This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, March 18, 2017
திருப்பூர் ரேசன் கடைகளில் பொருள் விநியோகம் சீரழிவு கள ஆய்வு விபரத்தை முன்வைத்து உ.வாசுகி குற்றச்சாட்டு திருப்பூர், மார்ச் 18 - திருப்பூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் மக்களுக்கு வழங்கும் அரிசி, துவரை, உளுந்தம் பருப்பு வகைகள் விநியோகம் செய்வது கடந்த மூன்று மாதங்களில் படுமோசமாக சீர்குலைந்துள்ளது என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத்துணைத் தலைவர் உ.வாசுகி சாடினார்.திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் சனியன்று செய்தி யாளர்களிடம் பேசிய உ.வாசுகி கூறியதாவது:தமிழகத்தில் ரேசன் கடைகளில் தட்டுப்பாடில்லாமல் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜும், கூட்டுறவுத் துறை அமைச்சர்செல்லூர் ராஜூவும் கூறிவருகின்ற னர். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை தமிழகம் முழுவதும் கள ஆய்வு செய்ய மாதர் சங்கம் முடிவு செய்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 16 கடைகளில் கள ஆய்வுசெய்யப்பட்டது. இதில் 250 ரேசன் கார்டுகளுக்கு ஒரு கடை என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் 10 கடைகளில் 1000 முதல் 1500 ரேசன் கார்டுகள் உள்ளன. 6 கடைகளில் 500 முதல் 1000 கார்டுகள் வரை உள்ளன. எல்லா கடைகளிலும் பொருட்கள் முழுமையாகக் கிடைப்பதாக அமைச்சர்கள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எதார்த்தத்தில் நிலைமை அப்படி இல்லை. கோதுமை இலவசமாகத் தருவதாகச் சொல்கிறார்கள்; ஆனால் பச்சரிசி, புழுங்கலரிசியைக் குறைத்து கோது மை தருவதால் தமிழக மக்களுக்கு உதவாது. மேலும் கோதுமை மாவு அரைக்கவும் தனியாக செலவு செய்ய வேண்டியிருக்கும். துவரம் பருப்பு,உளுந்தம் பருப்பு ஒரு மாதம் மாற்றி ஒரு மாதம் என ரேசன் கார்டுகளுக்கு வழங்கி வந்தனர். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஒன்றுமே கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. அதேபோல் 3 லிட்டர் மண்ணெண் ணெய் ஊற்றிவிட்டு 5 லிட்டர் எனவும்,2 லிட்டர் ஊற்றிவிட்டு 3 லிட்டர்எனவும் குறுஞ்செய்தி அனுப்பு கின்றனர். கேஸ் சிலிண்டர் இல்லாத வர்களும் சிலிண்டர் வைத்திருப்பதாக தவறாக குறிப்பிடுகின்றனர். அத்துடன் ரேசன் கார்டுகளுடன் ஆதார் பதிவை இணைப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப கூறியபோதும் எல்லா பக்கமும் கட்டாயப்படுத்து கின்றனர். 8 கடைகளில் 813 பேர் ஆதார் அட்டை இணைக்கவில்லை என்று பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உணவுப் பாது காப்புச் சட்டத்தில் இணைந்த பிறகு தமிழகத்தில் ரேசன் முறை மிகமோசமான முறையில் சீர்குலைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உ.வாசுகி கூறினார்.பேட்டியின்போது மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈ.அங்குலட்சுமி, மாவட்டச் செய லாளர் ஜி.சாவித்திரி, பொருளாளர் அ.ஷகிலா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
