This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 2, 2017
தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு செயலாளராக டாக்டர் ஜெயராணி காமராஜ் தேர்வு சென்னை, மார்ச் 2- 83- வருட பாரம்பரியமிக்க ‘தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு’ வருடந் தோறும் தலைவர் மற்றும் செயலாளரை தேர்வு செய்கிறது. மருத்துவத்துறையில் மாபெரும் சாதனை படைத்த மருத்துவர்கள், அந்த பதவிகளை வகித்து மருத்துவ உலகிற்கு மாபெரும் சேவை செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டுக் கான தலைவராக மருத்துவர் வேணியும், செயலாளராக டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜூவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மருத்துவர் கே.எஸ் ஜெயராணி காமராஜ், பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்.சென்னை வடபழனியில் அமைந்திருக் கும் ‘ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம்’ என்ற புகழ்பெற்ற மருத்துவமனையின் இயக்குநராக செயல்படுகிறார். 29 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றிவரும் இவர், நவீன கருத்தரிப்பு தொழில்நுட்பம் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளின் ஏக்கத்தை தீர்த்து, அவர்களுக்கு தாய்மைப்பேறு கிடைக்கச் செய்துகொண்டிருக்கிறார். ‘குழந்தையின்மை என்ற குறை இனி யாருக்கும் இல்லை’ என்கிற கோட் பாட்டுடன் மருத்துவ சேவையாற்றி வரும் இவர் பல ஆயிரம் பெண்களை நவீன மருத்துவத்தின் மூலம் தாய்மையடைய செய்திருக்கிறார். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகச்சிக்கலான பிரசவங் களையும் எளிதாக கையாண்டு “கைராசியான மருத்துவர்’’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான மருத்துவ மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் பங்குபெற்றிருக்கும் மருத்துவர் கே.எஸ் ஜெயராணி மருத்துவத்துறைக் கல்வி மற்றும் சேவைகளுக்காக ஏராளமான பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது கணவர் மருத்துவர் டி. காமராஜ் பிரபல பாலியல் மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத் தக்கது.தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பின் புதிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் ‘‘மகப்பேறு மற்றும் மகளிர் நலம் சார்ந்த விஷயங்களில் பெண்களிடையே மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்க இருப்பதாக’’ குறிப்பிட்டுள்ளார்.மருத்துவர் கே.எஸ். ஜெயராணி காமராஜ் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு மருத்துவர்களும், அவரிடம் சிகிச்சை பெற்று தாய்மையடைந்த ஏராளமான தாய்மார்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
