SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி,மார்ச் 16-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் சிஐடியு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லை மண்டலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,பருப்பு பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை 100சதவீதம் வழங்கிடுக, காலி பணியிடங்களை நிரப்பிடுக,கொள்முதல் ஊழியர்களை நிரந்தரப்படுத்திடுக, சுமை பணி தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியை வழங்கிடுக,பொது விநியோகத்தை சீரழிக்க கூடாது, கறுப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் மக்களை சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பாளை.யில் சிஐடியு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் சி.பீட்டர் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். சங்க மாநில துணைத் தலைவர் ஏ.சின்னத்துரை,சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.வண்ணமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மண்டல பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.