This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 2, 2017
நெடுவாசலில் ஏர், கலப்பை, காய்கறிகளுடன் சாரைசரையாக மக்கள் திரண்டனர் விழிபிதுங்கியது அரசு எந்திரம்************************************** புதுக்கோட்டை, மார்ச்.2- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 15-வது நாளானநேற்று நடைபெற்ற போராட்டத் தில் ஏர், கலப்பை, மாட்டு வண்டி,காய்கறிகளுடன் பல்லாயிரக்கண க்கானோர் திரண்டனர். முடிவு எடுக்க முடியாமல் திணறியது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும். ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு முனைகளில் இருந்தும் ஏராளமானோர் நெடுவாசலை நோக்கிப் படையெடுத்து வரு கின்றனர். 15-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங் களில் இருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களுமாக பல்லா யிரக்கணக்கில் திரண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏராளமான மாட்டு வண்டி, டிராக்டர்களில் ஏர், கலப்பை மற்றும் தாங்கள் விளைவித்த காய்கறிகள், செடி, கொடிகளைச் சுமந்து வந்து போராட்டத்தில் குவிந்தனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை விமர்சித்தும், தொலைக்காட்சி விவாதங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக பேசுபவர்களை எதிர்த்தும் ஆயிரக் கணக்கான பெண்கள் முழக்க மிட்டது அனைவரையும் ஆச்சர்ய த்துக்கு உள்ளாக்கியது. மாவட்ட நிர்வாகம் திணறல்நேற்று முன்தினம் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினர். அப்போது திட்டதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என உறுதியளித் துள்ளார். இதனால், போராட்டம் வாபஸ்பெறப்படும் என மாவட்ட நிர்வாகம் நம்பி இருந்தது. ஆனால்,கள நிலவரம் இதற்கு நேர்மாறாக இருந்தது. மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த பிறகுதான் போராட்டத்தை கைவிடு வோம் என உறுதிபடத் தெரிவித் தனர்.பேச்சுவார்த்தைக் குழுவினரைமாவட்ட ஆட்சியர் அழைத்துபோராட்டத்தை முடித்துக்கொள்வ தாக அறிவிக்கும்படி தொடர்ந்து நெறுக்குதல் கொடுத்து வந்த தாகக் கூறப்படுகிறது. போராட்டக்குழுவினரோ போராட்டக் களத்தின் நிலைமையைக் கணக்கில் எடுத்தே முடிவெடுக்க முடியும் என தொடர்ந்து ஆட்சியரி டம் தெரிவித்து வந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர், ஆலங் குடித் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் சிவ.வீ.மெய்யநாதன், நாகைசட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகங்கை குண சேகரன், எஸ்.ராஜசேகரன், சிபிஎம்மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐமாவட்டச் செயலாளர் த.செங்கோ டன், நடிகர் விக்னேஷ் உள்ளிட் டோர் பேசினர். பாடகர்கள் செந்தில் கணேஷ்-ராஜலெட் சுமி உள்ளிட்ட பல்வேறு குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் போராட் டக்களத்தை உற்சாகப்படுத்தியது.விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம். மாவட்ட நிர்வாகிகள் எம்.முத்துராமலிங்கம், எம்.உடையப்பன், ஏ.ஸ்ரீதர், எம்.பாலசுந்தரமூர்த்தி, சி.ஜீவானந்தம், துரை.நாராயணன், விக்கி உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
