SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 11, 2017

ஈஷா யோகா மையத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் தலித் -பழங்குடியினரின் நிலங்கள் ஆக்கிரமிப்பு திருநெல்வேலி மார்ச் 11- வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள தலித் பழங்குடியின மக்களின் நிலத்தை மீட்டு அவர்களிடம் வழங்க வேண்டும்; ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாளை. ஜவஹர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஆர். கருணாநிதி தலைமைவகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஆர்.கிருஷ்ணன், தமுஎகச மாவட்டச்செயலாளர் இரா. நாறும்பூநாதன், சிபிஎம் பாளை. தாலுகாச் செயலாளர் ஸ்ரீராம், நெல்லை தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பூ.கோபாலன், ஆர்.எஸ்.துரைராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டன http://epaper.theekkathir.org/