This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Friday, March 17, 2017
தொடர் வேலைநிறுத்தம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் எச்சரிக்கை சென்னை, மார்ச் 17- ஏப்ரல் மாதத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துக் கழகதொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளியன்று (மார்ச் 17) நடைபெற்றது. கூட்டத்திற்குபின்னர் தொமுச பொருளாளர் நடராசன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்ட தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியைப் போக்க அரசு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை ஒதுக்கி ஈடுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் தீவிரமான தொடர்வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் ஏப்ரல் மாதத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் இருந்து என்பதை மார்ச் இறுதியில் அறிவிப்போம். மார்ச் 21 முதல்மார்ச் 30 வரை அனைத்து கழகங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுநடைபெறும். ஏப்ரல் முதல் வாரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தவுள்ளோம். போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கக் கோரியும் சனிக்கிழமை காலை தமிழகம் முழுவதும் அனைத்துப் பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு, சட்டப்பேரவையில் திருத்தமதிப்பீடாகவோ, துணை மதிப்பீடாகவோ நிதியை ஒதுக்கும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இச்சந்திப்பின் போது அனைத்துசங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர். தொழிலாளர்களிடம் பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட 5,200 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றும் அதனை பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும் என்றும் முதலமைச்சர், நிதியமைச்சர், நிதித்துறை செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். 13வது ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்கும் போதும் கூறியிருந்தோம். ஆனால் அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை. இயங்கிக் கொண்டிருக்கின்ற 23 ஆயிரம் பேருந்துகளில் 17 ஆயிரம் பேருந்துகள் இயக்குவதற்கு லாயக்கற்ற பழைய பேருந்துகள். அவற்றை மாற்ற வேண்டும். கடந்த ஆண்டு 2 ஆயிரம் புதிய பேருந்துகளும், 100 மினி பேருந்துகளும் வாங்க 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணத்தை செலவு செய்யாமல், இந்த ஆண்டு 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து மொத்தமே 2,100 பேருந்துகள் மட்டும் என்பது தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இது போக்குவரத்துக் கழகத்தை சீரழிக்கும் ஏற்பாடாகும். தினசரி 94 லட்சம் கி.மீ வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் 12,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக சராசரியாக ஒரு கிலோ மீட்டருக்கு 7 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. நாளொன்றுக்கு 6 கோடியே 58 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும். வருடத்திற்கு 2400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதனை ஈடு செய்ய எந்த நிதியும் அரசு ஒதுக்கவில்லை. 203 பணிமனைகளை அடமானம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளனர். கடன்களை அடைக்கவோ, வட்டி செலவினத்தைக் குறைக்கவோ நிதி ஒதுக்கவில்லை. டீசல் விலை 41 ரூபாய்க்கு மேல் உயரும் தொகை முழுவதையும் ஈடு செய்ய அரசு நிதியளிக்க வேண்டும்; ஆனால் 1400 கோடி ரூபாய் தேவைக்கு வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேர், ஓய்வுகால பலன்களைப் பெறவும், ஓய்வூதியம் கேட்டும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்து, அவர்களுக்காக போராடுவது என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
