SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Sunday, March 5, 2017

வடகாட்டிலும் போராட்டம் வெடித்தது ****************** புதுக்கோட்டை, மார்ச் 5- ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மேலும், நெடுவாசல் அருகில் முக்கிய ஊரான வடகாட்டிலும் ஞாயிறு முதல் போராட்டம் வெடித்தது.திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளிவராமல் போராட்டத்தை ஒருபோதும்கைவிட முடியாது என போராட்டக் காரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டக்களத்தை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சனிக்கிழமை கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருபிரிவினரிடம் மாவட்ட நிர்வாகம் பெயருக்கு ஒருஒப்பந்தத்தைப் போட்டு போராட் டத்தை கைவிடச் செய்தது.இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வரும்9-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அதுவரை போராட்டத்தைகைவிடும்படி போராட்டக்குழுவினரிடம் கெஞ்சினார். போராட்டக்குழுவினரோ மத்திய அரசு திட்டத் தைக் கைவிடுவதாக உறுதியாக தெரிவிக்காதவரை எங்களின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் முக்கிய ஊரான வடகாட்டிலும் ஞாயிறன்று போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் த.புஷ்பராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத் தலைவர் எம்.அசோகன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் போராட் டத்தை ஆதரித்துப் பேசினர். நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவின் கிராமியப் பாடல் களும் போராட்டக்காரர்களை உற் தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/