This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, March 15, 2017
நல்முத்தை இழந்துவிட்டோம்! இந்திய உயர் கல்வி நிலையங்களில் நிலவிவந்த பாரபட்சமான அணுகுமுறை மீண்டும் தலைவிரித்தாட துவங்கியிருக்கிறது. சமத்துவம், சமநீதிகோரியதற்காக ரோஹித் வெமுலாவை தொடர்ந்து, தற்போது சேலம் தலித் மாணவர் முத்துகிருஷ்ணனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கிறது. இது உயர் கல்வி நிலையங்களா? சமத்துவம் பேசும்சாமானியர்களின் உயிர் பறிப்பு நிலையங்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மத்தியில் மோடி தலைமையிலான பாஜகஆட்சி பொறுப்பேற்ற பின்னர், மத்திய பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு திட்டமிட்டு விரிவுபடுத்தப்படுகிறது. குறிப்பாக ஏபிவிபி என்ற பாஜகவின் மாணவர் அமைப்பு மூலம் கல்வி நிலையங்களை காவி நிலையங்களாக்கும் முயற்சி தொடர்கிறது. இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் மோடி அரசு திட்டமிட்டு மநுநீதியை போதிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களையே துணைவேந்தர்களாக நியமித்துவருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தராக இருக்கும் ஜகதீஸ்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்பால்பயிற்று விக்கப்பட்டவரே. ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் மதவெறிக்கெதிராக குரல் கொடுத்து வந்த நஜீப் என்ற மாணவர் காணாமல் போயிருக்கிறார். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்த பின்னரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதே போல் தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த திருப்பூர் மாணவர் சரவணன்மர்மமான முறையில் மரணித்தார். அதனை தற்கொலை என்று காவல்துறை அடித்து கூறியது.எய்ம்ஸ் நிர்வாகமும், சரவணனின் மரணத்தை தொடர்ந்து அந்த காலியிடத்தை உயர் வகுப்பை சேர்ந்த ஒரு மாணவிக்கு ஒதுக்கியது. ஆனால் சரவணனின் மருத்துவ உடற்கூறாய்வில் ஊசிமூலம் நச்சு மருந்து ஏற்றப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. எனினும் இதுவரைசரவணனின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. மத்திய அரசின் இது போன்ற அக்கறையற்ற போக்கு உயர் கல்வி நிறுவனங்களில் அடித்தட்டுமாணவர்களுக்கு இடம் கிடையாது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறதோ என்ற சந்தேகம்தான் எழுகிறது. காரணம் ஜேஎன்யுவின் சமீபத்திய மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பாதகமாக பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு என்கிற என்ற இலக்கை அடைந்து விட்டோம். சமூகத்தில் பொருளாதாரத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்ற இலக்கை நாம் அடையவில்லை. இந்த முரண்பாடை களைந்தால் தான் இந்தியாவிற்கு நன்மை என்று 1949ல் டாக்டர் அம்பேத்கர் தெரிவித்தார். ஆனால் இன்றுவரை ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்பது மறுக்கப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடுதான் உயர்கல்வி நிலையங்களில் இன்று நடைபெறும் வன்கொடுமைகளுக்கும், மாணவர்களின் தற்கொலைகளுக்கும் அடிப்படைக் காரணம். முத்துகிருஷ்ணனின் மரண பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு மத்தியஅரசு உத்தரவிட வேண்டும். மரணத்திற்கு காரணமாக இருந்த தனி நபர் மற்றும் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னணியில் இருக்கும் சாதியத்தின் சல்லிவேரையும் அகற்றியாக வேண்டும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
