SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 15, 2017

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி கோரி ஆர்ப்பாட்டம் சென்னை, மார்ச் 15- மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிரந்தர மாற்றுப் பணி வழங்கக் கோரி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று (மார்ச் 15) அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுகுறித்து தலைவர் எஸ்.அப்புனு செய்தியாளர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் நிர்வாகம் அரசின் முடிவின்படி 1000 கடைகளை மூடியது. அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு மற்ற கடைகளில் பணியமர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தாலும், மாவட்ட நிர்வாக மேலாளர்கள் அதை செயல்படுத்துவதில்லை. தன்னிச்சையாக விருப்பு வெறுப்பு அடிப்படையில் இடமாற்றம், கடை மாற்றம் செய்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.1000 கடைகளில் பணியாற்றிய ஊழியர்களின் பணியை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். 11 வருடங்களாக பணியாற்றி வந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. டான்சி நிர்வாகம் மூடப்பட்ட போது முதன்மை அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது. அதுபோல் டாஸ்மாக் நிர்வாகம் தொழிற்சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி மற்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை இந்த ஊழியர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பணிவரன்முறை, காலமுறை ஊதியம், தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்க வேண்டும், சர்வீஸ் ரெக்கார்டுகளை உருவாக்க வேண்டும், சம்பளம் உள்ளிட்ட அனைத்திற்கும் ரசீது வழங்க வேண்டும், கடைகளின் அளவுக்கேற்ப சரக்குகளை அனுப்ப வேண்டும், பணிமூப்பு பட்டியலை இடஒதுக்கீடு அடிப்படையில் உருவாக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.பொதுச் செயலாளர் மா.அ.சரவணன், தென்சென்னை சிஐடியு தலைவர் இ.பொன்முடி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் இ.அன்பு, என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.