This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Sunday, March 5, 2017
‘இஸ்க்ரா’விலிருந்து விலகினார் லெனின்! புரட்சிப் பெருநதி- சு.பொ.அகத்தியலிங்கம் ******************************** "ஓரடி முன்னே போனால் ஈரடி பின்னே போக வேண்டியிருக்கிறது. இவ்வாறு தனி மனித வாழ்விலும் நடக்கிறது; தேசங்களின் வரலாற்றிலும் நடக்கிறது; கட்சியின் வளர்ச்சியிலும் நடக்கிறது. எனினும் புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கைகளும், பாட்டாளி வர்க்க ஸ்தாபனமும், கட்சி கட்டுப்பாடும் முழுவெற்றி அடையும் என்பதில் ஒரு கணம் சந்தேகம் கொண்டாலும் அது மிக மோசமான கோழைத்தனமாக இருக்கும். பின்னடைவுகள் இருந்தாலும் தொடர்ந்து போராட வேண்டும்."இந்த வரிகளை வலியின்றி எழுதியிருக்க முடியுமோ ? லெனின் எழுத நேர்ந்த சூழலே தனி. ரகசிய உள்ளறை அடங்கிய பெட்டிகளிலும், புத்தகங்களின் அட்டைகளாகவும், மேல் கோட்டுகளின் ரகசிய உள் ஜேப்பிலும் மறைத்து இஸ்க்ரா ரஷ்யாவுக்குள் கொண்டுவரப்பட்டது. பத்திரிகை நல்ல வரவேற்பைப் பெற்றது. கசங்கி பிய்ந்து போகும்வரை மாறி மாறி பலரால் படிக்கப்பட்டன தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள் நிலவும் சித்தாந்த ரீதியான சீர்குலைவுகளை அம்பலப்படுத்தவும்; புரட்சிகரத் தத்துவத்தை முன்னெடுக்கவும் ‘இஸ்க்ரா’ ஆயுதமானது.கட்சியின் இரண்டாவது மாநாட்டில் விவாதிக்க வேண்டியவை குறித்த தயாரிப்பிலும் - கட்சித் திட்டத்தை உருவாக்குவதிலும்; கட்சி ஸ்தாபனத்துக்கு சரியான வடிவம் கொடுப்பதிலும் இஸ்க்ரா ஆற்றிய பணி அதிகம்.வரலாற்றாசிரியர் யூ.க்ளிமோவ் கூறுகிறார் , "இஸ்க்ராவை விநியோகம் செய்தவர்கள் – அந்தப் பத்திரிகைக்குத் தேவையான தகவல்களை அளித்தனர் .அவர்களே சுற்றுக்கும் விட்டனர் . எதிர்காலத்தில் கட்சியின் மையமாக விளங்கிய முழுநேர புரட்சியாளர்களின் முக்கிய அங்கமாக விளங்கியோரும் அவர்களே."ரஷ்யாவில் முதலாளித்துவம் வளரவில்லை என்பபோருக்கு பதிலடியாக "ரஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சி" என்ற நூல் கிராமப்புற விவசாயிகளை திரட்ட, "கிராமப்புற ஏழைகளுக்காக" எனும் நூல் - என லெனின் எழுதிய ஒவ்வொன்றும் குறிப்பான பணியைச் செய்தது.லெனின் எழுதிய "என்ன செய்ய வேண்டும்?" புத்தகம் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் கூடியது. அதற்குள் இந்நூல் பரவலாக கொண்டு செல்லப்பட்டு பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது. "பொருளாதாரவாதி" என்ற வார்த்தையே வெறுக்கத்தக்கதாய் மாறிப்போனது; சந்தர்ப்பவாதப் போக்குகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ரஷ்ய சமூக – ஜனநாயக கட்சியின் 2 ஆவது மாநாடு 1903 ஜூலை 17 இல் பிரெஸ்செல்ஸில் கூடியது. போலீஸ் மோப்பம் பிடித்ததால் இடம் பாதியில் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 10 இல் லண்டனில் முடிவுற்றது.மாநாட்டில் இஸ்க்ராவின் கை ஓங்கியிருப்பினும் ஆதரித்தவர்களில் பலர் லெனின் போதித்ததை உள்வாங்கியவராக இல்லை. இஸ்க்ரா முன் மொழிந்த திட்டத்தை மாநாடு ஏற்றாலும்; ஸ்தாபனம் குறித்த பார்வையில் சறுக்கல் ஏற்பட்டது. "கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் பங்கு கொண்டு, தன் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை நிதியாகவும் அளிப்பவரே கட்சி உறுப்பினராவர்" என்பது லெனின் வாதம். "தனிப்பட்ட உதவி செய்தாலே போதும்" என்பது மார்ட்டோவ் வாதம் . மாநாடு மார்ட்டோ சொன்னதை ஏற்றுக் கொண்டது .மாநாட்டில் லெனின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக இருந்ததால் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். ரஷ்ய மொழியில் அதற்கு பெரும்பான்மை என்று பொருள். எதிர்ப்பாளர்கள் சிறுபான்மை எனும் பொருள்படும் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்.தோல்வியை மென்ஷ்விக்குகள் ஏற்கவில்லை. இஸ்க்ராவின் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட மார்ட்டோவ் ஒத்துழைக்கவில்லை. பிளக்கனோவும் லெனினும் 46 முதல் 51 வரையிலான இதழ்களைக் கொண்டுவந்தனர். பிளக்கனோவ் சந்தர்ப்பவாத நிலை எடுத்தார். மாநாடு நிராகரித்த பழைய ஆசிரியர் குழு உறுப்பினர்களை நியமித்தார். சுருங்கச் சொன்னால் இஸ்க்ராவை மென்ஷ்விக்குகள் கைப்பற்றினர். "ஆசிரியர் குழுவில் லெனின் இல்லை" என அறிவித்துவிடுமாறு 1903 நவம்பர் முதல் நாள் லெனின் கடிதம் எழுதிவிட்டு இஸ்க்ராவுடன் தன் உறவை முறித்துக் கொண்டார். இஸ்க்ரா மென்ஷ்விக்குகள் பத்திரிகையானது.இஸ்க்ராவிலிருந்து வெளியேறியபின் லெனினுக்கு பதில் சொல்லும் விதத்தில் "செய்யக் கூடாதது என்ன?" என கட்டுரையை வெளியிட்டார் பிளக்கனோவ் . "என்ன செய்ய வேண்டும்?" நூலுக்கு பதில் என்பதால் தலைப்பும் இப்படி சூட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் தமது கருத்தை தோழர்களுக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என லெனின் துடித்தார். 1904 பிப்ரவரி முதல் மே வரை கடுமையாக உழைத்து உருவாக்கிய நூலே "ஓரடி முன்னே! ஈரடி பின்னே". 180 பக்கங்கள் கொண்ட இந்நூலில் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சிப் போராட்டத்தில் தமது தரப்பு நியாயத்தை – சித்தாந்த, ஸ்தாபனக் கூறுகளை நுட்பமாக எழுதினார். ஜெனீவாவில் நூல் வெளியிடப்பட்டது.கட்சியின் மத்தியக் குழு இந்நூலை நிராகரித்தது. இதன் விநியோகத்தைத் தடுக்க பிளக்கனோவ் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்நூல் மிக வேகமாகப் பரவியது. லெனின் வாதத்தில் உண்மை ஒளிர்வதை கட்சி அணியில் பெரும்பான்மையோர் உணர்ந்து உள்வாங்கினர்.லெனின் வெளிநாட்டில் சோம்பிக் கிடக்கவில்லை. நிக்கோலாய் பவுமான், லித்வீன், பப்ரோவ்ஸ்கயா என நம்பகமான தோழர்களுக்கு பல பொறுப்புகளைக் கொடுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்."மார்க்சிய ஞானம் முழுமையாக இல்லாத நான், முழு நேர ஊழியராக ஆக முடியுமா?" என பப்ரோவ்ஸ்கயா கேட்க லெனின் சொன்னார்,"முழுநேரப் புரட்சியாளர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் உரிமை தன்னலங் கருதாது கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எவரொருவருக்கும் உண்டு. எவருடைய கட்சி வாழ்க்கையும் சொந்த வாழ்க்கையும் ஒன்றாக இணைந்து விடுகிறதோ அவருக்கு அந்த உரிமை உண்டு. புரட்சியாளர்களின் வட்டத்தை தலைவர்களின் சிறுபரிவாரமாகச் சுருக்கிவிடக்கூடாது. பொதுமக்களுடன் நேரடித் தொடர்புடைய சோர்வற்ற நிரந்தரப் பணியாளர்கள் தேவை."கட்சியை வெறுமனே அறிவுஜீவிகள் கட்சியாக பார்க்கும் ஊனப்பார்வையை லெனின் எதிர்த்தார். அறிவுஜீவிகளின் தேவையை மறுக்கவில்லை. மேலே பதில் சொன்னாரே அத்தகைய ஊழியர்களின் அணிவகுப்பாக பார்த்தார். மார்க்சிய வரலாற்றில் "ஓரடி முன்னே, ஈரடி பின்னே" வலுவான ஸ்தாபனத்தைக் கட்டியமைக்க பாதை போட்டது; மூன்றாவது மாநாட்டை நோக்கி தன் பார்வையை செயல்பாட்டைத் திருப்பலானார். புரட்சி தொடரும்… http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
