SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கோரி சிபிஎம் பொதுக்கூட்டம் எட்டயபுரம், மார்ச் 8-விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும் பாகுபாடின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சிபிஎம் சார்பில் எட்டயபுரத்தில் பொதுக்கூட்டம்நடந்தது.எட்டயபுரம் சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ். திருநாவுக்கரசு, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ஆகியோர் பேசினர். நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் பயிரிட்ட நிலங்கள் எல்லாம் வறட்சியால் வறண்டு போயின. இந்நிலையில் தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 3ஆயிரம்நிவாரணம் அறிவித்தது. தற்போதுவிவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 5 ஏக்கருக்குமட்டுமே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயத்தை முற்றிலும் கைவிடும் நிலைக்கு அரசே தள்ளி உள்ளது. எனவே விவசாயிகளுக்கு நஷ்டத்திலிருந்து ஓரளவு விடுபடுவதற்காகவாவது விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும்நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் , கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/