SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

யார் அம்மா? சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. மற்ற மூவருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் என்றால், ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவரைத்தான் ‘அம்மா’ என்கிறார்கள். ஊழல் செய்தவரின் பெயரால் ‘அம்மா’ ஆட்சி நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ், தீபா என ஆளாளுக்கு கூறுகின்றனர். மறைமுகமாக ஊழல் ஆட்சி நடைபெறும் என்கிறார்கள்.மற்றொரு அம்மா இருக்கிறார். மாதர் சங்கத்தை நிறுவிய தலைவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காக மத்திய அரசு தாமிர பட்டயம், பென்சன் வழங்க முன்வந்தது. ‘‘அரசின் வெகுமதிக்காக போராடவில்லை, நாட்டின் விடுதலைக்காக போராடினோம்’’ என்று கூறி அவற்றை மறுத்தவர். இத்தகைய தியாகியான அவரை கவுரவிக்கும் வகையில் மாதர் சங்க மாநாட்டில் ஒரு பேனர் வைத்தோம். அதைப்பார்த்து கொந்தளித்துப்போன அவர், என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள் என்று குமுறினார். அவர்தான் கே.பி.ஜானகியம்மாள். ஊழல் செய்தவர் அம்மாவா? கே.பி.ஜானகியம்மாள் அம்மாவா?உ.வாசுகி பேசியதிலிருந்து...