This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Friday, March 17, 2017
டெங்கு, பன்றிக்காய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை தேவை: மாநகராட்சி அலுவலகம் முன் வாலிபர் சங்கம் ஆர்ப்பாடடம் தூத்துக்குடி,மார்ச் 16-தூத்துக்குடியில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூறுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலருக்கு பன்றிக் காய்ச்சல்அறிகுறி உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. புதனன்று மட்டும்40க்கும் மேற்பட்டோர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 10க்கும் மேற்பட்டகுழந்தைகள்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு, பன்றிக் காய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகர செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அகற்றிடவும், கொசு மருந்துகளை அனைத்து தெருக்களிலும் அடித்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி அண்ணாநகர், பிரையண்ட் நகர், லெவிஞ்சிபுரம், லோகியாநகர், பி அன் டி காலனி, கோக்கூர், முத்தம்மாள் காலனி, அம்பேத்கர் நகர் பகுதியில் கூடுதலாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. உடனடியாக தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாநகரக்குழு, கிளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
