SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

அம்பாசமுத்திரத்தில் சிஐடியு பீடித் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி,மார்ச் 16-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிஐடியு பீடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.கணேஷ் பீடி கம்பெனி நிர்வாகம்பீடி தொழிலாளர்களின் சம்பளத்தை பீடிதொழிலாளர்களின் கைகளில் நேரிடையாக வழங்க வேண்டும்,சட்டவிரோத கதவடைப்புக்கான சம்பளத்தை நீதிமன்ற தீர்ப்பின் படி வழங்கிடுக,மட்டமான மற்றும் கழிவு இலைகளை வழங்காமல் 1000 பீடி சுற்ற 700கிராம் தரமான இலைகளை வழங்கிட வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தப்படி முதல் அரியர்ஸூடன் ஒரு தொழிலாளிக்கு ரூ.6,400 தொகையை வழங்கிட வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டாரதுணை தலைவர் பூங்கொடி தலைமைதாங்கினார் ,நிர்வாகிகள் முத்துமாரி,லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை சிஐடியு பீடிதொழிலாளர் சங்க நிர்வாகி கே.மாரிச்செல்வம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் சுடலைமணி, சுரேஷ்,ஜெகதீஸ் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.