This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 13, 2017
விவசாயிகள் சேறுபூசி போராட்டம் வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் காவல்துறை நெருக்கடி புதுக்கோட்டை, மார்ச்13-மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நல்லாண்டார்கொல்லை பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.நல்லாண்டார்கொல்லையில் 26-வது நாளாக திங்களன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உடல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொண்டு, எங்கள் வாழ்வை நாசமாக்க வந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என முழக்கமிட்டபடி எரிவாயுவிற்காக அமைக்கப்பட்ட குழாயைச் சுற்றிநின்று போராட்டம் நடத்தினர். மேலும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.வடகாட்டில் 9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல காய்கறிகளுடனும், மரக்கன்றுகளுடனும் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் உயிருக்கு உயிராக நேசித்த மண்ணையும், மரம் செடிகொடிகளையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர்களின் முகத்தில் தெரிகிறது. இந்த அச்சமே தங்களது சொந்த வேலைகளை விட்டு தினந்தோறும் அவர்களை போராட்டக்களத்திற்கு இழுத்து வருகிறது.இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் சற்றும் இறங்கிவராத மத்திய அரசு மீது அவர்களுக்கு மேலும் மேலும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. எது நடந்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்படாதுஎன மத்திய அரசு அறிவிக்கும்வரை தங்களது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்து வருகின்றனர். நெருக்கடி கொடுக்கும் போலீசார் இந்தப் போராட்டம் தொடர்வது மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் உளவுத்துறை ஈடுபட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஒரு கட்டத்தில் தடியடி நடத்தப் போவதாகவும் போலீசார் தகவல்களை உலவவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல் பகுதிகளில் ஒருவிதமான பதற்றமான சூழல் நிலவிவருகிறது. (ந.நி) http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
