This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Friday, March 17, 2017
இதற்குத்தான் காத்திருந்தார்கள் இந்த பாலகுமாரர்கள்! ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களிலும், பேரங்களின் அடிப்படையில் கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆட்சியமைத்துவிட்டது பாஜக. உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களிலேயே கூடஅனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் அந்தக்கட்சி பெற்றுவிடவில்லை. சுமார் 39 சதவீத வாக்குகளோடும், தற்போதைய தேர்தல் முறையின் வசதியோடும்தான் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முடிவுகளைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் மத்தியஅரசின் ஒரு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கேட்டுக்கொண்டிருக்கிறார். எந்த நடவடிக்கைக்கு அவர் இப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோருகிறார்? தொழிலாளர் துறை சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இனிமேல் வேகம் கொடுக்கப்படும்; அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார். 245உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது பாஜக-வினர் 74 பேர்இருக்கிறார்கள்.இத்தேர்தல் முடிவுகளால் மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் அதிகரிக்கும் என்ற பின்னணியில் அமைச்சர் இப்படிக்கூறியிருக்கிறார். சீர்திருத்தங்கள் என தொழிலாளர்களுக்கு இணக்கமான பணிச்சூழல்கள், தங்கள் தேவைகளுக்காக வாதாடுவதற்கான ஜனநாயக உரிமைகள், எத்தகைய பணியானாலும் மரியாதையாக நடத்தப்படுதல், ஊதிய இடைவெளிகள் குறைப்பு, பணி நிரந்தரம் போன்றவற்றைஅவர் குறிப்பிடவில்லை.தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்கள் ஆட்குறைப்புச் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத்தான் அவர் ‘சீர்திருத்தங்கள்’ என்கிறார். ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியிருப்பது ஒருகருத்தாக அல்ல; அடுத்த வாரம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் ஒன்று கூடவிருக்கிறது. அதில், புதிய தொழிலாளர் சட்டம் இறுதிப்படுத்தப்பட உள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கட்டாயமாக்குவது குறித்து ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்தின் பலனாக இம்முடிவு எட்டப்பட்டிருப்பதைத் தொழிலாளர்கள் கொண்டாடுவதற்கு முன்பாகவே, ஆட்குறைப்பை எளிதாக்குவதற்கான ஏற்பாட்டை, நிர்வாகங்களுக்கு செய்துகொடுக்க முன்வருகிறது மோடி அரசு.பெரும்பாலான நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை புகுத்தப்பட்டு, அவர்களது பல உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இருக்கிற நிரந்தரத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்குத் தற்போதைய சட்டங்கள் குறுக்கே நிற்பதாக கார்ப்பரேட் கனவான்கள்புலம்புகிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பைநிறைவேற்றுவது உட்பட பல்வேறு மக்கள்விரோத நடவடிக்கைகளைத் தற்போதுமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளால் தடுக்க முடிந்திருக்கிறது. அந்தத் தடை இனி இருக்காது என்ற களிப்பில் பாஜக அரசும் கார்ப்பரேட் இல்லங்களும் இருப்பது வெளிப்படை. உழைப்பாளி மக்களும் தொழிற்சங்கங்களும் இந்தத் தாக்குதலை முறியடிக்கத் தயாராக வேண்டும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
