SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

பாதுகாப்பற்ற ரயில் பயண பட்டியலில் முந்தப் போட்டியா? இந்தியாவில் தொடர் வண்டிகள் சம்பந்தப்படும் விபத்துகளும் கூட தொடர் நிகழ்வுகளாகியிருக்கின்றன. கடந்த எட்டாண்டுகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை 2 பேர் ரயில் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இதில் 4.7 விழுக்காடுவிபத்துகள் நாசவேலைகளால் ஏற்படுவதாகவும் 44 விழுக்காடு விபத்துக்கள் மனிதத் தவறுகளால் ஏற்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.2000ல் அமைக்கப்பட்ட எச்.ஆர்.கண்ணா குழு விரிவாக ஆய்வு செய்து, விபத்துகளைத் தடுக்க ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.17,000 ஆயிரம்கோடி தேவை என்று கூறியது. இதில் ரூ.12,000 கோடியை மத்திய அரசு தந்தது. மீதமுள்ள ரூ. 5,000 கோடி செஸ் வரி மூலமாக திரட்டப்பட்டு, சிலகுறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் விபத்துகளும் கணிசமாகக் குறைந்து பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆனால் தொடர்ந்து ரயில் பாதைகள் விரிவாக்கம், நகர்மயமாக்கல் போன்ற காரணங்களால் ரயில் பயணத்தை நாடும்மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பெரும் விபத்துகளின்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்த பின்னணியில் 2012ல் அனில் ககோட்கர் தலைமையில் மற்றொரு குழுஅமைக்கப்பட்டது. அக்குழு ரயில் பாதுகாப்புக்கு 5 ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதிதேவை என்று பரிந்துரைத்தது. அரசோ, 75விழுக்காடு நிதியை ரயில்வே தானே திரட்டிக்கொள்ள வேண்டும் என்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும்போது பணம் கிடைத்தால் ரூ.5,000 கோடியை தனது பங்காகத்தருவதாக கூறுகிறது. அப்போதே பாதுகாப்புகேள்விக்குறியாக வளையத் தொடங்கிவிட்டது.இதில் ஊழியர் பற்றாக்குறை என்ற பெரும் பிரச்சனையும் இருப்பதை ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருபுறம் ரயில்வே கேட்கும் நிதியை ஒதுக்க மறுக்கும் மத்திய அரசு, மறுபுறம் காலிப் பணியிடங்களை நிரப்பவும் மறுக்கிறது. விபத்து ஏற்பட்டால் மனிதத் தவறு என்று ஊழியர்கள் மீது பழிபோடுகிறது. அண்மைக்காலமாக, தீவிரவாதிகள் சதி என்றும் எடுத்த எடுப்பிலேயே சொல்லப்படுகிறது. ரயில் சேவைகளும் புதிய வழித்தடங்களும் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் ரயில்வேயில், கொஞ்சநஞ்சமல்ல, சுமார் 1,27,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில்70 விழுக்காடு பணியிடங்கள் தடப்பராமரிப்போடு தொடர்புள்ளவை. இருக்கும் ஊழியர்கள்இரட்டிப்புப் பணிச்சுமையோடு பணிபுரிகிறார்கள்.ரயில்வே நிர்வாகமும், அதை இயக்கிடும் மத்திய அரசும் ஆட்குறைப்புக் கொள்கையில் பிடிவாதமாக இருக்க, அதற்கு பாதுகாப்பு பலியாகிறது, பயணிகள் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிடுகிறது, பலர் ஊனமடையவேண்டியதாகிறது. அதிவேக ரயில்கள் பற்றியெல்லாம் பேசுகிற மத்திய ஆட்சியாளர்கள், இனியேனும் பாதுகாப்பான பயணம் பற்றி அக்கறைப்படட்டும். தனியார்மயமாக்கல் நோக்கங்களைக் கைவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பட்டும். இல்லையேல் ரயில் பயணங்களையும் பயணிகளையும் பாதுகாக்கத் தவறிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும். http://epaper.theekkathir.org/