SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 7, 2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் மார்ச் 6 அன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக 7 மீனவர்கள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் தனுஷ் கோடிக்கும், கச்சத் தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித முன் எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியினால் அவர்களை நோக்கிச் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில்தங்கச்சிமடத்தைச் சார்ந்த பி.கே.பிரிட்ஜோ என்பவர் படுகாயமுற்று அதே இடத்திலேயே மரணமடைந்துள்ளார். ஜெரோன் என்னும் மீனவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிராயுதபாணியான தமிழக மீனவர்களை எவ்வித காரணமும் இன்றி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த இலங்கை கடற் படையின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை தடுக்க மத்திய அரசு உருப்படியான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணம் ஆகும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடிவரும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மீனவர்கள் போராடி வரும் நிலையில் இத்தகைய கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தற் போது இப்படுகொலையையும், தாக்குதலையும் கண்டித்து மீனவர்கள் தங்கச்சி மடம் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், படுகாயமடைந்த மீனவருக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிற போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக உள் ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுத்திட மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. http://epaper.theekkathir.org/