SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

மகத்தான தேசபக்தப் போர் 1939ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஏகாதிபத்தியத்தின் இயல்பில் உள்ள முரண்பாடுகளும் ஏகாதிபத்தியங்களிடையே, கூர்மைப்பட்ட போட்டிகளும் இவ்வழிவிற்குக் காரணங்கள் ஆகும். இத்தகைய பெரிய, திட்டமிட்ட, கொலைகார நடவடிக்கைகளுக்கு, மேற்கத்திய அரசுகள், தங்களுடைய ‘சோவியத் எதிர்ப்பு’க் கொள்கையின் பொருட்டு, துணை நின்றன. அந்த உலகப் போருக்கு முந்தைய காலத்தில், ஆங்கிலேய, பிரெஞ்சு, அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சின்னஞ்சிறிய ஐரோப்பிய அரசுகளின் நலன்களைப் பலியிட்டு, இட்லரின் ஜெர்மனியை சமாதானப்படுத்த முயன்றார்கள்.இட்லரின் ஆதிக்கத்தில் சிக்கிய ஜெர்மனி, உலகப் போரைக் கட்டவிழ்த்துவிட்டதும் தொடக்கத்தில், மளமளவென்று, அது வெற்றிபெற்றது. கொலை, நாசவேலைகளை மேற்கொண்டு புறப்பட்ட, ஜெர்மன் படைகள், ஒரு நாடு, அடுத்த நாடு எனப் பிடித்து வெற்றிநடைபோட்டன. உலகம், அதற்குமுன் அவ்வளவு பெரிய போரைக் கண்டதில்லை. அவ்வளவு கோரமான கொடுமைகளையும் கண்டதில்லை. அப்போரில், முன்னர் நேரிடாத அளவு பெருமளவில் சாவுகள் ஏற்பட்டன; இரத்தம் ஆறாகப் பெருகியது. அது உலகில் மனித நாகரிகத்தையே அழித்துவிடும் வகையில் அச்சுறுத்தியது.ஏகாதிபத்தியங்களும் மேற்கத்திய நாடுகளும் தாலாட்ட, வளர்ந்த, ஜெர்மானிய நாசிச சக்தி, தொடக்கத்தில் மளமளவென்று பெற்ற வெற்றிகளால் வெறிகொண்டு, இருபத்தியொன்று திங்களுக்குப் பிறகு, கிழக்கு திசைக்குத் திரும்பி, சோவியத் நாட்டைத் தாக்கிற்று.1941ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22ஆம் நாள் புலரவும் இட்லரின் படைகள், சோவியத் நாட்டின் மேல் முன்னறிவிப்பின்றி படையெடுத்தன. ஒன்றை ஒன்று தாக்குவதில்லை என்ற தோர் உடன்படிக்கை அப்போது சோவியத் ஒன்றியத்திற்கும் ஜெர்மனிக்கும் இடையில் இருந்தது. அதையும் உதறிவிட்டு, ஐம்பது லட்சம் ஜெர்மானியப் படைகள், ஆயிரக்கணக்கான விமானங்கள், டாங்கிகள், பீரங்கிகள், பிற போர்க் கருவிகளோடு, சோவியத் நாட்டை பெரிய அளவில் தாக்கும்படி அனுப்பப்பட்டன. சோவியத் மேல் படையெடுக்க வந்த இட்லரின் அதிகாரிகளும் படைவீரர்களும் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் போரில் திறமைமிக்கவர்கள்.ஆதிக்கவெறி பிடித்த இட்லரின் நப்பாசை என்ன? சில வாரங்களில் சோவியத் நாடு முழுவதையும் பிடித்துக் கொள்ளலாமென்று மனக்கோட்டை கட்டினான். நாசிசப் படை சோவியத் நாட்டை வென்ற பிறகு, தொடர்ந்து முன்னேறி இந்தியாவையும் பிடிப்பதற்கு இட்லர் திட்டம் தீட்டி ஆயத்தமாக வைத்திருந்தான்.ஆத்திரமூட்டல் எதுவும் நடவாதபோது, துரோக சிந்தனையோடு, ஜெர்மானியர், பெரும்படை கொண்டு தாக்கியதும் சோவியத் மக்கள் வியப்பில் வீழ்ந்தனர்; இட்லரின் தாக்குதலுக்கும் இந்தியாவைப் பிடிக்கும் கனவிற்கும் வழிவிடாத, உடையாத, பெருஞ்சுவராக, சோவியத் மக்களும் படைகளும் இணைந்து நின்றனர். சாவையும் மோதி மிதித்துவிடும் வகையில் சோவியத் மக்கள் போராடியது இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவே, பாசிச முறியடிப்பை உறுதிப்படுத்தியது. ஜெர்மானிய நாசிசத்தை முறியடிப்பதில் பல நாடுகளுக்குப் பங்கு உண்டு என்றாலும் ஒவ்வொரு நாடும் சம பங்கு எடுத்துக் கொண்டது என்று கூற இயலாது; சோவியத் நாட்டின் பங்களவு பிற எந்த நாட்டின் பங்கும் இல்லை. இரண்டாம் உலகப்போரின் முடிவுகளை நிர்ணயித்த போராட்டங்கள், சோவியத் ஜெர்மன் களங்களிலேயே நடந்தன; வெற்றி பெற்றன. சோவியத் மக்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாது, மனித இனத்தின் எதிர்காலத்தையும் மிக நீண்ட சோவியத் படைகள், ஜெர்மானியப் படைகளைப் படுதோல்வியடையச் செய்தன; பெர்லின் நகர்வரை விரட்டிச் சென்று, அங்கு செங்கொடியை ஏற்றி வைத்து, வெற்றி முழக்கஞ் செய்தன.அமைதியை விழையும் சோவியத் மக்கள் மேல் திணிக்கப்பட்ட, மகத்தான தேசபக்தப் போர் எதைக் காட்டிற்று? சோவியத் நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களிடையே, சிதைக்க முடியாத ஒற்றுமை, உருவாகியிருந்ததையும் சமதர்மக் கோட்பாட்டின் மேல் சோவியத் மக்கள் ஆழமான பற்றுக் கொண்டிருந்ததையும் துலாம்பரமாகக் காட்டிற்று.சோவியத் படைகளுக்கும் பிரிட்டிஷ் அரசின் ஆணைப்படி இயங்கிய இந்தியப் படைகளுக்குமிடையே இருசார், நல்லெண்ணம் வளர்வதற்கு வாய்ப்பளித்த ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம். ஆயிரக்கணக்கான இந்திய சிப்பாய்கள், பொறியாளர்கள், வாகனமோட்டிகள் ஆகியோர் இராக், ஈரான் வழியாக, சோவியத் படைகளுக்கு வேண்டிய பொருள்களை இருபத்திநான்கு மணி நேரமும் மிக சோதனையான சூழலிலும் கொண்டு சென்றபடியே இருந்தனர். அவர்கள், தங்கள் சோவியத் சகாக்களோடு தொடர்பு கொள்ளவும் பழகவும் புரிந்து கொள்ளவும் அவர்களுடைய வாழ்வு, போராட்டம் பற்றி நேரடியாகவே அறிந்து கொள்ளவும் அப்போரினால் வாய்ப்பு ஏற்பட்டது. - இந்திய சோவியத் நட்புறவுபயன்மிகு பத்தாண்டுகள் சோவியத் செஞ்சேனையில் ஸ்டாலின் உருவாக்கிய ‘‘எளிய பச்சை மனிதர்கள்’’ என்ற பெயரிலான படைப்பிரிவினர். http://epaper.theekkathir.org/