This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 20, 2017
புறந்தள்ள முடியாத கேள்விகள்... இளவரசன் மரணம் தொடர்பான டாக்டர் சம்பத் குமாரின் நேர்காணலைப் படித்தேன். அவர் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் மிக மிகநுணுக்கமானவை. வலப்புற தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளவரசனுக்கு உடலின் இடதுபுறத்தில் எப்படி காயம் ஏற்பட முடியும்?என்ற கேள்வி துவங்கி, எந்த ஒரு கேள்வியையும் புறந்தள்ள முடியாது. சம்பத்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தபோது,இளவரசனின் உடலில் ரயிலின் கிரீஸ் இல்லை. ஆனால், எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனையின்போது அது வருகிறது. இளவரசனின் வெள்ளைச் சட்டை திடீரென காணாமல் போகிறது. கழுத்துப் பகுதியில் அடிபடும்போது, முதுகெலும்பில் காயமோ, எலும்பு முறிவோ ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இளவரசனுக்கு அது இல்லை. ரயிலில் அடிபட்டால் நீண்ட தூரம் தூக்கி வீசப்பட வேண்டும். அது நடக்கவில்லை.குறைந்த தூரத்தில் தூக்கி வீசப்பட்டாலும், உடலில் காயங்கள் ஏற்பட வேண்டும். அதுவும் ஏற்படவில்லை என்று வரிசையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. முக்கியமாக இடதுகையில் பின்புறத்தில் ஏற்பட்ட காயம், தாக்குதலைத் தடுக்கும்போது ஏற்படக் கூடியது என்பதை வைத்துப் பார்த்தால் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கே வர முடியும் என்று சம்பத்குமார் கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கையில், மிக முக்கியமான வழக்கிலும் கூட, சிலரால் அதிகாரம் செலுத்த முடிந்திருக்கிறது என்பதுதான். இச்செய்தியை முழுமையாக வெளியிட்டதீக்கதிருக்கு நன்றிகள். - தரு.சீவகன், பண்ருட்டி
Labels:
THEEKATHIR