்டுக்கு உகந்ததல்ல என்றும், நமது நாட்டுக்கு சொந்தமானதல்ல என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இந்தியா என்ற பெயரை நாட்டுக்கு சூட்டியது தவறு என்று கூறி வந்தது. 1947 ஜூலை 31 இல் அதே ஆர்கனைசர் பத்திரிகையில் இந்தியா என்ற பெயர் நமது நாட்டுக்கும் பொருத்தமானதல்ல. ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரே நமது நாட்டுக்குப் பொருத்தமான பெயர் என்று கூறினார்கள். இவையனைத்தும் அவர்கள் தொடர்ந்து கூறிவந்த கொள்கையின் வெளிப்பாடே ஆகும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல என்ற கொள்கையை நிலை நிறுத்தவே ஆர்எஸ்எஸ் முயல்கிறது. அதனால்தான் இன்றைக்கு உள்ள உள்துறை அமைச்சரே, நாடாளுமன்றத்தில் "இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு" என்று குறிப்பிடப்பட்டதே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று பகிரங்கமாகக் கூறினார். இதுவே ஆர்எஸ்எஸ்சின் நிலைப்பாடு என்று நாம் உணர வேண்டும். மனசாட்சியை உலுக்கிய படுகொலைகள் இந்த ஆர்எஸ்எஸ்சின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கிடைத்திருக்கிறது. சகிப்பின்மையின் உச்சகட்டத்திற்கு சென்று தங்களது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அவற்றை குறித்து கூற நீண்ட நேரம் தேவைப்படும். நமது நாட்டில் அவ்வளவு தூரம் கொடூரங்கள் ஆர்எஸ்எஸ்சின் தலைமையில் சமீபகாலங்களில் நடந்து வருகிறது. சகிப்புத் தன்மை இல்லாமை என்பதன் மொத்த உருவமாக ஆர்எஸ்எஸ் மாறியிருக்கிறது. சகிப்புத் தன்மையின்மை நமது ஆட்சியாளர்களிடம் பரவி வருகிறது. அதன் பகுதியாக மகாத்மா காந்தியை கொன்றதைப் போலவே நாட்டிற்கும் மக்களுக்கும் பிரியமானவர்களை கொலை செய்ய ஆர்எஸ்எஸ் தயாராகி வருகிறது. இங்கே எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டது நமது மனதிலுள்ளது. அந்தப் படுகொலை, இந்நாட்டின் மதச்சார்பின்மை என்ற மனசாட்சி மிகவும் வேதனைப்பட்ட ஒரு விஷயமாகும். கல்புர்கி திறமையான ஒரு எழுத்தாளர் ஆவார். எதற்காக அவரைக் கொன்றார்கள். கல்புர்கி மட்டுமல்ல, கோவிந்த் பன்சாரேவும் கொலை செய்யப்பட்டார். அவர் ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை பகிரங்கப்படுத்தி விமர்சித்தார்; ஆர்எஸ்எஸ்சின் தவறுகளை, தவறான சித்தரிப்புகளை வரலாற்றின் துணையோடு தோலுரித்துக் காண்பித்தார் என்பதுதானே காரணம். சகிப்புத் தன்மையின்மையின் ஒரு பகுதியாக கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார். நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர். அவரும் கொலை செய்யப்பட்டார். இவை அனைத்தும் சங்பரிவாரின் தலைமையில் நடந்தவையாகும். இவர்கள் யாரும் நமது சமூகத்தில் எந்த குற்றமும் செய்தவர்கள் அல்ல. மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், நாட்டுக்கும் மக்களுக்காகப் போராடியவர்கள். இவை யெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாத சகிப்புத் தன்மையின்மையே இத்தகைய சிந்தனையாளர்களை கொலை செய்ய ஆர்எஸ்எஸ்-ஐ தூண்டுகிறது. பெருமாள் முருகனையும் படைப்பாளிகளையும் துரத்தியவர்கள் கொலையுண்டவர்கள் மட்டுமல்ல, நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் செயல்படுபவர்கள், போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கே.எஸ்.பகவானுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் விடுத்த மிரட்டல்கள், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ் கர்னாட்டையும் ஆர்எஸ்எஸ் விட்டுவைக்க வில்லை; ஆர்எஸ்எஸ்சின் எண்ணங்களோடு இசையாமல் எதிர் கருத்துக்கள் பேசுபவர்களையும் செயல்படுபவர்களையும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. தலித் இளைஞரான கவிஞர் உச்சாங்கி பிரசாத்தின் உள்ளங்கையில் கத்தியால் குத்தி இனிமேல் எழுதினால் விரல்கள் வெட்டப்படும் என்று மிரட்டப்பட்டார். சேதனா தீர்த்தஹள்ளி, பெண் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். ஆர்எஸ்எஸ்சுக்கு அடிபணியவில்லை என்ற காரணத்தால் மிரட்டப்பட்டார். மிரட்டலுக்கு அஞ்சாமல் வாலிபர் சங்கத்தின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முகத்தில் அமிலம் ஊற்றுவோம்; பாலியல் வன்புணர்வு செய்து விடுவோம் என்று கொடூரமான முறையில் அப்பெண்மணி மீண்டும் மிரட்டப்பட்டார்.நமது பெருமாள் முருகன் என்ற தலித் எழுத்தாளர், அவருக்கு எதிரான அத்துமீறலால் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்த கொடூரம். இவையனைத்தும் நமது நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வரும் கொடூரங்கள் ஆகும்.எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மரணப் படுக்கையில் கிடக்கும்போது, ஆர்எஸ்எஸ் அவருக்கு பாகிஸ்தான் செல்லுமாறு விமானப் பயணச்சீட்டு அனுப்பி இழிவுபடுத்தியது. பாகிஸ்தானுக்கு பல முக்கியஸ்தர்களையும் அனுப்ப மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. கேரளத்தில் ஞானபீட விருது, பத்மபூஷன் விருது பெற்ற சிறந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், ரூபாய் நோட்டு தடைக்கு எதிராக பேசினார் என்ற காரணத்திற்காக அவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள். பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கமல், நடிகை நந்திதாதாஸ் போன்றவர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டுமாம். என்ன நடக்கிறது இங்கே? நமது நாட்டின் ஆளுமைகள் ஆர்எஸ்எஸ்சுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமாம். அதன் விருப்பங்களுக்கு இசைந்து நடக்க வேண்டுமாம். சுதந்திரமாய் சிந்தித்து, சொந்தமாக கருத்துச் சொல்லக் கூடாதாம். அப்படி ஆர்எஸ்எஸ்சின் கருத்துக்களோடு மாறுபாடு ஏற்பட்டால் அவர்களை இந்தியாவில் வாழ அனுமதிக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் மிரட்டி வருகிறது. ஆர்எஸ்எஸ்சுக்கு என்று பிரத்யேக உரிமை இல்லை ஆர்எஸ்எஸ்சிடம் மதச்சார்பற்ற சக்திகளுக்கு சொல்ல ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது. இந்த நாடு எல்லோருக்குமானது. ஆர்எஸ்எஸ்சுக்கு என்று பிரத்யேகமாக எந்த உரிமையுமில்லை. இங்கே வாழவும், சுதந்திரமாக கருத்துச் சொல்லவும் தாங்கள் விரும்பியவற்றை எழுதவும் இங்கே வாழும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஆர்எஸ்எஸ்சின் சகிப்புத் தன்மையின்மைக்கு எதிராக மதச்சார்பற்ற சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை ஒழித்துக் கட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே என்ன உணவு உண்ண வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியில் அக்லாக் என்ற நிரபராதியான மனிதரை அடித்துக் கொன்றதற்கு மாட்டிறைச்சியை காரணமாக சொன்னார்கள்.குஜராத்தின் உனாவில் 4 தலித் இளைஞர்களை காரில் கட்டி வைத்து அடித்ததை இந்த உலகமே கண்டது. அவர்கள் மாட்டின் தோல் வைத்திருந்தார்கள் என்பதோடு, தங்களது கழிப்பறைகளை கழுவ வேண்டுமென்று வற்புறுத்தியும் தாக்கப்பட்டார்கள். நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டுமென்று நாங்கள் தீர்மானிப்போம் என்று புராதன வருணாசிரம தர்மத்தின் புதிய பதிப்பாகவே ஆர்எஸ்எஸ் தலைமையால் இந்த கொடுமை நடந்தேறியது.இதன் மற்றொரு வடிவத்தில் உள்ள கொடுமை ஹரியானாவில் நடந்தது. வயதான ஒரு ஏழை விவசாயியின் மகனும், மனைவியும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கொலை செய்யப்பட்டனர். ஓடி ஒளிந்த இரண்டு இளம் மகள்களை கத்தியைக் காட்டி தந்தையை மிரட்டி வெளியில் வர வைத்து கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள். அக்குடும்பத்திலுள்ள அனைவரையும் துன்புறுத்தினார்கள். இதையே நாடெங்கிலும் ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் மாட்டிறைச்சியின் பேரில் வன்முறை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தங்கள் இயக்கத்தவரையே சகித்துக் கொள்ளாத ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்களது இயக்கத்திலுள்ளவர்களையே கொல்லும் நிகழ்வுகள் தற்போது எங்கும் நடந்து வருகிறது. கர்நாடகத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் நடந்த கொலைகளை நான் தனியாக உங்களிடம் கூறத் தேவையில்லை. கடந்த பிப்ரவரி 19 ஞாயிறு காலை பிரதாப் பூஜாரி கொலை செய்யப்பட்டார். கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்யப்பட்டார். கோவில் பணத்தை கையாடியது சம்பந்தமான பிரச்சனையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பணத்தைக் கையாடியவர்கள் தான் கொன்றதாக விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அதுபோன்று பாஜகவைச் சேர்ந்த விநாயக வாரி என்பவரை நரேஷ் ஷேனாய் என்பவர் தலைமையில் ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. நரேஷ் ஷேனாய் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர். உடுப்பியில் கால்நடைகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு ஆர்எஸ்எஸ்சால் கொலை செய்யப்பட்ட பிரவீண் பூஜாரி என்பவரும் பாஜகவை சார்ந்தவர் ஆவார். இவ்வாறு ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்கள் ஊழியர்களையே கொல்லும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. கேரளத்தில் ரத்தத்தில் குளிக்கும் ஆர்எஸ்எஸ் கேரளம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். ஸ்ரீநாராயணகுருவின் தலைமையில் நடந்த சமூக நீதிக்கான இயக்கங்கள் ஸ்ரீநாராயணகுரு இங்கு வந்து பேசிய விபரத்தை தோழர்கள் கூறினார்கள். அவரது சமூக நீதிக்கான இயக்கங்கள் மூலம் உறுதியான மதச்சார்பற்ற சமூகத்தை கேரளம் பெற்றிருக்கிறது. அத்தகைய கேரள சமூகத்தில்தான் ஆர்எஸ்எஸ் தனது அடித்தளத்தை நிறுவ முயன்று வருகிறது. கேரளத்தில் மிகவும் உறுதியுடன் செயல்படும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முக்கிய எதிரியாக கருதி, அழித்து இல்லாமல் செய்துவிட்டால் தங்களது பிரிவினை திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என்ற எண்ணத்தில் தான் தாக்குதல்கள் நமது தோழர்களுக்கு எதிராக நடந்து வருகிறது. கேரளத்தின் வரலாற்றை அலசினால் அறுநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்காரர்களின் கையால் கொலை செய்யப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை 205. இவர்கள் யாவரும் எந்த தவறும் செய்தவர்கள் அல்ல. மதச்சார்பின்மையை பாதுகாக்க பிரிவினைவாத மதவெறிக்கு எதிராக உறுதியான நிலைபாட்டுடன் போராடியவர்கள் ஆவர். அதனை சகிக்க முடியாத ஆர்எஸ்எஸ் அந்த தோழர்களைக் கொல்வதன் மூலம் இந்த போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்ற வீண் முயற்சியை செய்து வருகிறது.நீங்கள் நடத்திய இந்தப் பேரணிக்கு வருமாறு சில மாதங்களுக்கு முன்பே தோழர் ஸ்ரீராமரெட்டி (சிபிஎம் கர்நாடக மாநிலச் செயலாளர்) என்னை அழைத்திருந்தார். வெகுநாட்களுக்குப் பிறகு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தபோது, ஆர்எஸ்எஸ்சின் சகிப்புத் தன்மையின்மை பகிரங்கமாக வெளிப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் என்னை மங்கலாபுரம் மண்ணில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறித் திரிந்தார்கள். சிலர் கேரளத்திற்கு வெளியே என்னை எங்கும் கால்வைக்க விடமாட்டோம் என்றும் வீரவசனம் பேசித் திரிந்தார்கள். இவ்விஷயத்தில் முதலிலேயே நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கேரளத்தின் முதல்வர் என்ற முறையில், ஆர்எஸ்எஸ் விடுத்த இந்த மிரட்டலை எதிர்கொள்ள கர்நாடக அரசு எடுத்த எச்சரிக்கையுடனான அணுகுமுறை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. அதற்காக கர்நாடக முதல்வருக்கும், அரசுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை இதுபோன்ற வழியிலுள்ள உறுதியான நிலைபாட்டின் மூலமே எதிர்கொள்ள முடியும். இது ஒரு பாடமாக நாம் உட்கொள்ள வேண்டிய ஒன்றாகும் ஆர்எஸ்எஸ்சின் கொலைவாளுக்கு இடையில்தான் பயணித்தேன் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், முதல்வரான பிறகு இயல்பாகவே முதல்வருக்கு பாதுகாப்பளிக்கும் போலீசாரும் போலீசாரின் ஆயுதங்களின் நடுவே சஞ்சரிக்க வேண்டியதும் நமது ஆட்சி முறையின் ஒரு வழக்கமாகும். ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, நான் திடீரென்று ஒரு நாள் வானத்தில் இருந்து குதித்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவனல்ல. ஆர்எஸ்எஸ்-ஐ நேரில் அறியாத நபரல்ல நான். உங்களை நன்கு அறிந்து தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். இப்போது போலீசின் ஆயுதங்களின் நடுவே நான் செல்வதாகக் கூறும் நீங்கள், உங்கள் பழைய ஆர்எஸ்எஸ்காரர்களைக் கேளுங்கள். பிரண்ணன் கல்லூரியில் படிப்பு முடித்து வெளியில் வந்தபோது ஆர்எஸ்எஸ்காரர்கள் உறையிலிருந்து உருவிய கத்தியின் நடுவேதான் பிரயாணித்தேன். அன்று உங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றால் இன்று என்ன செய்யப் போகிறீர்கள்? மத்தியப்பிரதேசத்திற்கு நான் சென்ற போது அந்த அரசு என்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென்று கூறியபோது, ஒரு முதல்வர் என்ற முறையில் பொறுப்புடன் அனுசரித்தேன். முதல்வர் பினராயி விஜயன் என்று இல்லாமல் கம்யூனிஸ்ட் ஊழியர் பினராயி விஜயன் என்று நான் போயிருந்தால் நிச்சயம் நான் நிகழ்ச்சிக்கு போயிருப்பேன். எனவே இந்த மிரட்டல்கள் எங்களிடம் வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்து கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். - தமிழில்: கே.சதாசிவன் http://epaper.theekkathir.org/

சிக்கலுக்குத் தீர்வு இன்னொரு சிக்கலா? ***********பேரா. நா. மணி பத்தாம் வகுப்பில் தினேஷ்குமார் 467 மதிப்பெண்கள். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள உள்ளான். கணிதம், அறிவியல் குரூப்தான். இன்று வரை தினமும் நாலரை மணிக்கு எழுந்து ஏழரை மணி வரை வீடுவிடாகச் சென்று பேப்பர் போட்டுவிட்டுத்தான் பள்ளி செல்கிறான். மாலையும் கூட வீட்டு வேலை இருக்கிறது. இவன் ஒருநகர்ப்புற சிறுவன். கிராமப்புறங்களில் வீட்டு வேலைக்கும் விவசாய வேலைக்கும் உதவி புரிந்து கொண்டேதான் +2 படித்து வருகிறார்கள். எல்லா விடுமுறை நாட்களிலும் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு உதவி செய்துகொண்டே படித்து வரும் சிறுவர்களும் ஏராளம்.இந்தச் சிறுவர்களுக்கு ரெக்கை முதிர்ந்த பிறகுதான் இப்படிக் கஷ்டப்பட்டு படிக்கிறார்கள் என்று இல்லை. இத்தகைய மாணவர்கள் பலர் பள்ளிக்கூட்டம் செல்வதை பார்த்திராத தாய்மார்கள் பலர். அந்தக் குழந்தைகள் யார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அக்குழந்தைகளின் தாய் தந்தையரை நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அதிகாலையில் நமக்கு கீரையைக் கொணர்ந்தளிக்கும் தாய்மார்கள். விடிகாலையில் வீதிகளைச் சுத்தம் செய்து தரும் ஆண்கள், பெண்கள். இவர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை எத்தனை நாள் பார்த்திருப்பார்கள்? பிறந்த குழந்தைக்கு மருத்துவர் கனவை விதைத்து, தான் வாழும் பகுதியிலேயே உயர்ந்த பள்ளிகளில் படிப்புப் படிக்கத் தனி அறை. கொஞ்சம் கணக்கும் அறிவியலும் குழந்தைக்கு நன்கு வருகிறது எனில், அதற்குத் தக்க சகல ஏற்பாடுகளும் செய்துதரும் பெற்றோர்.பாடப்புத்தகம், பயிற்சி தவிர வேறொன்றும் அறியாக் குழந்தை. ஆறாம் வகுப்பிலிருந்து நீட்டுக்கு தனிப்பயிற்சி. அதுவும் முடியவில்லை யென்றால், இராஜஸ்தான் மாநில கோட்டாவிற்கு அனுப்பி உயர்தனிப்பயிற்சி பெற்று, நீட் வழிமருத்துவப் படிப்பினை உத்தரவாதப்படுத்தும் பெற்றோர்கள். இந்த பிரிவினரையும் சமம் என்கிறது நீட். இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.உலகப் பிரசித்தி பெற்ற குத்துச் சண்டை வீரனுக்கும் நம் உள்ளூர் வீரனுக்கும் போட்டி வைத்தால் வெற்றி யார் பக்கம் என்பதில் அய்யத்திற்கு இடமிருக்குமோ?சமமான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள சமச்சீர் பாடத்திட்டம், சமச்சீரான பள்ளி, உள்கட்டமைப்பு வசதி, சமச்சீரான ஆசிரியர் மாணவர் விகிதம், சமச்சீரான கல்வியியல் தகுதி, கற்றல் கற்பித்தல் முறைகள், சமச்சீரான பொருளாதார சமூக நிலை வேண்டுமல்லவா? இதனை உத்தரவாதப்படுத்தாமல் சமமான தேர்வுகள் நடத்தினால் என்ன நடக்கும்? சமூக, பொருளாதார நிலைமைகளில் பின் தங்கிய மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் ‘நாங்கள் மருத்துவம் படிக்க லாயக்கற்றவர்கள்’ – என உலகுக்கு அறிவித்துவிட்டு வேறு படிப்புகளுக்கோ, வேறு வேலைகளுக்கோ சென்றுவிடுவார்கள். நீட் நோக்கம் அதுவா? இல்லையென நாம் கூறலாம். ஆனால் தேர்வு கூறும் செய்தி அதுதான். அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார வல்லுநர்கள், வரலாற்றாளர்கள் எனப் பல சமூக விஞ்ஞானிகள் கணிதம், அறிவியல் சரிவர கைவரப் பெறாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டு, கலைப்பாடப் பிரிவுகளை நோக்கித் துரத்தப்பட்டவர்கள் அல்லவா?தற்போதைய தமிழக மருத்துவக் கல்வி தேர்வு முறையிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. நீட் தேர்வு முறையிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. எனவே சமூக நீதி காப்பாற்றப்படுகிறது எனப் பேசுகிறார்கள். சமூக நீதி காப்பதில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்கிய தமிழகத்தில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்களே இப்படிப் பேசுவது வருத்தம் அளிக்கிறது. சமூகத்திலும், பொருளாதாரத்திலும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் குழந்தைகளிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை அடையாளம் காணுதல், வளர்த்தெடுக்க வாய்ப்புக் கொடுத்தலே சமூக நீதி அல்லவா? நீட் தேர்வு முறையில் இதற்கு ஒரு விழுக்காடு கூட உத்தரவாதமில்லையென அடித்துக் கூறலாம்.தற்போதைய தமிழக மருத்துவக் கல்வி தேர்வு முறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் வெகு சிலரே தேர்வாகியுள்ளனர் என்ற வாதத்தில் உண்மை இருப்பது போல் தோன்றலாம். பத்தாம் வகுப்பு வரை, தமிழ் வழியில், அரசுப் பள்ளியில் படித்து பலர் இன்று மருத்துவம் பயின்று வருகின்றனர். பல்வேறு உத்திகளால் தனியார் பள்ளி களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு, தனியார் பள்ளி முத்திரையோடு அவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.‘தமிழ்நாடு முழுவதும் பெரும் சிரத்தையுடன் ஒரே மாதிரி நடத்தப்படும் +2 தேர்வே ஒரு நுழைவுத்தேர்வுதான். உயர்கல்வி சேர்க்கைக்கு அதுவே போதுமானது, வேறு வகை நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை’ என்ற தமிழக அரசின் நிலை இந்தியாவிற்கே முன்மாதிரியானது. தமிழ்நாட்டின் மாநில உரிமையைக் காக்கும் முடிவு. ஒரு மாநிலம் தனக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், உயர்கல்வி சேர்க்கை உள்ளிட்ட தனக்கான சுய திட்டமிடலுக்குமான சிறந்த முயற்சி. இந்த முடிவுக்கு இடதுசாரிகள் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ் நாட்டின் நீண்ட நெடிய சமூக நீதி போராட்ட அடையாளம் இது.‘தமிழக அரசின் நீட் விலக்கு சட்டம் நீதிமன்றம் சென்றால் நிற்காது’ என்றொரு அபிலாசையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது சிலரின் ஆவல். சிலரின் அச்சம். சிலரின் அறியாமை. நீதிமன்றங்களின் பல தீர்ப்புகள் பெரும்பகுதி மக்க ளின் நன்மை சார்ந்தே அமைந்திருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் காக்கத் தவறியதை நீதி மன்றங்கள் காத்து நின்றிருக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பும் பின்பும் நீதிமன்றங்களின் நிலை வேறு, வேறு.தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவன ங்களுக்காக நடத்தப்படும் பிளஸ் டூ தேர்வு முறை களில் சில சிக்கல்கள் இருக்கலாம். அதனைக் களைய வேண்டியது நம் கடமை. அந்த சிக்கலுக்கு மாற்றாக மேலும் ஒரு மிகப் பெரும் சிக்கலைத் தீர்வாக முன்மொழிதல் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. தினேஷ்குமாரும், தன் குழந்தை பள்ளி செல்வதை பார்த்திராத; பள்ளி செல்லும் பிள்ளை முகமறியாத தாயின் பிள்ளையும் உயர்கல்வி பயிலவேண்டுமானால் தமிழக அரசின் இச்சட்டம் அவசியத் தேவை. தினமும் பேப்பர் போட்டுக் கொண்டே தனது கனவுகளை ஈடேற்ற போராடும் தினேஷ் குமார்களும், தங்கள் பிள்ளைகள் பள்ளி செல்வதை என்றோ ஒரு சில நாட்கள் பார்த்து மகிழும் தாய்களின் கனவும் ஈடேற வேண்டுமெனில் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விதிவிலக்கு தேவை. கட்டுரையாளர்: மாநிலஒருங்கிணைப்பாளர்கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பொருளியல் துறை தலைவர், ஈரோடு கலைக்கல்லூரி/ http://epaper.theekkathir.org/

மனச்சோர்வு எனும் கொடு நோய் *********************மன நல மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டாலே ‘மன நோயாளி’ என்பதாக எடுத்துக்கொள்ளப்பட்ட காலமொன்று இருந்தது. அறிவுரை தேவைப்படுகிறவர் மட்டுமல்லாமல், அவரது குடும்பத் தினரும், இதனால் சமூகத்தில் தங்களைப் பற்றியஇளக்காரமான பார்வை ஏற்படுமே என்ற கவலையோடு, அந்த ஆலோசனையைத் தவிர்த்ததுண்டு. இன்றும், பெரும்பகுதி மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு பரவ வேண்டியிருக்கிறது என்றாலும் கூட, இதை ஒரு களங்கமாகக் கருதுகிற சமூகப் பார்வையில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் உள்பட மன நலப் பிரிவு களை வைத்திருக்கின்றன. ஆலோசனை நாடிவருவோரில் பெரும்பாலோர் டிப்ரஸ்ஸன் எனப்படும் மனச்சோர்வு என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் தெரிவித் திருக்கிறார்கள்.உலகம் முழுவதுமே இயலாமையை ஏற்படுத்துகிற காரணிகளில், மனச்சோர்வு முதலிடத்தில் இருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, 2005க்கும் 2015க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகாலத்தில், மனச்சோர்வால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்து விட்டதாகத் தெரிவிக்கிறது. வளரும் நாடு களில்தான், இந்நோயின் பாதிப்பு 80 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இந்தியாவில் 2015ல்மனச் சோர்வுக்கு சிகிச்சை தேடி மருத்துவர்களைநாடியவர்கள் 5,66,75,969 பேர். இது நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இதேகாலகட்டத்தில், கவலை தரும் எதிர்பார்ப்பு அல்லது பரபரப்பு காரணமாக மனச் சோர்வடைந்தவர்கள் 3,84,25,093 பேர் -அதாவது3 சதவீதத்தினராவர். மனதளவில் மட்டு மல்லாமல் உடல் சார்ந்த இயலாமையும் மிகப் பெரிய அளவுக்கு மனச்சோர்வு ஏற்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.மிகுந்த கவலைக்குரிய தகவல் என்ன வென்றால், தற்கொலையால் ஏற்படும் மரணங் களுக்கு மனச்சோர்வுதான் மையமான காரணி என்பதாகும். ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 லட்சத்தைத் தொடுகிறது. உலகில் 20ல் ஒருவருக்கு இப்பிரச்சனை இருப்பதாக மேற்படி ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. வேலை உள்ளிட்ட தங்களது ஈடுபாடுகளில் ஆர்வம்இழப்பது, என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் விழுவது, சமூகம் என்ன செய்யுமோ என்ற கவலையில் மூழ்குவது உள்ளிட்டவை மனச்சோர்வின் சில விளைவுகளாகும். இத்தகையவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு ஒரு சுமையாகிவிடுவதோடு, நாடும் சமுதாயமும் இவர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அரிய பங்களிப்பை இழக்க நேரிடுகிறது.உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்கள், இன்றைய சூழலில் இதற்கான ஒரு மையக் காரணியாக இருக்கும் பின்னணி பற்றி எதுவும் கூறவில்லை. அந்த மையக் காரணி, உலகமயப் பொருளாதாரச் சுரண்டல்தான். மன நல ஆலோசனைகளை நாடுவோரில் கணிசமானோர் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களாக இருப்பது தற்செயலானதல்ல. எவ்வளவு ஊதியம் பெற்றாலும் பாதுகாப்பற்ற வேலைதான் என்பதும், உலகமயமாக்கல் நடவடிக்கைகளால் மனிதர்கள் மேலும் மேலும் தனித்தீவுகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதும் மனச்சோர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பாதுகாப்புகள் மறுக்கப்படுவதோடும் இதை இணைத்துக் காணலாம். சங்க உணர்வு, கூட்டுச் செயல்பாடு ஆகிய இரண்டும் மனச்சோர்வு நோய்க்கான அடிப்படையான, வலுவான மருந்துகளாகும். http://epaper.theekkathir.org/

சிவந்தது மங்களூரு ********************* இது எங்கள் கோட்டை என்று கடந்த 10 ஆண்டுகாலமாக காவிக்கூட்டம் கொக்கரித்துவந்த நிலையில் , மங்களூரு, பிப்ரவரி 25 சனிக்கிழமையன்று சிவப்பின் கோட்டை என்பதை நிரூபித்தது.மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமை பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியது. காவிக்கும் பல்களின் மிரட்டல்களை மீறி ஆயிரம் ஆயிரமாய் செங்கொடியேந்தி மக்கள் குவிந்தனர். இப்பேரணியை அறிவித்த நாள்முதலே ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம், சீர்குலைவு வேலைகளில் இறங்கியது. இன்னும் குறிப்பாக கேரளமுதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார் என்று அறிவித்தவுடனே, பினராயிக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பரிவாரம் கூப்பாடு போட துவங்கிவிட்டது. மங்களூரு அமைந்துள்ள தட்சிண கன்னடா மாவட்டத் திற்குள் பினராயி விஜயனை நுழைய விடமாட்டோம் என்று கூச்சல் போட்டது.பினராயி வரும் நாளில் பந்த்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கூட்டம்நடக்கும் மங்களாபுரம் அமைந்துள்ள உல்லால்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தீக்கிரையாக்கியது. பினராயி வருகையை அறிவித்த பேனர்கள் ,போஸ்டர்கள், சுவரெழுத்துக்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. பினராயி வருகைக்குமுதல்நாள் பாஜக எம்.பி.யும் எம்எல்ஏக்களும்மதவெறி குண்டர்களுக்கு தலைமையேற்று, வன் முறை பேரணி ஒன்றை நடத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதற்கும் அஞ்சவில்லை. திட்டமிட்டபடி பினராயி விஜயன் வருகைதந்தார். கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலிருந்து ஆயிரம் ஆயிரமாய் மக்கள் குவிந்தனர். கேரளத்தைப் போல் கர்நாடகமும் ஆர்எஸ்எஸ் மதவெறிக்கு எதிராக நிற்கிறது என முழங்கினர். இந்தியாவின் மிகப்பெரும் தேசவிரோத சக்திஆர்எஸ்எஸ் என்பதை அம்பலப்படுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் முழங்கினார் பினராயி. 1980-கள் வரையில் சிவப்புக்கோட்டை என அழைக்கப்பட்ட தட்சிண கன்னடா மாவட்டமும் மங்களூரு மாநகரமும் மீண்டும் செம்மயமானதில் பெருமிதம் கொண்டது. http://epaper.theekkathir.org/

ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை 6

JIBON KUMAR SARKAR

JYOTI GHOSH

KANKAN SARKAR

TAPAS SARDAR

ANATH MUKHOPADHYAY

MONI MUKHOPADHYAY

JIBON KUMAR SARKAR

Saturday, February 25, 2017

Vijay Prashad on Teesta Setalvad’s Memoirs – LeftWord Blog

Vijay Prashad on Teesta Setalvad’s Memoirs – LeftWord Blog



ഭാസ്കര്‍ ദി റാസ്കല്‍ റീമേക്കില്‍ അമല | Cinema | Deshabhimani | Saturday Feb 25, 2017

ഭാസ്കര്‍ ദി റാസ്കല്‍ റീമേക്കില്‍ അമല | Cinema | Deshabhimani | Saturday Feb 25, 2017



പൊലീസിന് അഭിനന്ദനം | Editorial | Deshabhimani | Saturday Feb 25, 2017

പൊലീസിന് അഭിനന്ദനം | Editorial | Deshabhimani | Saturday Feb 25, 2017



ആര്‍എസ്എസിനേറ്റ തിരിച്ചടി; തുളുനാട് ചുവപ്പിച്ച മഹാറാലി | National | Deshabhimani | Sunday Feb 26, 2017

ആര്‍എസ്എസിനേറ്റ തിരിച്ചടി; തുളുനാട് ചുവപ്പിച്ച മഹാറാലി | National | Deshabhimani | Sunday Feb 26, 2017



സംഘപരിവാറിനെതിരെ കാര്‍ഗില്‍ രക്തസാക്ഷിയുടെ മകള്‍ | National | Deshabhimani | Sunday Feb 26, 2017

സംഘപരിവാറിനെതിരെ കാര്‍ഗില്‍ രക്തസാക്ഷിയുടെ മകള്‍ | National | Deshabhimani | Sunday Feb 26, 2017



കാണാതായ തൃക്കരിപ്പൂര സ്വദേശി അഫ്ഗാനിസ്ഥാനില്‍ ഡ്രോണ്‍ ആക്രമണത്തില്‍ കൊല്ലപെട്ടതായി ബന്ധുക്കള്‍ക്ക് വിവരം | Kerala | Deshabhimani | Sunday Feb 26, 2017

കാണാതായ തൃക്കരിപ്പൂര സ്വദേശി അഫ്ഗാനിസ്ഥാനില്‍ ഡ്രോണ്‍ ആക്രമണത്തില്‍ കൊല്ലപെട്ടതായി ബന്ധുക്കള്‍ക്ക് വിവരം | Kerala | Deshabhimani | Sunday Feb 26, 2017



കെപിഎസി ജോണ്‍സണ്‍ അന്തരിച്ചു | Kerala | Deshabhimani | Sunday Feb 26, 2017

കെപിഎസി ജോണ്‍സണ്‍ അന്തരിച്ചു | Kerala | Deshabhimani | Sunday Feb 26, 2017



വൈറ്റ് ഹൌസില്‍ മാധ്യമവിലക്ക് | World | Deshabhimani | Sunday Feb 26, 2017

വൈറ്റ് ഹൌസില്‍ മാധ്യമവിലക്ക് | World | Deshabhimani | Sunday Feb 26, 2017



'ആര്‍എസ്എസിനെ നേരിട്ടാണ് ഇതുവരെ വന്നത്; മുഖ്യമന്ത്രി കസേരയിലേക്ക് പൊട്ടിവീണതല്ല'- പിണറായി | National | Deshabhimani | Saturday Feb 25, 2017

'ആര്‍എസ്എസിനെ നേരിട്ടാണ് ഇതുവരെ വന്നത്; മുഖ്യമന്ത്രി കസേരയിലേക്ക് പൊട്ടിവീണതല്ല'- പിണറായി | National | Deshabhimani | Saturday Feb 25, 2017



നടി ആക്രമിക്കപ്പെട്ട കേസില്‍ ഗൂഢാലോചനയില്ലെന്നു പറഞ്ഞിട്ടില്ല : മുഖ്യമന്ത്രി | Kerala | Deshabhimani | Sunday Feb 26, 2017

നടി ആക്രമിക്കപ്പെട്ട കേസില്‍ ഗൂഢാലോചനയില്ലെന്നു പറഞ്ഞിട്ടില്ല : മുഖ്യമന്ത്രി | Kerala | Deshabhimani | Sunday Feb 26, 2017



സംഘപരിവാറിന് കന്നഡ നാടിന്റെ താക്കീത്; പ്രതിരോധത്തിന്റെ മഹാറാലി | National | Deshabhimani | Sunday Feb 26, 2017

സംഘപരിവാറിന് കന്നഡ നാടിന്റെ താക്കീത്; പ്രതിരോധത്തിന്റെ മഹാറാലി | National | Deshabhimani | Sunday Feb 26, 2017



ரத்த ஞாயிறு - எஸ்.ஏ.பெருமாள் ********************************ஜாராட்சியில் மக்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்பட்டன. மறுபுறம் முதலாளிகள் தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி அடக்குமுறையோடு சுரண்டினர். இதற்கெதிராக தொழிற்சங்க இயக்கம் பலமிக்க போராட்டங்களை நடத்தியது.அதேகாலத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரில் காபன் என்ற பாதிரியார் இருந்தார். அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராய் இருந்தார். அவர் வசதி படைத்தவர்களிடம் நன்கொடைகள் பெற்று அதை ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அதனால் அவர் மீது தொழிலாளிகள் மத்தியில் மரியாதையும் செல்வாக்கும் இருந்தது. காபன் பாதிரியாரின் செல்வாக்கைப் பயன்படுத்தி தொழிலாளர்களைப் பிரிக்க ஜாரும் முதலாளிகளும் திட்டமிட்டனர். 11.4.1904ல் காபன் தலைமையில் பீட்டர்ஸ்பர்க் ஆலைத் தொழிலாளர் சங்கம் என்ற புதிய அமைப்பை போலீஸ் பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டது.பீட்டர்ஸ்பர்க்கில் புத்தியோவ் என்ற பெயருள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிய மூன்று தொழிலாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதைக் கண்டித்து பீட்டர்ஸ்பர்க்கிலிருந்த 360 தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். போட்டி சங்கமான பீட்டர்ஸ்பர்க் ஆலைத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் பாதிரியாரிடம் சென்றனர்.காபன் பாதிரியாருக்கு கர்த்தரைத் தெரியும். கார்ல் மார்க்சைத் தெரியாது. பைபிளைத் தெரியும். மூலதனம் புரியாது. அவர் உடனே அவர்களிடம் ‘உங்கள் பிரச்சனைகள் ஜார் மன்னருக்குத் தெரியாது. அவர் கவனத்திற்குக் கொண்டு போனால் உங்களுக்கு நீதி கிடைக்கும். எனவே அனைவரையும் திரட்டி ஊர்வலமாய் சென்று ஜார் மன்னனை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிப்போம்’ என்றார். அந்தத் தலைவர்களும் அதற்கு இணங்கினர்.அதன்படி 9.1.1905 ஞாயிற்றுக்கிழமை ஜார் அரண்மனைக்கு ஊர்வலமாய் செல்வதென்றும், அதற்கு காபன் பாதிரியார் தலைமை ஏற்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இதை போல்ஷ்விக் தொழிலாளர்கள் எதிர்த்தனர். இதன்மூலம் நீதி கிடைக்காது என்றனர். ஆனால் பாதிரியார் சங்கம் ஏற்றது. வேறு வழியின்றி போல்ஷ்விக் தொழிலாளர்களும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தனர். அந்த ஞாயிறன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காபன் பாதிரியார் தலைமையில் ஜார் அரண்மனை நோக்கி அணிவகுத்தனர். ஜார் மன்னனின் படம், ஏசு, மரியாள் சிலை, சங்கக் கொடியுடன் சென்றனர்.ஆனால் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஊர்வலத்தினர் மீது போலீஸ் கண்மூடித்தனமாய் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தலைமை தாங்கிய காபன் பாதிரியார் ‘தொழிலாளர்களே, இனி ஜார்மன்னனை நம்பாதீர்கள்’ என்று கூறிவிட்டு தப்பியோடினார்.ஜாரின் அடக்குமுறையால் பலியான தொழிலாளர்களின் நினைவாக அந்த நாள் ரத்த ஞாயிறு என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்குப் பின்புதான் காபன் பாதிரியார் ஜார் மன்னனின் கைக்கூலி என்பது தெரிந்தது. ஜாரின் கொடூரத்தாலும் காபனின் துரோகத்தாலும் அப்பாவித் தொழிலாளர்கள் செத்து மடிந்தனர். 1906 ஏப்ரலில் காபன் பாதிரியார் ஒரு தொழிலாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்தக் கொலைகார தினத்தையே ரஷ்ய மக்கள் ரத்த ஞாயிறு என்று நினைவு கூறுகிறார்கள். ஆனால் அந்த அனுபவத்திற்குப் பிறகே லெனின் தலைமையில் போராடக் களமிறங்கினர். http://epaper.theekkathir.org/

புரட்சியின் சாதனைகள் புரட்சிக்குப்பின்பு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இந்த உரிமை பிரிட்டனில் 1928ஆம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. **************************************************** 1960கள் வரையிலும் சோவியத் யூனியனில் பொருளாதார வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமான முறையில் இருந்தது. அதனை மோசமாக விமர்சித்தவர்களும்கூட இதனை ஒப்புக்கொள்வார்கள். மிகவும் மதிக்கத்தக்க பிரிட்டிஷ் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்குஸ் மாடிசன் குறிப்பிட்டிருப்பதாவது: 1913க்கும் 1965க்கும் இடையேயான ஆண்டுகளில் ஒவ்வோராண்டும் ஏற்பட்ட சோவியத் பொருளாதார வளர்ச்சி என்பது உலகில் மிகவும் வேகமானது, அனைத்து பெரிய அல்லது வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகளின் வளர்ச்சியைவிட வேகமானது. ஜப்பானைவிட வேகமானது. ஜப்பானின் உற்பத்தி வளர்ச்சி 400 சதவீதம் என்று கூறக்கூடிய அதே சமயத்தில், சோவியத் யூனியன் உற்பத்தி வளர்ச்சி 440 சதவீதமாகும். n உள்நாட்டு யுத்தம் முடிந்ததற்குப்பின்னர் முதல் பத்தாண்டுகளில் கல்லாமை முழுமையாக ஒழித்துக்கட்டப் பட்டுவிட்டது. n அனைவருக்குமான ஆரம்பக் கல்விக்கு வகை செய்யப்பட்டது, அனைவருக்குமான கல்விக்காக ஏழு ஆண்டுகள் ஒதுக்கியபின்னர், அனைவருக்குமான இடைநிலைக் கல்விக்குப் பத்தாண்டுகள் ஒதுக்கப்பட்டது. இந்தசமயத்தில் சோவியத் யூனியனின் சாதனையை எந்தவொரு ஐரோப்பிய நாடும் எய்திடவில்லை. n நிலப்பிரபுத்துவமுறை ஒழித்துக்கட்டப்பட்டது. ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கூட்டுப்பண்ணைகள் மூலமாகவும் கூட்டுறவுகள் மூலமாகவும் நிலம் வழங்கப்பட்டன. n புரட்சியைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ பாதுகாப்பு உடனடியாக அமல்படுத்தப்பட்டது, n அனைவருக்கும் வேலை அளிக்கப்பட்டது. வேலையில்லாமை ஒழிக்கப்பட்டது. அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டதால், 1936ஆம் ஆண்டில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் மூடப்பட்டன. n புரட்சிக்குப்பின்னர் பொறுப்பேற்ற புதிய அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்று பெண்களுக்கு சம உரிமைகள், சம ஊதியங்கள் வழங்கப்பட்டதாகும். மகப்பேறு பயன்களுக்கான உரிமைகளும், மணவிலக்கு பெறும் உரிமையும் வழங்கப்பட்டது. புரட்சிக்குப்பின்பு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இந்த உரிமை பிரிட்டனில் 1928ஆம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. n மக்களுக்கான கலாச்சார நடவடிக்கைகள் அபரிமிதமானமுறையில் விரிவாக்கப்பட்டன. திரைப்படங்கள் தயாரித்தல், இசை மற்றும் கலை முதலிய கலாச்சார உற்பத்திக்கும், புத்தகங்கள் அச்சடிப்பதற்கும் அரசே நிதி உதவி அளித்தது. சிபிஎம் மத்தியக்குழு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து... தமிழில் : ச.வீரமணி http://epaper.theekkathir.org/

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள்

தில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி குண்டர்களை ஏவி வன்முறை வெறியாட்டம் ******************புதுதில்லி, பிப். 24- தில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி குண்டர்களின் கொலைவெறியாட்டத்தால் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். தில்லி காவல்துறையின் துணையோடு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் சமூகமும்- இலக்கியமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் பிப்ரவரி 22ல் நடைபெற இருந்தது. ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்களான உமர்காலித் மற்றும் ஷீலாரஷித் ஆகியோரும் இந்த கருத்தரங்க அமர்வில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். உமர்காலித், மலைவாழ் மக்களின் வாழ்வியல் குறித்ததொரு தலைப்பில் உரையாற்றுவதாக இருந்தது. இந்நிலையில் கருத்தரங்கம் துவங்குவதற்கு முன்பாக, ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இக்கருத்தரங்கத்தை நடத்தவிடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்தரங்கம் நடைபெற உள்ள அரங்கத்தின் அருகே கூச்சலிட்டனர்.இந்நிலையில் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், வழக்கமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்க அமர்வை சீர்குலைக்கும் நோக்கோடு, ஏபிவிபியை சேர்ந்தவர்களும் மாணவர் அல்லாத ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களும் இணைந்து சீர்குலைக்கின்றனர் என்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை அலுவலகத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளனர்.இந்நிலையில் ஏபிவிபி, ஆர்எஸ்எஸ் குண்டர்கள்தேசத்துரோகிகளை தில்லி பல்கலை.யில் அனுமதிக்கமாட்டோம் என உமர்காலித், ஷீலாரஷித் மற்றும் ஜேஎன்யுவிற்கு எதிராக கூச்சலிட்டனர். ஆங்கிலத்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் புகாரை பெற்றுக்கொள்ள தயாராக இல்லாத காவல்துறையை கண்டித்து அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.இதனால் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தானே காவல்நிலையம் அருகில் ஜனநாயகமுறைப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் அகில இந்திய மாணவர் கழகம்(ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ)அமைப்பினர் ஆங்கிலத்துறை மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் ஜன நாயக அத்துமீறலுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்த ஜனநாயக முறையிலான எதிர்ப்புணர்வை ஏற்றுக்கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ், ஏபிவிபி குண்டர்கள் திடீரென தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மிக கடுமை யாக தாக்கப்பட்டனர். இங்கு நடைபெற்ற அத்துனைவன்முறை வெறியாட்டத்தையும், தில்லி காவல் துறை வேடிக்கை பார்த்தது. ஒரு கட்டத்தில் காவல்துறையினரும் சேர்ந்துகொண்டு பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மீது தடியடி பிரயோகத்தை நடத்தினர். இந்த திட்டமிட்ட வன்முறையில் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜேஎன்யு தேசவிரோத கூடாரம், உமர்காலித் தேசவிரோதி, ஏஐஎஸ்ஏ, எஸ்எப்ஐ, தேசவிரோத அமைப்புகள் என்றும், இடதுசாரிகள் தேசவிரோதி கள் என்றும் ஏபிவிபியினர் கூச்சலிட்டனர்.இந்நிலையில் திட்டமிடப்பட்ட கருத்தரங்கம் நடைபெறவில்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக காவிக்கும்பல் நடத்திய வன்முறை மீது உரியவிசாரணை நடத்தி குற்றவாளிகளான ஏபிவிபி மற்றும்ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கைது செய்யப்பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம், பல்வேறுகல்வியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

பிழைக்கத் தெரியாதவர்கள் அல்ல; பிழை செய்யத் தெரியாதவர்கள் சென்னை கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பெருமிதம் ************************சென்னை, பிப். 25 - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிபிஎம் ஊழியர்கள் தி.சிவக்குமார், எம்.முகமது அலியார் ஆகியோரை பொய் வழக்கில் சிறையில் அடைத்ததை கண்டித்தும் வெள்ளியன்று (பிப். 24) கோடம் பாக்கம் ரயிலடியில் பொதுக் கூட் டம் நடைபெற்றது.சிபிஎம் ஆயிரம் விளக்கு பகுதிக் குழு சார்பில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியதன் சுருக்கம் வருமாறு:ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பாஜக அரசின் நடவடிக்கையால் குறுந்தொழில்கள் அழிந்துவிட்டன. சிறு தொழில்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 40 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்குவதற்காக தாங்கள் பதுக்கி வைத்திருந்த கறுப்பு மற்றும் கள்ளப்பணத்தை கொண்டு 60 லட்சம் வரைக்கும்கொடுத்து சீட்டு வாங்கினார்கள்.மத்திய அரசின் நடவடிக்கை யால் தற்போது எம்பிபிஎஸ் சீட்டுஒரு கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை காசோலையாகப் பெறும் கல்லூரி நிர்வாகங்கள் அதற்கான வரியை கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை எடுத்துக்கொள்ள பதுக்கல் பேர் வழிகளுக்கும் பணக்காரர்களுக்கும் மோடி அரசு வழிவகை செய்து கொடுத்துள்ளது.இதுபற்றியெல்லாம் பேசினால் பிழைக்கத் தெரியாதவர்கள் என்கிறார்கள். பிழைக்கத் தெரியாதவர் கள் அல்ல; பிழை செய்யத் தெரியாதவர்கள் நாங்கள். எனவேதான் 3 மாநிலத்தில் ஆட்சி செய்தும், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எங்கள் மேல் இல்லை.மகாபாரதத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று ஒன்று உண்டு. திருதராஷ்டிரன் பீமனை அழைத்து கட்டிப்பிடிக்க முயற்சிப் பான். சூழ்ச்ச்சியை உணர்ந்த கிருஷ்ணன் பீமனை விலக்கிவிட்டு இரும்புச் சிலையை திருதராஷ்டிரனிடம் தள்ளி விடுவான். திருதராஷ்டிரன் அணைத்ததும் அந்த இரும்புசிலை நொறுங்கி விழும். அதுபோல் ஜெயலலிதா சாவுக்கு வந்த மோடி, சசிகலா தலையில் கைவைத்தார் அதிமுக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்டிப் பிடித்தார். இப்போது தமிழக அரசுக்கு முழு ஆதரவு என்று கூறி ஓ.பன்னீர்செல்வத்தை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். அதிமுகவை உடைக்க 2 மத்திய அமைச்சர்கள் வேலை செய்வதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியே ஒப்புக் கொண்டுள்ளார்.தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தால் உற்பத்தி பாதிக்கப்படும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். குற்றச் செயல்கள் அதிகரிக்கும். வேலைதேடி நகரங்களை நோக்கி மக்கள் வருகிறார்கள். இடப் பெயர்வு அதிகமாகும். இதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு கட்சி எம்எல்ஏக்களை அடைத்து வைப்பதும், மற்றொரு கட்சி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதுவும்தான் நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளை திசைதிருப்புகின்றனர். மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே போராடி வருகிறது.ரேசன் கடைகளை வேகமாக ஒழிப்பதோடு, மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு மறைமுக வரி 20 ஆயிரம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வறட்சிக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நிலையான அரசு அமைய வேண்டும், வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். திசைதிருப்பும் ஆளும் வர்க்கம் “சென்னை நகரில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, 3.50 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கம், ரேசன் பொருட்களுக்கான மானியம் ரத்து, லட்சக்கணக்கானோருக்கு 6 மாத காலமாக சமையல் எரிவாயு மானியம் வழங்காதது, அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் குற்றம் சாட்டினார். “மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே மக் கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடுகிறது. எனவே, காவல்துறை மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்ளை தாக்குகிறது, பொய்வழக்குகளைப் போடுகிறது. இதனை எதிர்கொள்வோம் முன்னேறுவோம்” என்றும் பாக்கியம் கூறினார்.பொதுக்கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் இ.மூர்த்தி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் அ.வெங் கட் வரவேற்றார். பகுதிச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், பகுதிக் குழு உறுப்பினர்கள் வெ.இரவீந்திரபாரதி, தி.சிவக்குமார், வாலிபர் சங்கத்தலைவர் மு.ப.மணிகண்டன், மாதர் சங்கத் தலைவர் வி.செல்வி, ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். பார்த்தசாரதி புரம் கிளைச் செயலாளர் நன்றி கூறினார். http://epaper.theekkathir.org/

நைனிடால் விராட் கோலிக்கு விளம்பர ஊதியம் வழங்கியதில் சர்ச்சை ***************** உத்தரகாண்ட் மாநில அரசின் விளம்பர படத்தில் நடித்ததற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்ட ஊதியம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்விளம்பரப் படத்தில் விராட் கோலி நடித்தார்.இதற்காக விராட் கோலிக்கு 47 லட்சத்து19 ஆயிரம் ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2013-ஆம்ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட கடும்வெள்ளத்தையொட்டி பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிவாரண நிதியில் இருந்து, விராட் கோலி க்கான ஊதியம் எடுக்கப்பட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது.

தொழிலாளர்களை கசக்கிப் பிழிய விரைவில் சட்டத்திருத்தம் ஏற்றுமதியாளர் சங்கத்தாரிடம் மத்திய அமைச்சர் உறுதி ******************** திருப்பூர், பிப்.25 – தொழிலாளர்களின் மிகை நேரம் (ஓவர்டைம்) வேலை அளவை இருமடங்காக அதிகரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளார்.கோவை தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) நிகழ்வில் வெள்ளியன்று பங்கேற்றமத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொது ச்செயலாளர் டி.ஆர்.விஜயகுமார், துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஈ.பழனிசாமி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பின்னலாடை ஏற்றுமதி தொழிலில் மிகைநேர வேலை அளவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போதுள்ள சட்டப்படி, காலாண்டிற்கு ஒரு தொழிலாளியிடம் அதிகபட்சம் 50 மணி நேரம்தான் மிகைநேரம் (ஓவர்டைம்) வேலை வாங்க வேண்டும். அதை இரு மடங்காக அதாவது மூன்று மாதங்களுக்கு 100 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதிலளித்த அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “இது குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்து விரைவில் மிகைநேரம் அதிகரிக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்ததாக விஜயகுமார் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.தற்போது நடைமுறையில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் தொழிலாளர்களிடம் சட்டத்தை விட கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுகிறது. எனினும் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் சட்டப்படி வேலை வாங்குவதாகக் கூறப்ப டுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக தொழிலாளர்களை கூடுதல் வேலைவாங்குவதாக வெளிநாட்டு வர்த்தகர்கள் அறிந்தால், வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடும். எனவே சட்டப்படி நடப்பதாக காட்டிக் கொள்வதற்காக, தற்போதுள்ள கடுமையான வேலை நேரத்தையே சட்டமாக மாற்றிவிட ஏற்றுமதியாளர்கள் விரும்புகின்றனர். திருப்பூர் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஏற்றுமதித் துறையில் இருக்கும் முதலாளிகள் தொடர்ந்து பலஆண்டு காலமாக இதை வலி யுறுத்தி வருகின்றனர்.எனினும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த காலத்தில் மிகை நேர சட்டத்தை மாற்ற முடியவில்லை. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக உள்ளது. அதன்படியே மிகைநேர வேலை அளவை இரண்டு மடங்காக்கவும் சட்டத் திருத்தம் கொண்டு வர உள்ளனர்.இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும்பட்சத்தில், தற்போது நடைமுறையில் இருக்கும் அதிக வேலைநேரத்தை விட, மேலும் கூடுதல் நேரம் தொழி லாளர்களை கசக்கிப் பிழியும் வாய்ப்பையும் ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.இத்துடன் நடப்பில் உள்ள 44 தொழிலாளர் உறவு தொடர்பான சட்டங்களைத் தொகுத்து நான்கு வழிகாட்டு நெறிமுறைகளாக மாற்றப் போவதாகவும் கோவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தில்லி திரும்பியவுடன் திருப்பூரில் நூறு படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட ரூ.150 கோடி அனுமதிக்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து 200 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.கோவை வட்டார ஜவுளித் தொழில் சார்ந்த அமைப்புகளை தில்லிக்கு வரவழைத்துப் பேசி தொழில்நிலவரம் குறித்து கேட்ட றிய இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

காலிப்பணியிடங்களை நிரப்புக! சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துக! குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர் மாநாடு வலியுறுத்தல் *************** கோயமுத்தூர், பிப். 25 – சட்ட சமூக பாதுகாப்பின்றி பல ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர் மத்திய அமைப்பின் மூன்றாவது மாநில சிறப்பு மாநாடு பொள்ளாச்சியில் வேணுகோபால் நினை வரங்கத்தில் சனியன்று நடைபெற்றது. மத்திய அமைப்பின் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை சங்கத்தின் உதவித்தலைவர் சி.அய்யப்பன் ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழு தலைவர் மா.ஆத்மநாபன் வரவேற்றார். சங்கத்தின் மத்திய அமைப்பின் பொருளாளர் வி.அழகுமலை மாநாட்டை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டு பிரதிநிதிகள் விவாதித்தனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், உதவி தலைவர் வி.பெருமாள், பொள்ளாச்சி சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் உதவி தலைவர் இ.பொன்முடி சிறப்புரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் மோ.பாலகுமார் பேசினார். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.சரவணன் நன்றி கூறினார். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யப்பட வேண்டும், இதுகுறித்து அந்தந்த மாவட்ட தொழிலாளர்துறை நீதிமன்றங்கள் வழங்கப்பட்ட சாதகமான தீர்ப்புகளை உடனடியாக அமலாக்கப்பட வேண்டும், அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் சீராக விநியோகம் செய்திட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும், அவுட்சோர்சிங் என்கிற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை பணியமர்த்துவதை கைவிட ேண்டும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 300 ஆய்வக ஊழியர்களுக்கு உடனே வேலை வழங்கு, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் சங்கத் தலைவர்கள் மீது தொடுக்கப்படும் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு நிகழ்வில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர் http://epaper.theekkathir.org/

நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வருடன் இன்று சந்திப்பு? ********************************புதுக்கோட்டை, பிப். 25 - நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஞாயிறன்று முதல்வரை சந்திக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இது விவசாயத்தை நாசமாக்கி, 5 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கை என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நெடுவாசலை நோக்கி வரும் அவர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. சனிக்கிழமையன்று நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். நெடுவாசல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, ஆவணம், வடகாடு, கருக்காகுறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றது. பேரணி சென்ற இடமெல்லாம், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்று விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் நெடுவாசல் கிராம மக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “மீத்தேன் திட்டத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா; கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டபோதும் ஜெயலலிதா எதிர்த்தார்; அந்த வகையில், விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட எங்களது அரசு, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் விஷயத்திலும் விவசாயிகள் நலனை காப்போம்” என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.நெடுவாசல் பிரச்சனை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் எடுத்து சொல்லியிருப்பதாகவும், நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வரை சந்திப்பார்கள் என்று கூறிய விஜயபாஸ்கர், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டுக்கொள்ளும் முதல்வர், பிரதமரைச் சந்திக்கும் போது, நெடுவாசல் பிரச்சனை பற்றி பேசுவார் என்றும் தெரிவித்தார். http://epaper.theekkathir.org/

பிப்.28ல் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்,ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்கள் ***********************சென்னை, பிப், 25- நெடுவாசல், காரைக்கால் பகுதிகளில் செயல்படுத்தவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியக்கம் பிப்.28ல் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தவுள்ளது. இதுதொடர்பாக கூட்டியக்கத் தின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஎம்), இரா.முத்தரசன்(சிபிஐ), தொல்.திருமாவளவன்(விசிக) ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு மற்றும்எண்ணெய் எடுக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இந்த முடிவு அப் பகுதி மக்களிடமும், தமிழகத்தின் இதர பகுதியில் உள்ளோரிடமும் கவலையையும், அச்சத்தையும் ஏற் படுத்தியுள்ளது. 6000 அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுத்திடும் மத்திய அரசின் திட்டத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு விடும். 5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும், சுற்றுச் சூழலையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அப்பகுதி மக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையான முறையில் திட்டத்திற்கு அனுமதி அளித் துள்ள மத்திய அரசை மக்கள் நலக்கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.எனவே, மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 28.2.2017 அன்று காலை 10 மணிஅளவில் ஆலங்குடியில் மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் தலைவர்கள் தோழர்கள் ஜி.ராமகிருஷ் ணன், ஆர்.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மக்கள் நலன் காக்கும் இந்த கண்டனஇயக்கத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் மக்கள் நலக்கூட்டு இயக்கத் தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழுஆலோசனைக் கூட்டம் ஆலங்குடியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட் டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி கலைமுரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் எம்.உடையப்பன், எஸ்.சுந்தர் ராஜன், ஏ.ஸ்ரீதர், சொர்ணகுமார், எல்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் 5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அமல்படுத் தக்கூடாது என்றும் அப்பகுதி மக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் எதேச் சதிகார முறையில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை வன்மையாகக் கண்டித்தும்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மேலும், மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பில் பிப்.28ஆம் தேதி, இத்திட்டத்தை எதிர்த்து ஆலங்குடி கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது வெற்றிகரமாக்குவது என தீர்மானிக்கப்பட் டது. விழிப்புணர்வுப் பேரணி புதுக்கோட்டை, பிப்.25- எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிறன்று (26.2.2017) நடைபெற உள்ள உண்ணாவிரத போராட் டம் குறித்து நெடுவாசல் மற்றும்அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் தடுப்பு இயக்கத்தின் மூலம் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.நெடுவாசலில் தொடங்கி கருக்காகுறிச்சி, வெட்டன்விடுதி, ஆலங்குடி, புள்ளான்விடுதி, வடகாடு, மாங்காடு, ஆவணம், பேராவூரணி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட் டது.மேலும், நெடுவாசல் கடைவீதி மற்றம் எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் பெண்கள்காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வீடு வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். http://epaper.theekkathir.org/

Is it ‘absurd’ to link the killing of an Indian in Kansas to Trump’s stance on immigration?

Is it ‘absurd’ to link the killing of an Indian in Kansas to Trump’s stance on immigration?



Political crises in Tamil Nadu, three other states expose the shortcomings of the anti-defection law

Political crises in Tamil Nadu, three other states expose the shortcomings of the anti-defection law



Read what VD Savarkar wrote: Care for cows, do not worship them

Read what VD Savarkar wrote: Care for cows, do not worship them



Secularism is much deep-rooted in Indian-soil than British-exported Communalism.2day,CPIM's Mangaluru Rally proves it,again.